tag:blogger.com,1999:blog-45098316930985834472024-03-05T09:32:33.193-08:00அஸ்ஸலாமு அழைக்கும்(நபியே?!) நீர் கூறுவீராக: இறைவன் அவன் ஒருவனே. இறைவன் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை, (எவராலும்)பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. - திருக்குர்ஆன் - 112:1-4ABDUL RAHMANhttp://www.blogger.com/profile/17272066359885172059noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-4509831693098583447.post-72968194746208665332012-11-24T07:10:00.001-08:002012-11-24T07:10:24.813-08:00இஸ்லாமிய தண்டனை வேண்டும்
· الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِنْهُمَا مِائَةَ جَلْدَةٍ وَلَا تَأْخُذْكُمْ بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللَّهِ إِنْ كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِنْ الْمُؤْمِنِينَ
· وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا جَزَاءً بِمَا كَسَبَا نَكَالًا مِنْ اللَّهِ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ
· தமிழகத்தில் ஆள் கடத்தி பணம் பறித்தல் அதிகரித்துவருகிறது.
· கோவையில் இரு சிறுவர்கள் பலி – சிறுமி முஷ்கின்,சிறுவன் ரித்திக்
· சென்னையில் ஒரு சிறுவன் கடத்தில்
· அப்பாவிச் சிறுவர்கள் அரக்கத்தனமாக கொலைசெய்யப்பட்டதை கண்டு, கோவை நகரமும் தமிழகமும்பத்றிப்போய் விட்டது.
· குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை – உடனடியாகவழங்கப் பட வேண்டும்
· மக்களின் ஆவேசம் - அரபு நாட்டு தண்டனைகொடுக்கனும்.
· அது அரபு நாட்டு தண்டனை அல்ல. இஸ்லாமியதண்டனை.
· இஸ்லாமிய தண்டனையை போலியானமனிதாபிமானிகள் குறை கூறுவதுண்டு
· சில மாதங்களுக்கு முன் தமிழகத்தின் ஒரு மூத்த்முஸ்லிம் எழுத்தாளர்
· கல்லெறிந்து கொல்லுதல் போன்ற தண்டனைகளைநாகரீகமே அல்ல என்றார். ஒரு படி மேலே சென்றுஇஸ்லாம் அப்படிச் சொல்லியிருக்காது என்றும் பேசினார்.
· அவருடைய தவறை திருத்திய நான் இஸ்லாமியசட்ட்த்தில் அத்தகைய தண்டனை உண்டு என்றுவிளக்கினேன்.
· கடுமையான தண்டனைகளுக்கான நிபந்தனைகளும்கடுமையானவைதான் என்று விளக்கினேன்.
· உதாரணத்திற்கு விபச்சாரம் நான்குபேர் நேரடியாகப்பார்க்கும் அளவு நடை பெற்றால்தான் கல்லெறிதண்டனை.
· என்ன இருந்தாலும் இந்த தண்டனை டூ மச், அன்றையபழக்க வழக்கத்திற்கு இது பொருந்தலாம். இந்த நாகரீகஉலகிற்கு பொருந்தாது என்றார்.
· (சிறிது நேரம் பேச்சை வேறு திசையில் செலுத்தியபிறகு)
· ஒரு ரவுடி பட்டப் பகலில் நான்குபேர் பார்க்க ஒருபெண்ணை கற்பழித்தால் என்ன செய்வது என்றுகேட்டேன். அவரே சொன்னார் கல்லால அடிச்சு கொன்றவேண்டியது தான்.
· இப்போது கோவை நகர மக்கள் சொல்கிறார்கள் :குழந்தைகளை கற்பழித்து கொன்றவனை எங்களிடம்கொடுங்கள் அவனை அடித்தே கொல்ல வேண்டும்.
· நாம் விரும்புகிற போது அந்த தண்டனை சரி- மற்றசூழ்நிலையில் சரியல்ல என்ற கண்ணோட்டம்தவறானது.
· அல்லாஹ் பேர்ரறிவாளன் எது கடுமையான் குற்றம்என்பதை அவனைவிட சரியாக யார் கனிக்க முடியும்.
· சில குற்றங்கள் நமக்கு சிம்பிளாக தோன்றினாலும் அதுசிம்பிள் அல்ல.என்வே தான் அல்லாஹ் கடுமையானதண்டனைகளை வழஙகினான்.
பெருமானாரின் காலத்தில் பைத்துல் மாலின் ஒட்டைகையைதிருடி அதன் காவலாளியை கொலை செய்த “உகல்”“உரைனா” குழுவிற்கு மாறுகால் மாறுகை வாங்கப் பட்ட்து.பாலைவன மணலில் வீசப்பட்டார்கள்.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَدِمَ أُنَاسٌ مِنْ عُكْلٍ أَوْ عُرَيْنَةَ فَاجْتَوَوْا الْمَدِينَةَ فَأَمَرَهُمْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلِقَاحٍ وَأَنْ يَشْرَبُوا مِنْ أَبْوَالِهَا وَأَلْبَانِهَا فَانْطَلَقُوا فَلَمَّا صَحُّوا قَتَلُوا رَاعِيَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاسْتَاقُوا النَّعَمَ فَجَاءَ الْخَبَرُ فِي أَوَّلِ النَّهَارِ فَبَعَثَ فِي آثَارِهِمْ فَلَمَّا ارْتَفَعَ النَّهَارُ جِيءَ بِهِمْ فَأَمَرَ فَقَطَعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ وَسُمِرَتْ أَعْيُنُهُمْ وَأُلْقُوا فِي الْحَرَّةِ يَسْتَسْقُونَ فَلَا يُسْقَوْنَ قَالَ أَبُو قِلَابَةَ فَهَؤُلَاءِ سَرَقُوا وَقَتَلُوا وَكَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ وَحَارَبُوا اللَّهَ وَرَسُولَهُ - بخاري 233
காரணம் அவர்களுடைய குற்றம் அத்தகையது. குற்றத்திற்குதகுந்த தண்டனை
இஸ்லாமிய தண்டனைகளுக்குஇரண்டு நோக்கம்
1. ஒன்று தண்டனை جَزَاءً بِمَا كَسَبَا
2. இரண்டு மற்றவர்களுக்கு ஒரு பாடம் نَكَالًا مِنْ اللَّهِ
இது போன்ற குற்றங்களை தடுக்க
· தண்டனைகள் சாமன்யமாக இருக்க்க் கூடாது. இனியாரும் அந்த்க் குற்றத்தை செய்ய பயப்படனும் –
· தணடனை விரைவாக வழங்கப் பட வேண்டும்
Ø கோவை விவசாய கல்லூரி மாணவிகள் சென்றபஸ்ஸுக்கு தீ வைத்து மூன்று மாணவிகளைகொன்றவர்களுக்கு இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை.
Ø ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு
Ø ஈரோட்டை சேர்ந்த முதியவ்ரை சொத்துக்காககட்த்தியதற்காக பதவி பறிக்கப் பட்ட ஒரு முன்னாள்அமைச்சருக்கு மீண்டும் பதவி வழங்கப் பட்டுள்ளது.
· தண்டனை பலரின் முன்னிலையில் வழங்கப் படவேண்டும் -
· وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِنْ الْمُؤْمِنِينَ
· அமெரிக்க டெக்ஸாஸ் மாநில கவர்னர் வெள்ளைமாளிக்க்கு ஒரு கடிதம் எழுதினார். போதைப் பொருள்கட்த்தல்கார்ர்களுக்கு வழங்கப் படும் மரண தணடனையவீடியோவில் பதிவு செய்து மக்களுக்கு காட்ட அனுமதிகோரினார்.
· குற்றவாளிகள் எல்லா நிலையிலும் சமூகம்புறக்கணிக்க வேண்டும்
Ø மாணவிகளை எரித்துக் கொன்ற குற்ற வாளிகளைஅரசியக் கட்சிப் பிரமுகர்கள் சந்திக்கிறார்கள்.அப்படியானால் உனக்கு நாங்கள் இருக்கிறோம் என்றுஊக்கம் தருவதாக ஆகாதா?
· சமய் ஜாதி கட்சி வேறுபாடு பார்க்க்க் கூடாது.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ مَنْ نَصَرَ قَوْمَهُ عَلَى غَيْرِ الْحَقِّ فَهُوَ كَالْبَعِيرِ الَّذِي رُدِّيَ فَهُوَ يُنْزَعُ بِذَنَبِهِ
மேலும் பல நடவடிக்கைகள் அவசியம்
பள்ளி செல்லும் குழந்தைகளை பெற்றோர் கண்காணிப்பது
பள்ளிகள் ரேடியோ ஐடி கார்டு கொடுப்பது – எங்கிருக்கிறார்கள்என்று சிக்னல் கொடுத்து விடும்
கால் தெரிகிற மாதிரி அணியும் யூணிபார்ம்களை ( Pinofore )தவிக்க வேண்டும் – இந்துப் பத்ரிகை நேற்றைய செய்தி pg 2
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article867856.ece <b><b></b></b>ABDUL RAHMANhttp://www.blogger.com/profile/17272066359885172059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4509831693098583447.post-89454331523404134322010-08-05T00:24:00.000-07:002010-08-05T00:27:04.999-07:00இறைவனை நினைவு கூறும் வழிமுறைகள்ஒரு நம்பிக்கையாளர் தன் இலக்கான சுவனத்தை அடைவதற்கு இறைவனை நினைவு கூறுபவராக இருத்தல் அவசியம். அதிலும் ரமலானை அடைய இருக்கும் இந்நேரத்தில் எவ்வாறு நம் அன்றாட வாழ்வில் எவ்வித பாதிப்புமில்லாமல் அதே சமயம் இறை நினைவுடனும் இருப்பது என்பது குறித்து பார்ப்போம்.<br /><br />நமது தனிப்பட்ட வாழ்க்கை, அலுவலக வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை ஆகிய அனைத்தும் எவ்வித பாதிப்புமில்லாமல் அதே சமயம் இறைவனை எந்நேரமும் நினைவு கூறக் கூடியவர்களாகவும் இருப்பது கடினமானதாக தோற்றமளிக்கலாம். ஆனால் அது எளிமையாக இருக்க வேண்டுமானால் கீழ்காணும் நான்கை நாம் முறையாக கடைபிடித்தால் இவ்வுலகும் மறுவுலக வாழ்வும் சிறப்பாக அமையும் என்பது எனது நம்பிக்கை. முயன்று தான் பார்ப்போமே?<br /><br /><span style="font-weight:bold;">1. எப்போதும் என்னை இறைவன் கண்காணித்தவனாக இருக்கிறான்</span><br /><br />நாம் தனியாக இருந்தால் இரண்டாமனாகவும் இரண்டு பேர் இருந்தால் மூன்றாமவனாகவும் அல்லாஹ் இருக்கிறான். நாடி நரம்பை விட சமீபத்தில் இருக்கிறான். நாம் செய்யும் அனைத்து செயல்களையும் பார்ப்பவனாகவும் நாம் பேசும் அனைத்தையும் செவியுறுபவனாகவும் அல்லாஹ் இருக்கிறான். அவன் இருளிலும் பகலிலும் என எல்லா இடங்களிலும் இருப்பவற்றை அறிய கூடியவனாக இருக்கிறான்.<br /><br />ஒரு நாளின் எந்த செயலை செய்ய ஆரம்பிக்கும் போதும் எச்சொல்லை சொல்லும் முன்பும் இதை நினைத்து கொள்ளுங்கள். உங்களுக்கு நீங்களே நினைவூட்டி கொள்ளுங்கள். இந்நினைவு உங்கள் சுவாசமாக மாறும் அளவு இதை உங்கள் மனதில் இருத்தி கொள்ள வேண்டும். ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் உள்ளத்தை தூய்மைபடுத்த சிறந்த வழியை கேட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள் " நீ எங்கே இருந்தாலும் என்ன செய்தாலும் அல்லாஹ் உன்னுடன் இருக்கிறான் என்று நினைத்து கொள்" (திர்மிதி)<br /><br /><span style="font-weight:bold;">2.என்னிடம் இருப்பவை அனைத்தும் இறைவன் அளித்ததே</span><br /><br />நம்மிடம் இருப்பவை அனைத்தும் இறைவன் அளித்த அருட்கொடையே. நாம் மனிதனாக பிறந்தது, முஸ்லீமாக இருப்பது, நம் வாழ்வியல் வசதிகள், நம் அறிவு, ஞானம், பதவி உள்ளிட்ட அனைத்தும் இறைவனின் அருட் கொடையே. எனவே நம்மிடம் இருப்பவைக்கு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த கூடிய அடியானாக இருக்க வேண்டும்.<br /><br />நபி (ஸல்) அவர்கள் இறைவனை புகழ பல துஆக்களை கற்று தந்துள்ளார்கள். அவற்றை நம் வாழ்வின் எல்லா செயல்களிலும் கடைப்பிடிக்க வேண்டும். உதாரணத்திற்கு காலையில் கண் விழித்தாலும் ஏதேனும் உணவு உட்கொண்டாலோ இறைவனுக்கு அல்ஹம்துலில்லாஹ் என்று நன்றி சொல்லக் கூடியவராக இருந்தார்கள்.<br /><br />நாம் நன்றி சொல்லி விட்டோம் என்று திருப்தி ஏற்பட்டால் இந்த ஹதீதை வாசித்து பாருங்கள் " உடம்பில் உள்ள 360 இணைப்புகளுக்காவும் நீங்கள் ஒவ்வாரு இணைப்புக்கும் ஸதகா தினந்தோறும் செய்ய வேண்டும்" என்று நபி (ஸல்) அவர்களின் கூற்றை நாம் புகாரியில் காணலாம். அறிவியலாளர்களின் கூற்று படி நம் இதயம் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 72 தடவை துடிக்கிறது. அத்துணை தடவையும் அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் துடிக்கிறது. அல்லாஹ் துடிக்க அனுமதி கொடுக்கவில்லையென்றால் நம் நிலை? எனவே நாம் அனைத்திற்கும் நன்றி செலுத்த கூடியவர்களாக வேண்டும்<br /><br /><span style="font-weight:bold;">3. இறைவனின் நாட்டமின்றி எனக்கு எதுவும் நேராது</span><br /><br />இறைவன் விதித்ததை தவிர வேறு எந்நன்மையும் எத்தீங்கும் நேராது என்பதில் முழு நம்பிக்கை இருக்க வேண்டும். திருமறையின் 6ஆம் அத்தியாத்தில் 17,18 வசனத்தில் குறிப்பிடுவது போன்று நன்மையும் தீமையும் இறைவனின் நாட்டப்படியே நடக்கின்றன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் இவ்வாறு துஆ கேட்டார்கள் " நீ எனக்கு கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது. நீ எனக்கு தடுக்க நினைப்பதை யாராலும் கொடுக்க இயலாது" (புகாரி)<br /><br /><span style="font-weight:bold;">4. ஒரு நாள் இறைவனிடம் செல்ல போகிறேன். அது இன்றாகவும் இருக்கலாம்</span><br /><br />எம்மனிதனுக்கும் தாம் எப்போது இவ்வுலகை விட்டு செல்ல இருக்கிறோம் என்பது தெரியாது. அது அன்று மாலையாக, அடுத்த நாள் காலையாக அல்லது அப்போதே கூட இருக்கலாம். எனவே இச்சிந்தனை நம்மிடம் வந்து விட்டால் இது தான் என்னுடைய கடைசி தொழுகை என்று நினைத்து தொழுதால் கண்டிப்பாக அத்தொழுகை ஊசலாட்டமில்லாமல் இருக்கும். அது போல் நாம் இந்நினைவுடன் எல்லா காரியங்களும் செய்தால் இறைவன் நாடினால் அது அவனால் ஏற்று கொள்ளப்பட கூடிய ஒன்றாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்.<br /><br />எனவே வர கூடிய ரமலானை பயன்படுத்தி இந்நான்கு நிலைகளை நம்மில் கொண்டு வருவோம். அதை நம் முழு வாழ்விலும் ஸ்திரப்படுத்துவோம். இதை படிக்கும் சகோதரர்கள் தங்களின் துஆவில் எனக்கும் இந்நிலையை இறைவன் கொடுக்க பிராத்தியுங்கள்.<br /><br />Kilai RahmanABDUL RAHMANhttp://www.blogger.com/profile/17272066359885172059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4509831693098583447.post-33976366408647599262010-07-27T00:23:00.000-07:002010-07-27T00:24:15.765-07:00இருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்<span style="font-weight:bold;">நான் சரியான இஸ்லாமிய அடிப்படையில் வாழ்கிறேனோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! <br /><br />மார்க்க சம்பந்தமான அறிவு எனக்கு இருக்கிறதோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!<br /><br />என் மனைவி – மக்கள், குடும்பத்தினருக்கு நான் இஸ்லாத்தைப் பற்றி கூறி நல்வழிப் படுத்துகிறேனோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! <br /><br />எனது இல்லத்தில் இஸ்லாத்திற்கு மாறான செயல்கள் நடப்பதைக் கண்டும் காணாமல் இருந்து விடுகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! <br /><br />மறுமை நாளைக்காக நான் எதை சேர்த்து வைத்திருக்கிறேன் என்று எண்ணிப் பார்க்க இந்த அவசர கால உலகத்தில் எங்கே முடிகிறது இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!<br /><br />ஐந்து வேளைத் தொழுவது கடமை என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் வேலைப் பளுவினால் என்னால் தொழமுடியவில்லை, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!<br /><br />ரமலானில் நோன்பு வைப்பது கட்டாயம் என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும். இருப்பினும் பசி தாகம் சமாளிக்க.. நோன்பு வைக்க என்னால் முடியவில்லை, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!<br /><br />என் தொழிலில் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. எனினும் கணக்குப் பார்த்து ஜகாத் கொடுத்திட மனம் இடம் தரவில்லை, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!<br /><br />என் வாழ்நாள் முழுவதும் ஓடி ஓடி உழைத்து ஓரளவு என் குடும்பத்திற்காக உழைத்து சேர்த்து ஓய்ந்து விட்டேன். இப்போது ஹஜ் செல்லும் அளவுக்கு என் உடலில் தெம்பு இல்லை இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!<br /><br />வீட்டில் அபிவிருத்தி வேண்டி மவ்லீது ராத்தீபுகளை புது புது மெட்டுகளில் ஓதி இறையருள் பெற முயற்சிக்கிறேன். இதெல்லாம் தவறு என்று உள்மனம் கூறுகிறது, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! <br /><br />உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவி கோருகிறோம்! என்று தொழுகையில் ஓதிவிட்டு அவ்லியாக்கள், பெரியார்களிடம் உதவி தேடுவது என் இரத்தத்தில் ஊறிப்போய்விட்டது, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! <br /><br />என் நாட்டம் நிறைவேற சலவாத்துன்னாறியா 4444 தடவை ஓதி துஆ கேட்கிறேன். இது குர்ஆன்-ஹதீஸில் இல்லை என்றாலும் என் மன ஆறுதலுக்காக, அபிவிருத்திக்காக இதை ஓதுவதற்கு ஏற்பாடு செய்கிறேன். இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! <br /><br />பால்கிதாப்-பில்லி-சூனியம்-ஏவல்-தகடு-தட்டு-தாயத்து-பேய்-பிசாசு-ஆவி எல்லாம் நம்புகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! <br /><br />புனை குறுக்கே செலவது, பல்லி தலையிலே விழுவது, ஆந்தை அலருவது, காகம் கரைவது, ஸஃபர் பீடை மாதம்-கெட்ட சகுனம் என எல்லாம் பார்த்து பார்த்து ஒவ்வொரு வேலையும் செய்கிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! <br /><br />பலர் பாராட்ட கத்னா-பூப்புனித நீராட்டு விழாவை விமரிசையாக நான் நடத்துகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! <br /><br />புதுமனை புகுவிழாவிற்கு பால் காய்ச்சி விழா நடத்துகிறேன். குழந்தைக்கு தர்காவில் சென்று முடி இறக்கி மொட்டை போடுகிறேன். அவ்லியா சன்னிதானத்தில் ஆடு, சேவல் பலி தருகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! <br /><br />என் அம்மாவின் கடைசி ஆசைக்காகத்தான் மஹர் கொடுத்து மணம் புரியாமல் வரதட்சணை வாங்கிக் கொண்டு திருமணம் செய்தேன். என் மனைவியின் ஆசைக்காகத்தான் சுன்னத்தான தாடியை சிரைத்துவிட்டேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! <br /><br />என் தந்தையின் வற்புறுத்தலால் என் மகன் திருமணத்தை மேள தாளத்துடன் யானை ஊர்வலத்துடன் மிக ஆடம்பரத்துடன் நடத்துகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! <br /><br />வட்டி வாங்கக்கூடாது என்று வான் மறைக்கூறினாலும் கூட என் தொழில் வளர்ச்சிக்காக குறைந்த வட்டியில் வீடுகட்ட, கடை ஆரம்பிக்க, பைக் சவாரிக்காக வட்டி வாங்க வேண்டிய நிர்பந்தம். என்ன செய்வது? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! <br /><br />லாட்டரி சூதாட்டம்தான். அரசு அதனை தடை செய்திருந்தாலும் என்ன? நான் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை வாங்கி மறைத்து விற்பனை செய்து வருகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! <br /><br />குடி குடியைக் கெடுக்கும்! மது ஹராம்தான், ஆனால் எனக்கு டாஸ்மார்க் கம்பெனியில்தான் வேலை கிடைத்தது. கைநிரைய சம்பாதிக்கிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! <br /><br />சினிமா பார்க்கக் கூடாதாம்! இந்த காலத்தில் நடக்கக்கூடிய காரியமா என்ன? பேரும் புகழும் பேரின்பமும் பெற்றுத் தரும் கனவுத் தொழிற்சாலையல்லவா அது! பாம்பு மட்டும்தான் படம் எடுக்குமா? மக்கள் பாராட்டும் விதமாக நான் கூட படம் எடுக்கிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! <br /><br />அளவு நிலுவையில் மோசடி கூடாதாம். வியாபாரத்தில் பொய் கூடாதாம். (பரக்கத்) இறையருள் கிடைக்காதாம். பொய் சொல்லாமல், மோசடி செய்யாமல் எப்படி விரைவில் பணக்காரன் ஆவதாம்? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! <br /><br />ஒரு சாண் நிலம் ஆக்கிரமிப்பு செய்தாலும் மறுமையில் ஒரு பூமி அளவு நிலத்தை நான் சுமக்க வேண்டுமாம். பலரின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த, அந்த நிலத்தை திரும்பக் கொடுத்து விட்டு என் பிள்ளைகளுக்கு எதைக் கொடுத்துவிட்டுப் போவதாம்? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! <br /><br />மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கூடாதாம். பிறகு எதற்கு உலகத்தில் வாழ்வதாம்? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! <br /><br />என் குடும்பத்தில் என் நான்கு பிள்ளைகள், நான்கு மத்ஹப்களில் இருக்கின்றனர். நானும் என் தம்பிகளும் எல்லா அரசியல் அமைப்பிலும் அங்கம் வகிக்கிறோம், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! <br /><br />கடவுள், பாவம், புண்ணியம், நீதி, நியாயம், உண்மை என்கிறவற்றில் நம்பிக்கை கிடையாது. ஏதோ உலகத்திலே பிறந்துட்டோம். முளைக்கிற செடி வளர்ந்து மரமாகிற மாதிரி நாமும் வளர்ந்துட்டோம். ஏதோ வாழந்துட்டு இருக்கிறோம். ஊரோடு இணைந்து போகத்தானே வேண்டும். இஸ்லாமிய அடிச்சுவட்டில் இக்காலத்தில் வாழ்ந்தால் உலகம் நகைக்காதா? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! <br /><br />(அல்ஜன்னத்) ஆசிரியர்: போதும்! போதும்!! கொஞ்சம் இடம் கொடுத்தா, பக்கம் பக்கமாக மானம்-விமானம் ஏற்றிடுவீங்க போலிருக்கே..?. <br /><br />ரேசன் கார்டிலும், வாக்காளர் அட்டையிலும், பள்ளி கல்லூரி சான்றிதழ்களிலும் மட்டுமே முஸ்லிமாக வாழ்பவர்களே! சிந்தியுங்கள். நமது வாழ்வும். மரணமும் தூய இஸ்லாத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்திட வேண்டும் என்பதை உள்ளத்தில் பதித்துக் கொள்ளுங்கள். </span>ABDUL RAHMANhttp://www.blogger.com/profile/17272066359885172059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4509831693098583447.post-11443352931522183642010-07-27T00:18:00.000-07:002010-07-27T00:22:14.189-07:00உணர்வாய் உன்னை<span style="font-weight:bold;">உங்கள் கணக்குகள் கேட்கப்படுமுன் நீங்களே உங்கள் சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் செயல்கள் எடை போடப்படுமுன் நீங்களே எடை போட்டுப் பாருங்கள். உமர் இப்னு கத்தாப் (ரலி). </span><br /><br />இது ஒரு சுய மதிப்பீட்டுப் படிவம். நிகழ்காலத்தில் உங்கள் வாழ்க்கையின் பல பகுதிகளையும் மதிப்பீடு செய்து, உங்கள் திசைகளை மாற்றிக்கொள்வதற்கும், இன்னும் மேன்மைப்படுத்திக் கொள்வதற்கும் உதவும். இன்ஷா அல்லாஹ்..<br /><br /><span style="font-weight:bold;">பகுதி ஒன்று:</span><br /><br /><span style="font-weight:bold;">அல்லாஹ்வுடன் உங்களுடைய தனிப்பட்ட உறவு:</span><br /><br />1. சந்தோஷமான, மகிழ்ச்சியான நேரங்களில் எத்தனை முறை அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அவனுக்கு நன்றி செலுத்தினீர்கள்? <br /><br />2. இவ்வாண்டு, நீங்கள் பெற்ற கல்வியினாலும், செயல்பாடுகளினாலும் அல்லாஹ்வைப் பற்றிய ஞானமும் அவனுடன் உங்களுக்குள்ள கடமையுணர்ச்சியும் ஆழமானதா?<br /><br />3. அல்லாஹ்வுடன் உள்ள தொடர்புகளில் சோம்பேறித்தனமாக இருந்தீர்களா?<br /><br />4. உங்களுக்கு ஏதாவது தேவை இருந்த சமயம் தவிர, எத்தனை முறை அல்லாஹ்வுடன் துவா மூலம் பேசினீர்கள்?<br /><br />5. எத்தனை முறை அல்லாஹ்வுடைய வழிகாட்டலை கேட்டிருக்கிறீர்கள்?<br /><br />6. கவலை, தேவை, சிரமம் போன்ற சமயங்களில் எத்தனை முறை அல்லாஹ்விடம் கையேந்தியிருக்கிறீர்கள்?<br /><br />7. அல்லாஹ்வின் நினைவையும், அவனுடனுள்ள உங்களுடைய கடமையுணர்ச்சியையும் அதிகரிப்பதற்கு தினசரி, வாராந்திர அடிப்படையில் நீங்கள் என்ன செய்யலாம்?<br /><br />8. அல்லாஹ்வை எந்நேரமும் நினைவில் நிறுத்த, குர்ஆன், நபிமொழிகளிலுள்ள துவாக்களை எப்படி மனப்பாடம் செய்யலாம்?<br /><br />9. அல்லாஹ்வுடன் தொடர்பு கொள்ளும்படி சகமனிதர்களை அழைத்திருக்கிறீர்களா? <br /><br /><span style="font-weight:bold;">உங்களுடைய இஸ்லாமிய அறிவு:</span><br /><br />1. உங்களுடைய வாழ்நாட்களில் தினமும் குர்ஆனின் ஒரு வசனங்களையாவது பொருளறிந்து படித்திருக்கிறீர்களா? இல்லையெனில் இன்றிலிருந்து முயற்சி எடுப்பீர்களா?<br /><br />2. இஸ்லாமிய கல்வி வட்டம் அல்லது வகுப்புகளுக்குச் சென்றீர்களா? இல்லையென்றால், அங்கு செல்லத் தடையாக இருப்பது எது..? எப்படி அந்தத் தடையை நீக்கலாம்?<br /><br />3. இஸ்லாமிய அறிவைப் பெறுவதற்காக, மாநாடுகளுக்கோ, கருத்தரங்குகளுக்கோ பயணம் செய்தீர்களா?<br /><br />4. கடந்த வருடத்தில் நீங்கள் கற்ற இஸ்லாத்தைப்பற்றி நீங்கள் முன்பு அறிந்திராத 10 விஷயங்கள் எவை? அவற்றில் நீங்கள் நடைமுறையில் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தவை எவை?<br /><br />5. நீங்கள் அல்லாஹ்விற்காக மட்டுமே அறிவைத் தேடினீர்களா அல்லது வேறு எதாவது காரணத்திற்காகவா?<br /><br />6. இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் அறிந்திராத எந்த 10 விஷயங்கள் பற்றி அடுத்த ரமளானுக்குள் அறிந்து கொள்ள விரும்புகிறீர்கள்?<br /><br />7. கடந்த வருடத்தில் சுமாராக எத்தனை இஸ்லாமிய புத்தங்கள் படித்தீர்கள்?<br /><br />8. கடந்த வருடத்தில் சுமாராக எத்தனை இஸ்லாமிய வீடியோக்களை பார்த்தீர்கள்?<br /><br />9. சுமாராக எத்தனை இஸ்லாமிய ஆடியோ கேசட்டுகள் கேட்டீர்கள்?<br /><br />10. அறிவு பெறுவதற்கு உங்களுக்கு எது மிகவும் பொருத்தமாக இருக்கிறது? (கேட்டல், பார்த்தல் அல்லது படித்தல்) <br /><br />11. உங்களைச் சுற்றியுள்ள மக்களைப் பற்றியும் அவர்களிடம் உள்ள மார்க்க ஞானம் பற்றியும் அறிந்திருக்கிறீர்களா? அவர்கள் அறியாமையில் இருப்பின் அவைகளை களைய ஏதாவது முயற்சி எடுத்தீர்களா.?<br /><br /><span style="font-weight:bold;">உங்களுடைய தொழுகை:</span><br /><br />1. ஒரு நாளுக்கு ஐந்து முறை தொழுகிறீர்களா?<br /><br />2. ஒரு நாளில் எந்தெந்த தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுதீர்கள்?<br /><br />3. பள்ளியிலோ பணியிலோ இருக்கும் போது தொழுகை நேரத்தில் தொழுதீர்களா, இல்லயென்றால், வீட்டிற்கு வந்தபின் அதற்காக ஈடு செய்தீர்களா?<br /><br />4. தொழுகையை சரியான முறையில் நிறைவேற்றுகிறீர்களா? அல்லது நீங்கள் தொழுவது தான் சரியான முறை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?<br /><br />5. உங்கள் தொழுகையில் மன ஓர்மையுடன் இருக்கிறீர்களா?<br /><br />6. தொழுகையை ஆர்வத்துடனும், அன்புடனும், இறையச்சத்துடனும் எதிர்நோக்குகிறீர்களா அல்லது தயக்கத்துடனும், சோம்பேறித்தனத்துடனும், ஏதோ முடிந்தால் போதும் என்ற மனநிலையிலும் எதிர்நோக்குகிறீர்களா?<br /><br />7. கடமையான (ஃபர்ள்) தொழுகையுடன், சுன்னத் தொழுகையையும் நிறைவேற்றுகிறீர்களா?<br /><br />8. உங்கள் தொழுகையை எப்படி செம்மைப்படுத்தலாம்?<br /><br />9. உங்கள் அடுத்த வீட்டுக்காரர்களுக்கும் உடன் வேலை செய்பவர்களுக்காவும் துவா செய்திருக்கிறீர்களா?<br /><br /><span style="font-weight:bold;">பகுதி இரண்டு:</span><br /><br /><span style="font-weight:bold;">உங்கள் குடும்பம்:</span><br /><br />1. கடைசியாக எப்போது உங்கள் குடும்பத்திற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினீர்கள்?<br /><br />2. உங்கள் குடும்பத்துடன் உங்களுக்குள்ள உறவு அல்லாஹ்வின் சந்தோஷத்திற்காகவா?<br /><br />3. ஒரு முஸ்லிமாக, உங்களுக்கு உங்கள் குடும்பத்தின் பால் உள்ள பொறுப்பை அறிந்திருக்கிறீhகளா?<br /><br />4. ஒரு தாய்-தந்தை, கணவன்-மனைவி, சகோதரன்-சகோதரி, மகன்-மகள் என்ற முறையில் உங்கள் பொறுப்புக்களை அறிந்திருக்கிறீர்களா?<br /><br />5. ஒரு தாய்-தந்தை, கணவன்-மனைவி, சகோதரன்-சகோதரி, மகன்-மகள் என்ற முறையில் உங்கள் உரிமைகளை அறிந்திருக்கிறீர்களா? <br /><br /><span style="font-weight:bold;">உங்கள் பெற்றோர்:</span><br /><br />1. உங்கள் பெற்றோருடன் உங்கள் உறவு எப்படி இருக்கிறது? <br /><br />2. அவர்களுடன் வசிக்கும் பட்சத்தில் தினமும் அர்த்தமள்ள உரையாடல் எதாவது உங்களுக்கிடையில் நடக்கிறதா?<br /><br />3. களைய வேண்டிய வெறுப்புகள் எதையாவது வளர்த்துக் கொண்டிருக்கிறீர்களா?<br /><br />4. அவர்களிடம் நீங்கள் மரியாதையுடன் நடந்து கொள்கிறீர்களா?<br /><br />5. கடந்த ஆண்டு, அவர்களை அல்லாஹ்விடம் நெருங்கச் செய்வதற்காக நீங்கள் செய்த 5 காரியங்கள் எவை?<br /><br />6. உங்கள் பெற்றோருக்கு பணிவிடை செய்திருக்கிறீர்களா?<br /><br />7. அவர்கள் தொலைவில் வசிப்பவர்களாக இருந்தால், அவர்களை அடிக்கடி போய்ப் பார்ப்பதோ, பேசுவதோ உண்டா?<br /><br />8. பெருநாள் தினங்களில் அவர்களுக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்து அவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்த முயன்றதுண்டா?<br /><br />9. அவர்கள் உயிரோடு இல்லாவிட்டால், அவர்களுக்காக எப்போது பிரார்த்தனை செய்தீர்கள்?<br /><br />10. அவர்களுக்காக சமீபத்தில் எப்போது தர்மம் செய்தீர்கள்? <br /><br /><span style="font-weight:bold;">உங்கள் வாழ்க்கைத் துணை:</span><br /><br />1. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்கள் உறவு எப்படி இருக்கிறது?<br /><br />2. தினசரி அடிப்படையில் அவர்களுடன் அடிக்கடி அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபடுகிறீர்களா?<br /><br />3. இஸ்லாமிய வகுப்புகளுக்குத் தொடர்ச்சியாக இருவரும் சேர்ந்து செல்வதன் மூலம் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொண்டீர்களா?<br /><br />4. நீங்கள் இருவராகவும், குடும்பமாகவும் இஸ்லாத்தை உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆக்குவதற்கு எப்படி முயன்றீர்கள்?<br /><br />5. பேசிக் தீர்த்துக் கொள்ள வேண்டிய மௌனமான வருத்தங்கள் ஏதாவது மனதளவில் இருக்கிறதா?<br /><br />6. கடந்த வருடத்தில் எத்தனை முறை நீங்கள் இருவரும் சேர்ந்து மறுமை சிந்தனை குறித்து பேசியிருக்கிறீர்கள்?<br /><br />7. உங்கள் உறவில் சொல், உணர்வு அல்லது உடல் ரீதியாக செய்யப்பட்ட கொடுமை அல்லது அநீதி ஏதாவது உள்ளதா? அப்படியிருந்தால், ஏன் அது நடந்தது? அதற்கு என்ன செய்யலாம்?<br /><br />8. கடந்த வருடத்தில் உங்கள் உறவினால் அல்லாஹ்வின் மேலும், இஸ்லாத்தின் மேலும் உள்ள ஈமான் வளர்ந்திருக்கிறதா?<br /><br />9. உங்கள் வாழ்க்கைத் துணையின் இடத்தில் நீங்கள் இருந்தால் எப்படி உணர்வீர்கள்? <br /><br /><span style="font-weight:bold;">உங்கள் பிள்ளைகள்:</span><br /><br />1. உங்கள் பிள்ளைகளுடன் உங்கள் உறவு எப்படி இருக்கிறது?<br /><br />2. அவர்களுடைய பள்ளி, பகுதி நேர, சமூக நடவடிக்கைகள், இவற்றில் என்ன நடக்கிறது என்று தெரியுமா?<br /><br />3. அவர்களுடைய நண்பர்கள் யார் என்று தெரியுமா?<br /><br />4. தினசரி அடிப்படையில் அவர்களுடன் அடிக்கடி அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபடுகிறீர்களா?<br /><br />5. அவர்களுடன் ஓய்வு நேரத்தைக் கழிக்கிறீர்களா?<br /><br />6. அல்லாஹ்வுடன் பிள்ளைகளுக்கு நெருக்கத்தை ஏற்படுத்த நீங்கள் எடுத்த ஏதாவது 5 செயல்கள்.<br /><br />7. உங்கள் உறவில் சொல், உணர்வு அல்லது உடல் ரீதியாக செய்யப்பட்ட கொடுமை அல்லது அநீதி ஏதாவது உள்ளதா? அப்படியிருந்தால், ஏன் அது நடந்தது? அதற்கு என்ன செய்யலாம்?<br /><br />8. அவர்களுக்கு முன்னால் வாழும் இஸ்லாமிய எடுத்துக்காட்டாக நீங்கள் இருந்திருக்கிறீர்களா?<br /><br />9. எதன் மூலம் அவர்களுடன் நீங்கள் அதிக நேரம் செலவழிக்கலாம்?<br /><br />10. அவர்கள் எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் வளர்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?<br /><br />11. அவர்களுக்குப் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி, எழுத்தாளர்கள், வீடியோ விளையாட்டுகள், விளையாட்டுப்பொருட்கள் போன்றவை என்ன என்று தெரியுமா?<br /><br />12. எத்தனை முறை பள்ளிவாயிலில் ஜும்மா தொழுதிருக்கிறார்கள்?<br /><br />13. உங்களைப் பற்றிய மதிப்பீடு அவர்களிடம் எப்படி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?<br /><br />14. அவர்கள் எதாவது சொல்ல நினைத்தால் உங்களிடம் பேசுவார்களா? அல்லது உங்கள் துணைவருடன் பேசுவார்களா?<br /><br />15. உங்கள் உறவினர்களுடன் (உடன் பிறப்புகள், மற்றவர்கள்) உங்கள் உறவு எப்படி இருக்கிறது?<br /><br />16. எத்தனை முறை அவர்களுடன் தொடர்பு கொள்கிறீர்கள்?<br /><br />17. அவர்களுக்கு பெருநாள் வாழ்த்து-பரிசு ஏதாவது கொடுத்தீர்களா அல்லது பெருநாளுக்கு தொலைபேசியிலாவது பேசினீர்களா?<br /><br />18. அவர்கள் அருகில் வசிக்கவில்லை என்றால் வருடத்திற்கு ஒருமுறையாவது அவர்களைப் போய்ப் பார்க்கிறீர்களா?<br /><br />19. தீர்க்க வேண்டிய மனஸ்தாபங்கள் ஏதாவது இருக்கிறதா?<br /><br />20. அவர்கள் அல்லாஹ்வை நெருங்க ஏதாவது முயற்சி செய்தீர்களா?<br /><br />21. அவர்களுடைய ஹலாலான தேவைகளை (அதாவது பண உதவி) நிறைவேற்ற உதவியிருக்கிறீர்களா?<br /><br />22. உங்களுடைய பிள்ளைகள் உங்கள் உடன்பிறப்புகளை அறிவார்களா?<br /><br /><span style="font-weight:bold;">பகுதி மூன்று:</span><br /><br /><span style="font-weight:bold;">உங்கள் செல்வம்:</span><br /><br />1. கடந்த வருடத்தில் உங்கள் செல்வத்தைப் பெருக்கியிருக்கிறீர்களா?<br /><br />2. அதற்காக அல்லாஹ்வுக்கு எப்படி நன்றி செலுத்தினீர்கள்?<br /><br />3. உங்கள் வருவாய் (வேலை) ஹலாலானதா? உங்களுக்கு நிச்சயமாகத் தெரியாவிட்டால் யாரிடம் அதைப்பற்றி ஆலோசிக்கலாம்?<br /><br />4. உங்களுடைய ஜகாத்தைக் கொடுத்துவிட்டீர்களா?<br /><br />5. எத்தனை முறை, எவ்வளவு தர்மத்திற்காக செலவழித்திருக்கிறீர்கள்?<br /><br />6. எவ்வகைப் பொருட்கள், மக்கள், காரணங்களுக்காக இவ்வருடம் செலவழித்திருக்கிறீர்கள்?<br /><br />7. உங்கள் செலவுகளுக்கு கணக்கு வைத்திருக்கிறீர்களா?<br /><br />8. செலவுத்திட்டம் வைத்திருக்கிறீர்களா?<br /><br />9. உங்கள் கடன் அதிகரித்திருக்கிறதா? குறைந்திருக்கிறதா?<br /><br />10. வட்டி வாங்குவது அல்லது கொடுப்பதிலிருந்து முற்றிலுமாக விலகி விட்டீர்களா?<br /><br />11. அடுத்த வருடம் எந்த விஷயங்களுக்காக தர்மம் கொடுப்பதை முதன்மைப்படுத்தியிருக்கிறீர்கள்?<br /><br /><br /><span style="font-weight:bold;">பகுதி நான்கு</span>:<br /><br /><span style="font-weight:bold;">உங்கள் ஆரோக்கியம்:</span><br /><br />1. உங்கள் ஆரோக்கியத்திற்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தினீர்களா?<br /><br />2. உடற்பயிற்சி ஒழுங்காக செய்கிறீர்களா? இல்லையென்றால் ஏன்?<br /><br />3. ஒழுங்காக உண்ணுகிறீர்களா?<br /><br />4. சமச்சீர் உணவு உண்ணுகிறீர்களா?<br /><br />5. அல்லாஹ்வை வணங்குவதற்காக உபரித் தொழுகைகளை உடலும் உள்ளமும் ஒன்றுபட தொழுதிருக்கிறீர்களா?<br /><br />6. உங்கள் உடல்நிலையை எப்படி கவனித்துக் கொள்வது என்று அறிந்திருக்கிறீர்களா?<br /><br />7. உங்கள் குடும்பத்தினரையும், உறவினர்களiயும் அதே போல் உடலைக் கவனித்துக் கொள்ள உற்சாகப்படுத்தியுள்ளீர்களா?<br /><br />8. எப்போது கடைசியாக பொது உடற்பரிசோதனை செய்து கொண்டீர்கள்?<br /><br /><span style="font-weight:bold;">பகுதி ஐந்து:</span><br /><br /><span style="font-weight:bold;">உங்கள் தொழில்:</span><br /><br />1. உங்கள் வேலையில் திசையையும் கவனத்தையும் தவற விட்டு விட்டீர்களா?<br /><br />2. உங்கள் வேலை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?<br /><br />3. உங்கள் வேலை இஸ்லாம் அனுமதிக்கக் கூடியதாக இருக்கிறதா?<br /><br />4. இல்லையென்றால், எவ்வித வேலை மாற்றம் உங்களுக்கு ஹலாலான வருவாயைத்தருவதுடன், உங்கள் திறமைகளை அல்லாஹ்விற்காகப் பயன்படுத்த உதவும்?<br /><br />5. இதைப் பற்றி ஒரு தகுதியான மனிதரிடம் கலந்தாலோசித்திருக்கிறீர்களா?<br /><br />6. உங்கள் தொழில் ஹலாலானதாக இருந்தால், அதன் திறனையும், கவனத்தையும் முன்னேற்ற முயன்றிருக்கறீர்களா?<br /><br />7. அல்லாஹ்விடம் உங்களுக்கு உள்ள உறவை முன்னேற்ற, உம்மத்திற்கும், சமுதாயத்திற்கும் நன்மை புரிய, என்னென்ன புது வழிகள் மூலம் உங்கள் தொழிலை உபயோகிக்கலாம்?<br /><br />8. தொழில் அல்லாஹ்வின் பொருத்தத்தின் பிரகாரம் இருக்க வேண்டும் என்ற விஷயத்தை பிறருக்கும் எத்தி வைத்துள்ளீர்களா..?<br /><br /><span style="font-weight:bold;">பகுதி ஆறு:</span><br /><br /><span style="font-weight:bold;">உங்கள் கல்வி:</span><br /><br />1. உங்கள் தற்போதைய தகுதிகள் எவை?<br /><br />2. அவை உங்களுக்கு திருப்தியைத் தருகின்றனவா?<br /><br />3. இல்லையென்றால், எந்த அளவு கல்வியை அடைய விரும்புகிறீர்கள்?<br /><br />4. உங்கள் கல்வித்தகுதியை மேம்படுத்த என்னென்ன ஹலாலான வழிகள் (வட்டியில்லாக் கடன்) உள்ளன?<br /><br />5. மாணவராக இருந்தால், உங்கள் கல்வி உங்களை அல்லாஹ்விடம் நெருக்கமாகக் கொண்டு செல்லுமா?<br /><br />6. எவ்விதத்தில் உங்கள் கல்வி முஸ்லிம்களுக்கும், பொதுவாக சமுதாயத்திற்கும் உபயோகமாக இருக்கும்?<br /><br />7. உற்சாகத்தோடும், முழு ஈடுபாட்டோடும் படித்திருக்கிறீர்களா?<br /><br />8. உங்கள் கல்வித் தகுதியை முன்னேற்ற, எதாவது கூடுதலான திட்டங்கள் அல்லது வகுப்புகளில் சேர வேண்டுமா? (மேற்கண்ட கல்வியை உலகக் கல்வி மார்க்க கல்வி என்று பிரிக்க வேண்டாம். இரண்டும் கல்வி தான்).<br /><br /><span style="font-weight:bold;">பகுதி ஏழு:</span><br /><br />உ<span style="font-weight:bold;">ங்கள் நேரம்:</span><br /><br />1. இவ்வருடம் எதில் அதிக நேரம் செலவழித்தீர்கள்?<br /><br />2. அதில் நீங்கள் திருப்தியாக இருக்கிறீர்களா?<br /><br />3. இல்லையென்றால், எதில் உங்கள் பெரும்பாலான நேரத்தைச் செலவிட விரும்பியிருப்பீர்கள்?<br /><br />4. அதை செயல்படுத்த என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும்?<br /><br />5. உங்களிடம் சரியான கால நிர்வாகத் திட்டத் திறமைகள் உள்ளனவா? இல்லையென்றால், அதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?<br /><br />6. அதைப் பற்றிய புத்தகம் படிக்க இயலுமா?<br /><br />7. அல்லது காலநிர்வாகத் திட்டக் கல்வி பயில சிறிது பணம் செலவழிக்க முடியுமா?<br /><br />8. உங்கள் காலத்தைத் திட்டமிடுகிறீர்களா?<br /><br />9. உங்கள் வாழ்வில் சரியான முறையில் நேரத்தைச் செலவழித்ததற்கு உதராணமாக ஒரு நாளைக் குறிப்பிட முடியுமா?<br /><br />10. இவ்வருடம், உங்களுக்கு சராசரியாக ஒரு வாரத்தில் எவ்வளவு ஓய்வு நேரம் கிடைத்தது?<br /><br />11. தற்போது உங்களுக்கு எத்தனை மணி நேரம் ஓய்வாகக் கிடைக்கிறது?<br /><br />12. உங்கள் ஓய்வு நேரத்தை இன்னும் செம்மையாக எப்படி செலவழிக்கலாம்?<br /><br />13. அல்லாஹ்வுடன் நெருக்கத்தை அதிகரிக்க உங்கள் ஓய்வு நேரம் எப்படி உதவும்?<br /><br />14. தொலைக்காட்சி எத்தனை நேரம் பார்க்கிறீர்கள்?<br /><br />15. அதிக நேரம் தொலைக்காட்சியின் முன்னால் செலவழிக்கிறீர்களா? அல்லது உங்கள் குடும்பத்தினருடன் பேசுவதில் செலவிடுகிறீர்களா?<br /><br />16. தொலைக்காட்சியின் காணும் காட்சிகள் இஸ்லாத்திற்கு விரோதமாக உள்ளதா..? பிரயோஜனமாக உள்ளதா..?<br /><br /><span style="font-weight:bold;">பகுதி எட்டு:<br /></span><br /><span style="font-weight:bold;">உங்கள் இஸ்லாமியப் பணி:<br /></span><br />1. நற்கரியங்களுக்காக எத்தனை நேரம் ஒதுக்குகிறீர்கள்?<br /><br />2. உங்கள் நேரத்தை பள்ளிவாசலுக்காகவோ முஸ்லிம் கல்விக் கூடத்திற்காகவோ செலவழித்திருக்கிறீர்களா?<br /><br />3. களப்பணியில் ஈடுபட்டிருக்கிறீர்களா?<br /><br />4. இஸ்லாமிய செய்தியை மற்றவர்களிடம் எத்தி வைப்பதற்கு எத்தனை நேரம் செலவழித்திருக்கிறீர்கள்?<br /><br />5. இஸ்லாத்திலிருந்து வெகு தூரத்தில் உள்ள உறவினர்கள், நண்பர்களைப் போய்ச் சந்தித்தீர்களா?<br /><br />6. நீங்களும் உங்கள் அக்கம் பக்கத்தினரும் ஒருவர் மற்றவருடைய இன்ப, துன்பங்களில் பங்கேற்றீர்களா?<br /><br />7. ஒரு முஸ்லிம் நிறுவனம் உபயோகிக்கக் கூடிய திறமைகள் எவற்றையாவது வளர்த்துள்ளீர்களா?ABDUL RAHMANhttp://www.blogger.com/profile/17272066359885172059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4509831693098583447.post-50874844958706855672010-06-13T23:16:00.000-07:002010-06-13T23:22:11.736-07:00இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்!தூய்மையான இஸ்லாத்தில் மார்க்கம் என்ற பெயரிலே பல போலி மார்க்க அறிஞர்கள் இணைவைப்பையும் புரோகிதத்தையும் புகுத்தினர். அதை இன்றும் சுன்னத்தை பின்பற்றுகிறோம் என்று போலி கூச்சல் போடுபவர்கள் நியாயப் படுத்தியே வருகின்றனர். அல்லாஹ்வும் அவனது தூதரும் மார்க்கத்தை தெளிவாக எத்தி வைத்துவிட்ட நிலையில் இவர்கள் எந்த இலாபத்திற்காக மார்க்கத்தை வளைக்கின்றனர் என்று தெரியவில்லை. மேலும் இவர்கள் போன்றவர்கள் அல்லாஹ்வின் திருப்தியை விட வேற ஏதோ ஒன்றின் மீது அதிக நாட்டம் கொண்டுள்ளனரோ என்ற சந்தேகம் வருகிறது. <br /><br />இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள் பற்றி அல்குர்-ஆனிலும் ஹதீஸ்களிலும் பல இடங்களில் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் இஸ்லாமிய சமுதாயத்தில் அத்தகைய தீமைகள் சர்வ சாதாரணமாக மலிந்து கிடப்பதை காணலாம். இன்று பெரும்பாலான மனிதர்கள் சிறிது வசதி வந்தவுடனேயே கர்வத்துடனும் மார்க்கத்தின் செயல்பாடுகளில் அலட்சியத்துடனும் தங்களை ஏதோ வானத்தில் இருந்து குதித்ததுபோல் காட்டிக் கொள்கின்றனர். இவர்கள் ஏதோ ஆயிரம் வருடங்கள் இந்த உலகத்தில் வாழப் போவது போலவும் தங்களிடம் இருக்கும் இந்த செல்வம் நிலையாக இருக்கும் என்றும் ஒருவித மயக்கத்தில் வாழ்ந்து வருகின்றனர். அத்தகைய சிந்தனை உடைய முஸ்லிம்கள் தாங்கள் நிலையை மாற்றி நிலையில்லாத இந்த உலக வாழ்கையை விட நிலையான மறுமை வாழ்கையே சிறந்தது என்பதை தங்களுடைய மனதில் நிறுத்த வேண்டும். மேலும் இஸ்லாத்தின் போதனைகளை மற்றவர்களிடம் பரப்ப தங்களால் ஆன முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.<br /><br /><span style="font-weight:bold;">1) ஷிர்க் எனும் இணைவைத்தல்!</span><br />“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்” (அல்-குர்ஆன் 4:48)<br /><br /><span style="font-weight:bold;"><br />2) சூன்யம், ஜோதிடம் மற்றும் குறிபார்த்தல்!</span><br />“யாராவது குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என்று நம்பியவர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதை நிராகரித்தவர் ஆவார்” அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் அபூதாவுத்.<br /><br />“குறி சொல்பவனும் அதைக் கேட்பவனும், எதிர்காலத்தை கணித்துக் கூறுபவனும் அதைக் கேட்பவனும், சூன்யம் செய்பவனும், அதைச் செய்யச் சொன்னவனும் நம்மைச் சார்ந்தவன் இல்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அல் பஸ்ஸார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.<br /><span style="font-weight:bold;"><br />3) கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் நன்மை செய்வதாக நம்புதல்!</span><br />நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவு மழை பொழிந்த பின் ஹுதைபிய்யா எனுமிடத்தில் எங்களுக்கு ஸுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி ‘உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்று அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘என்னுடைய அடியார்களில் என்னை நம்பியவர்களும் என்னை நிராகரிப்பவர்களும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளால், அவனுடைய கருணையால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நம்பியவர். நட்சத்திரங்களை நிராகரித்தவர். இன்னின்ன நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நிராகரித்து நட்சத்திரங்களை நம்பியவர்” என்று அல்லாஹ் கூறினான்” எனக் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: ஸைத் இப்னு காலித் (ரலி), ஆதாரம்: புஹாரி<br /><br /><span style="font-weight:bold;">4) பாதுகாப்பு வேண்டி தாயத்து, கயிறு, வளையம் அணிதல்!</span><br />நபி (ஸல்) அவர்களுடன் சில பயணங்களில் நான் சென்றிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு தூதுவரை அனுப்பி ஒட்டகக் கழுத்தில் (கண் திருஷ்டிக்காகக் கட்டப்பட்டு) உள்ள வில் கயிற்றினாலான மாலையை அல்லது (வில் கயிற்றினாலான மாலையென குறிப்பிடாது பொதுவான) எந்த மாலையையும் துண்டிக்காமல் நீர் விட்டு விட வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் அம்மனிதருக்கு கூறியதாக அபூபஷீர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். (புகாரி) <br /><br />(ஷிர்க்கான வார்த்தைகளைக் கூறி) மந்திரித்தல், தாயத்துகள், (ஏலஸ்கள் கட்டுதல். தாவீசுகள்) திவலாக்கள் ஆகிய அனைத்தும் ஷிர்க்காகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத், அபூதாவூத்)<br /><br /><span style="font-weight:bold;">5) துர்ச்சகுனம் பார்த்தல்!</span><br />(இஸ்லாத்தில்) தொற்றுநோய் என்பதில்லை; துர்ச்சகுனம் பார்ப்பது கூடாது; ஆந்தை சாஸ்திரம் பார்ப்பதும் கூடாது; சஃபர் என்பதும் கிடையாது; நட்சத்திர சகுனம் பார்ப்பதும் கூடாது; கொள்ளி வாய்ப் பிசாசுமில்லை’ என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹூரைரா - (ரலி) நூல்: புகாரீ, முஸ்லிம்<br /><br />எவர் ஒருவருடைய (அவர்பார்த்த) சகுனம் அவருடைய தேவையை (நிறைவேற்றி முடிப்பதை) விட்டும் திருப்பி விடுகிறதோ அவர் அல்லாஹ்வுக்கு இணைக் கற்பித்து விட்டார்’ என நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதனுடைய பரிகாரமென்ன? என்று (நபித் தோழர்களான) அவாகள் கேட்டார்கள் அ(தற்கு நபிய)வர்கள் <br /><br />அல்லாஹூம்ம லா கைர இல்லா கைருக்க, வலா தைர இல்லா தைருக்க, வலா இலாஹ இல்லா கைருக்க.<br /><br />(பொருள்: யாஅல்லாஹ்! உன் நன்மையன்றி வேறு நன்மையில்லை உன் சகுனமின்றி வேறு சகுனமில்லை உன்னையன்றி வணங்கப்படுவதற்கு தகுதியானவன் வேறில்லை) என நீர் வுறுவதாகும் என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: ஃபள்லு இப்னு அப்பாஸ் - ரலி நூல்: அஹ்மது<br /><br /><span style="font-weight:bold;">6) முகஸ்துதி (பிறருக்கு காண்பிப்பதற்காக அமல் செய்தல்)</span><br />“நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் - மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை” (அல்-குர்ஆன் 4:142)<br /><br />‘என்னிடம் தஜ்ஜாலை விடவும் (அவனால் உங்களுக்கு ஏற்படும் தீமையை விடவும்) உங்கள் மீது அதிகம் பயப்படத்தக்க ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் வினவினார்கள். ஆம்! தெரிவியுங்கள் என (தோழர்களான)அவர்கள் கூறினார்கள். அ(தற்கு நபிய)வர்கள், (நான் பெரிதும் உங்கள் மீது பயப்படும் தீங்கு) மறைமுக ஷிர்க்காகும் (அது யாதெனில்) ஒருவர் தொழுகையை நிறைவேற்ற நிற்கிறார். தன்னை மற்றவர் பார்ப்பதை கண்டு தனது தொழுகையை (நீட்டி நிறுத்தி) அழகுபடுத்துகிறார் (முகஸ்துதியான இதுவே மறைமுக ஷிர்க்காகும்) எனக் கூறினார்கள்.<br /><br /><span style="font-weight:bold;">7) காலத்தை ஏசுதல்!</span><br />காலத்தைத் திட்டுவதின் மூலம் மனிதர்கள் என்னை சங்கடப்படுத்திவிடுகிறார்கள் காலத்திற்குச் சொந்தக்காரன் நானே! இரவையும் பகலையும் மாறிவரச் செய்பவனும் நானே என அல்லாஹ் கூறியதாக நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹூரைரா - ரலி நூல்: புகாரி.<br /><span style="font-weight:bold;"><br />8.) அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்துப்பலியிடுதல்!</span><br />‘அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்தவரை அல்லாஹ் சபிப்பானாக’ அறிவிப்பவர் : அலி (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.<br /><br /><span style="font-weight:bold;">9) கப்றுகளில் கட்டங்கள் எழுப்புதல்!</span><br />அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும் போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். இவாகளின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாம நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும் கெட்வர்கள் அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் புகாரி மற்றும் முஸ்லிம்.<br /><span style="font-weight:bold;"><br />10) கப்றுகளுக்காக விழா நடத்துதல்!</span><br />எனது கப்ரை (கந்தூரி) விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கிவிடாதீர்கள். உங்கள் வீடுகளையும் கப்ருகளாக ஆக்கிவிடாதீர்கள். நீங்கள் எங்கிருந்த போதும் எனக்காக ஸலவாத்து சொல்லுங்கள். அது என்னை வந்தடையும் அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: அபூதாவுத்.<br /><br /><span style="font-weight:bold;">11) சமாதி வழிபாடு!</span><br />யஹுதிகளும், நஸராக்களும் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடங்களாக ஆக்கிக்கொண்டனர். அல்லாஹ் அவர்களைச் சபிப்பானாக அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்.<br /><br />“அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே!” (அல்-குர்ஆன் 7:194)<br /><span style="font-weight:bold;"><br />12) அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்துப்பலியிடுதல்!</span><br />“உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!” (அல்-குர்ஆன் 108:2)<br /><br />நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்தவரை அல்லாஹ் சபிப்பானாக!” அறிவிப்பவர் : அலி (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.<br /><br /><span style="font-weight:bold;">13) அல்லாஹ் அல்லாதவருக்காக நேர்ச்சை செய்தல்!</span><br />“இன்னும், செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான்; அன்றியும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர்” (அல்-குர்ஆன் 2:270)<br /><br />“அல்லாஹ்வுக்கு வழிபடுவதை நேர்ச்சை செய்தவர், (அதை நிறைவேற்றி) அவனுக்கு வழிபடுவாராக! அல்லாஹ்வுக்கு மாறுசெய்ய நேர்ச்சை செய்தவர்; (அவ்வாறு அதை நிறை வேற்றி) அவனுக்கு மாறுசெய்ய வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர்; ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர்: ஆயிஷா - ரலியல்லாஹூ அன்ஹு. ஆதாரம் : புகாரீ, அஹ்மது, நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா<br /><br /><span style="font-weight:bold;">14) இறைவனல்லாத பிறரை (அவுலியா, இறைநேசர்கள் போன்றவர்களை) அழைத்து உதவி தேடுதல்!</span><br />“கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத - அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது” (அல்-குர்ஆன் 46:5)<br /><br />“அல்லாஹ்வை விடுத்து அவனுக்கு இணையாக ஒருவரைப் பிரார்த்தித்த நிலையில் எவன் இறந்து விடுகின்றானோ அவன் நரகில் நுழைவார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி.<br /><br /><span style="font-weight:bold;">15) அல்லாஹ் அல்லாதவர் ஹலாலை ஹராமாக்குவதையும் ஹராமை ஹலாலாக்கு வதையும் ஏற்றுக்கொள்ளுதல்!</span><br />“(நபியே!) நீர் கூறும்: ‘அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக்<br /><br />கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?” (அல்-குர்ஆன் 10:59)<br /><br />அதிய்யி பின் ஹாதிம் - ரலி அன்ஹூ அவர்கள் அறிவிக்கிறார்கள் (நான் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தேன் அது சமயம், வேதக்காரர்களான) ‘அவர்கள் அல்லாஹ்வையன்றி தங்களுடைய பாதிரிமார்களையும், தங்களுடைய சந்நியாசிகளையும், மர்யமுடைய மகனார் மஸீஹையும் (தங்கள்) தெய்வங்களாக எடுத்துக் கொண்டனர்’ (9:31) என்ற பொருளுடைய வசனத்தை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதக் கேட்டு, ‘நிச்சயமாக நாங்கள் அவர்களை வணங்குபவர்களாக இருந்ததில்லையே! எனக் கூறினேன்.<br /><br />அதற்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அ(ந்தக் குருமார்களான)வர்கள் அல்லாஹ் ஹலாலாக்கிய ஒன்றை அவர்கள் ஹராமாக்கி, அதனால் நீங்கள் அதை ஹராமாக்கவில்லையா? மேலும், அல்லாஹ் ஹராமாக்கிய ஒன்றை அவர்கள் ஹலாலாக்கி, அதனால் நீங்கள் அதை ஹலாலாக்கவில்லையா?’ எனக் கேட்டார்கள். ஆம்! என நான் கூறினேன். (ஹலாலாக்குவது மற்றும் ஹராமாக்குவதின் விஷயத்தில் அவர்களை பின்பற்றி நடப்பதான) இதுவே அவர்களை நீங்கள் வணங்குவதாகும் என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நூல்: அஹ்மது.<br /><br /><span style="font-weight:bold;">16) தொழுகையை விட்டுவிடுதல்!</span><br />‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?’ (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ‘தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. ‘அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. ‘(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம். ‘இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம். ‘உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்’ எனக் கூறுவர்). (அல்-குர்ஆன் 74:42-47)<br /><br />ஒரு முஸ்லிமுக்கும் இணைவைத்தலுக்கும், இறை நிராகரிப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவது தான். (ஆதாரம்: முஸ்லிம்)<br /><br /><span style="font-weight:bold;">17) தொழுகையில் பொடுபோக்காக, அலட்சியமாக இருத்தல்!</span><br />இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். ” (அல்-குர்ஆன் 107:4-5)<br /><br />அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். (ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்)<br /><br /><span style="font-weight:bold;">18) அவசர அவசரமாக தொழுதல்!</span><br />“முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் : ‘திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்’ என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்? என்று நபித் தோழர்கள் கேட்டனர். ‘தனது ருகூவையும், ஸுஜுதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்’ என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் பதிலளித்தாகள். (அறிவிப்பவர் : அபூகதாதா ரலி, நூற்கள் அஹ்மத், ஹாகிம், தப்ரானி)<br /><br />“ருகூவை பூரணமாக செய்யாத, ஸஜ்தாவை மிக குறுகிய நேரத்திலும் செய்த ஒருவரைப் பார்த்து, “இந்த நிலையிலேயே தொழக்கூடியவர்கள் இறக்க நேரிட்டால், அவர் முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்களின் மார்க்கத்தை விட்டு விட்டு வேறு மார்க்கத்தை நிலைநாட்டியவராகத்தான் மரணிப்பார்” என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.<br /><br /><span style="font-weight:bold;">19) அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்தல்!</span><br />“அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்தவர் இணைவைத்து விட்டார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” அறிவிப்பவர் : இப்னு உமர் (ஸலி), ஆதாரம் : அபூதாவுத், அஹ்மத். (என் தந்தை) உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் பயணிகள் சிலரிடையே இருந்து கொண்டிருந்தபோது அவர்களை அடைந்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள் தம் தந்தையின் மீது சத்தியம் செய்தார்கள். உடனே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்களை அழைத்து, ‘அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் தந்தையர் மீது சத்தியம் செய்வதை அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துவிட்டான். சத்தியம் செய்யமுற்படுபவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது மெளனமாக இருந்துவிடட்டும்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் :இப்னு உமர் (ரலி), ஆதாரம் : புகாரி.<br /><br /><span style="font-weight:bold;">20) வேண்டுமென்றே ஜமாஅத் தொழுகையை தவறவிடுதல்!</span><br />நீங்கள் தொழுகையையும் நிலைநாட்டுங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். மேலும் என் முன்னிலையில் (தலை சாய்த்து) ருகூஉ செய்பவர்களுடன் நீஙகளும் சேர்ந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2 : 43)<br /><br />நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஜமாஅத்தாகத் தொழுவது தனித்துத் தொழுவதையும் விட இருபத்தி ஏழு மடங்கு சிறப்பிற்குரியதாகும். நான் தொழுகைக்கு ஏவி, தொழுகையை முன்னின்று நடத்துவதற்காக யாரையேனும் நியமித்து விட்டு ஜமாஅத்துத் தொழுகைக்கு வராதோரின் இல்லங்களுக்கு நானே சென்று அவர்கள் அங்கிருக்கும் நிலையில் அவ்வில்லங்களுக்குத் தீ வைக்க விழைகின்றேன். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்<br /><br /><span style="font-weight:bold;">21) தொழுகையில் இமாமை முந்துதல்!</span><br />முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் “உங்களுடைய செயல்களை இமாமுக்கு முன்னால் ஆக்காதீர்கள்! இமாம் ‘அல்லாஹ் அக்பர்’ என்று கூறினால் நீங்களும் ‘அல்லாஹ் அக்பர்’ என்று சொல்லுங்கள்; இமாம் ‘வலழ்ழாலீன்’ என்று கூறினால் நீங்கள் “ஆமீன்” என்று சொல்லுங்கள்”. மற்றொரு அறிவிப்பில், ‘நிச்சயமாக இமாமைப் பின்பற்ற வேண்டும்’ என்று கூறினார்கள். மேலும், ‘இமாமுக்கு முந்தி தலையை உயர்த்துபவர் மறுமையில் அவருடைய தலையை கழுதையின் தலையைப் போல் அல்லாஹ் ஆக்கிவிடுவான் என்று அவர் பயந்துக்கொள்ள வேண்டாமா?” என்றார்கள். <br /><br /><span style="font-weight:bold;">22) கொலை செய்தல்!</span><br />“எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்” (அல்-குர்ஆன் 4:93)<br /><br />‘நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்’ (அல்-குர்ஆன் 5:32)<br /><br /><span style="font-weight:bold;">23) விபச்சாரம் செய்தல்!</span><br />“நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது” (அல்-குர்ஆன் 17:32)<br /><br />நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘மூன்று நபர்கள், மறுமைநாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுமுண்டு. அவர்கள் விபச்சாரம் புரியும் வயோதிகன், பொய்யனான அரசன், பெருமையடிக்கும் ஏழை.” (ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம்)<br /><span style="font-weight:bold;"><br />24) ஓரினப் புணர்ச்சி (ஆணும் ஆணும் புணர்ச்சி) செய்தல்!</span><br />“மேலும், லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்); அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: ‘நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்து விட்டீர்கள். நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? வழி மறி(த்துப் பிரயாணிகளைக் கொள்ளையடி)க்கவும் செய்கின்றீர்கள்; உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின்றீர்கள்’ என்று கூறினார்; அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்: ‘நீர் உண்மையாளரில் (ஒருவராக) இருப்பின் எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக’ என்பது தவிர வேறு எதுவுமில்லை” (அல்-குர்ஆன் 29:28-29)<br /><br />நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘லூத் (அலை) சமுதாயத்தினர் செய்த செயலை செய்யக்கூடியவர்களைக் கண்டால் செய்தவனையும் செய்யப்பட்டவனையும் கொன்றுவிடுங்கள்’ அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாம் : அஹ்மத்.<br /><br /><span style="font-weight:bold;">25) வட்டி வாங்குதல், கொடுத்தல், வட்டி சம்பந்தமான தொழில்களில் பணிபுரிதல்!</span><br />“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் - முதல் - உங்களுக்குண்டு; (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்” (அல்-குர்ஆன் 2:278-2:279)<br /><br />“வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியேரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்” அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்.<br /><br /><span style="font-weight:bold;">26) மது அருந்துதல்!</span><br />மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். (ஆதாரங்கள் : அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)<br /><br />மது அருந்தி போதையடைந்தவனின் நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் அருந்தினால் மறுமை நாளில் ரத்கத்துல் கப்பால் எனும் பானத்தை அல்லாஹ் அவனுக்கு புகட்டுவது கடமையாகிவிட்டது என்று நபி(ஸல்)அவர்கள் கூறியபோது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களே! ரத்கத்துல் கப்பால் என்றால் என்ன? என்று கேட்டனர். அதற்கவர்கள், நரகவாசிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: இப்னுமாஜா)<br /><br /><span style="font-weight:bold;">27) சூதாட்டத்தில் ஈடுபடுதல்!</span><br />“(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2: 219)<br /><br />ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்-குர்ஆன் 5:90-91)<br /><br /><span style="font-weight:bold;">28) பொய் பேசுதல்!</span><br />நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (அல்குர்ஆன் 16:105)<br /><br />நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; அவனிடம் நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.<br /><br /><span style="font-weight:bold;">29) திருடுதல்!</span><br />“திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 5:38)<br /><br />நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘திருடுபவனை அல்லாஹ் சபிப்பானாக! ஒரு முட்டையைத் திருடினாலும் அவனுடைய கை துண்டிக்கப்படும். கயிற்றைத் திருடினாலும் அவனுடைய கை துண்டிக்கப்படும்’ அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : புகாரி<br /><span style="font-weight:bold;"><br />30) லஞ்சம் கொடுத்தல், லஞ்சம் வாங்குதல்!</span><br />“அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்” (அல்-குர்ஆன் 2:188)<br /><br />‘லஞ்சம் கொடுப்பவர் மீதும் லஞ்சம் வாங்குபவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக!’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), ஆதாரம் : இப்னுமாஜா.<br /><br /><span style="font-weight:bold;">31) பொய்சாட்சி கூறுதல்!</span><br />அபூபக்ரா (ரலி) பெரும் பாவங்களில் மிகப்பெரும் பாவத்தை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள்! அதற்கு நாங்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள் என்றோம். அதற்கவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோரை நிந்திப்பது, என்று கூறினார்கள். சாய்ந்திருந்த அவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய்சாட்சி கூறுவதும் தான், அறிந்து கொள்ளுங்கள் பொய் சொல்வதும் பொய்சாட்சி கூறுவதும் தான்’ என்று கூறினார்கள். ‘நிறுத்த மாட்டார்களா? என நாங்கள் கூறும் அளவுக்கு அவற்றை திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்கள். ஆதாரம் : புகாரி.<br /><br /><span style="font-weight:bold;">32) அவதூறு கூறுதல்!</span><br />எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள். (அல்-குர்ஆன் 24:4)<br /><br />எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு. (அல்-குர்ஆன் 24:23)<br /><br /><span style="font-weight:bold;">33) அநாதைகளின் சொத்துக்களை அபகரித்தல்!</span><br />“நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள். (அல்-குர்ஆன் 4:10)<br /><br />‘அழிக்கக் கூடிய ஏழு விஷயங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது நாங்கள் அவை என்னென்ன? என்று கேட்டோம். <br /><br />அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், சூனியம் செய்தல், நியாயமாகவேயன்றி அல்லாஹ் ஹராமாக்கிய உயிரை கொலை செய்தல், வட்டியின் மூலம் சாப்பிடுதல், அனாதைகளின் பொருளை சாப்பிடுதல், போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடுதல், கற்புள்ள பேதைப் பெண்களின் மீது அவதூறு கூறுதல்’ என்று பதிலளித்தார்கள்.<br /><br /><span style="font-weight:bold;">34) கர்வம் கொள்ளுதல்!</span><br />“நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை” (அல்-குர்ஆன் 4:36)<br /><br />அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: ‘எவன் தன் தலைமுடியை வாரி அழகுபடுத்தி நல்ல ஆடைகளை அணிந்து கர்வத்துடன் தலை நிமிர்ந்து தன்னில் தானே பூரிப்பு அடைந்த வண்ணம் நடந்து செல்கின்றானோ அவன் பூமியில் திடுமெனச் செருகப்பட்டு மறுமை நாள் வரை அதன் அதலபாதாளத்தில் முட்டி மோதி மூழ்கடிக்கப்பட்டு விடுபவன் போலாவான்’ என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்)<br /><br /><span style="font-weight:bold;">35) தற்பெருமை, ஆணவம் கொள்ளுதல்!</span><br />‘(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்-குர்ஆன் 31:18)<br /><br />நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”எவர் தன்னைப் பற்றி பெரிதாக எண்ணுகிறாரோ அல்லது தனது நடையில் ஆணவம் கொள்கிறாரோ அவர் அல்லாஹவை சந்திக்கும் நாளில் அல்லாஹ அவர் மீது கோபம் கொண்ட நிலையில் சந்திப்பார்.” (ஆதாரம் : அல் அதபுல் முஃப்ரத்)<br /><br /><span style="font-weight:bold;">36) அளவு நிறுவையில் மோசடி செய்தல்</span>!<br />“அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர். ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள். நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா? (அல்-குர்ஆன் 83:1-4)<br /><br />“மேலும், வானம் - அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான். நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக. ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலை நிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள்” (அல்-குர்ஆன் 55:7-9)<br /><br /><span style="font-weight:bold;">37) பிறர் சொத்தை அபகரித்தல்!</span><br />அபூ ஸலமா(ரலி) அறிவித்தார்கள் : “எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறினேன். அவர்கள் சொன்னார்கள்; அபூ ஸலமாவே! (பிறரின்) நிலத்தை (எடுத்துக் கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், ‘ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க விடப்படும்” என்று கூறினார்கள்.<br /><br /><span style="font-weight:bold;">38) மோசடி செய்தல்!</span><br />“எந்த நபிக்கும் மோசடி செய்வது கூடாது. எவரேனும் மோசம் செய்வாராயின், அவர் மோசம் செய்ததை இறுதி நாளில் கொண்டு வருவார், அவ்வேளையில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அது சம்பாதித்த(தற்குரிய) பலனை(க் குறைவின்றிக்) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் எவ்வகையிலும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 3:161)<br /><br />“நிச்சயமாக அல்லாஹ் மோசம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (அல்-குர்ஆன் 8:58)<br /><br /><span style="font-weight:bold;">39) அநீதி இழைத்தல்!</span><br />“அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி), ஆதாரம் : புகாரி.<br /><br /><span style="font-weight:bold;">40) புறம் பேசுதல்!</span><br />முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)<br /><br />புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்) <br /><br />Kilai Rahman<br />Doha-QatarABDUL RAHMANhttp://www.blogger.com/profile/17272066359885172059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4509831693098583447.post-48969302702257353752010-06-08T01:50:00.000-07:002010-06-08T01:51:39.530-07:00மனிதனின் பலகீன நிலை பாரீர்!<span style="font-weight:bold;">மனிதனின் பலகீன நிலை பாரீர்!</span><br /><br />மண்ணிலிருந்து படைக்கப்பட்ட மனித இனத்தைப் பற்றி எல்லாம் வல்ல அல்லாஹ் கீழ்க்கண்ட குர்ஆன் வசனங்களில் தெளிவாக எடுத்துரைக்கிறான். அவை வருமாறு:<br />4:28 பலகீனமாக படைக்கப்பட்டவன்.<br />10:44 தனக்குத்தானே அநியாயம் செய்கிறான்.<br />11:9 நன்றி கெட்டவன்<br />14:34 மிக்க அநியாயக்காரன், நன்றி கெட்டவன்<br />16:4 பகிரங்க எதிரி<br />17:11 அவசரக்காரன்<br />17:67 நன்றி மறப்பவன்<br />17:85 மிக மிக அற்ப அறிவை மட்டுமே உடையவன்<br />17:100 கஞ்சனாக இருக்கிறான்<br />18:54 அதிகமாகத் தர்க்கம் செய்கிறான்<br />21:37 அவசரக்காரன்<br />22:66 நன்றி கெட்டவன்<br />29:66 இறைவனுக்கு மாறு செய்கிறவன்<br />33:72 அநியாயக்காரன், மூடன்(ஜாஹில்)<br />36:77 வெளிப்படையான தர்க்கவாதி<br />39:8 நேர்வழியிலிருந்து வழி கெடுக்கிறான்<br />41:49 நிராசைக்காரன்<br />42:48 நிராகரிப்பவன்<br />43:15 பகிரங்கமான பெரும் நிராகரிப்பவன்<br />70:19 அவசரக்காரன்<br />75:5 மறுமையை பொய்ப்பிக்கிறான்<br />76:27 மறுமையை மறந்து இவ்வுலகை நேசிக்கிறான்<br />80:17 நன்றி மறந்தவன்<br />87:16 மறுமையை மறந்து இவ்வுலகை தெரிவு செய்கிறான்<br />89:20 பொருளை அளவு கடந்து நேசிக்கிறான்<br />89:23 நரகம் முன் கொண்டு வரப்படும்போது உணர்வான்<br />90:4 கஷ்டத்தில் படைக்கப்பட்டவன்<br />95:5 செயலினால் கீழ்நிலை அடைகிறான்<br />96:6 வரம்பு மீறுகிறான்<br />100:6 இறைவனுக்கு நன்றி கெட்டவன்<br />100:8 பொருளை நேசிப்பதில் அளவு கடந்தவன்<br />103:2 பெரும் நஷ்டத்தில் இருக்கிறான்<br /><br />இந்த அனைத்து இறைவாக்குகளையும் மனிதன் படித்து விளங்குவானேயானால் தன்னுடைய இயலாமை-பலகீன நிலை பற்றித் தெளிவாக அறிவான். அவனிடம் ஆணவம், அகங்காரம், தற்பெருமை, நான்தான் என்ற மமதை ஒருபோதும் ஏற்படாது. தன்னைப் படைத்த இறைவனின் ஆற்றல், அதிகாரம் இவை அனைத்தையும் திட்டமாக, தெளிவாக உணர்வான்.<br /><br />இவ்வளவு குறைபாடுகள் உள்ள மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட அறிவோ மிகமிக அற்பமானது என்று 17:85ல் அல்லாஹ் கூறி மனிதனுடைய ஆற்றல் குறைவை வெளிப்படுத்தியுள்ளான். மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட அற்ப அறிவை இறைவனது நிறைவான அறிவுடன் ஒப்பிடும்போது, சமுத்திரத்தில் ஒரு ஊசியை முக்கி எடுத்தால் அதிலுள்ள நீரளவுதானும் மனித அறிவு இல்லை. அந்த அற்ப உலக அறிவிலும் தனி மனிதனுடைய அறிவு, கற்றது கைமண் அளவு; கல்லாதது உலகளவு என்பதை யாரே மறுப்பார்.<br /><br />பல்வேறு துறைகளில் சிரமப்பட்டு மிகக் கடினமாக உழைத்துப் படித்துப் பட்டங்கள் பல பெற்ற ஒரு பேரறிஞரிடம் முதலாம் வகுப்புப் படிக்கும் கத்துக்குட்டி இல்லை, ஒரு பிரிகேஜி பிஞ்சு எதிர்வாதம் செய்தால் அவனைப்பற்றி என்ன சொல்வோம். அதைவிட மிகமிகக் கேவலமான இழிவான நிலைதான் மிக அற்ப அறிவை உடைய மனிதன் அல்லாஹ் தெள்ளத் தெளிவாக இறக்கியருளிய அல்குர்ஆனிலுள்ள கட்டளைகளுக்கு மேல் விளக்கம் கொடுக்க முற்படுவதாகும்.<br /><br />தங்களை மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள், ஷேக்குகள் என பெருமை பேசும் மனிதர்கள் இப்படிப்பட்ட அறிவீனமான இழி செயலைச் செய்ய முற்படுகிறார்கள். மார்க்கத்தை-நேர்வழியை பல கோணல் வழிகளாக்கி-மதமாக்கி அது கொண்டு வயிறு வளர்ப்பவர்கள், நிச்சயம் அல்குர்ஆனில் உள்ளதை உள்ளபடி ஒருபோதும் சொல்ல முடியாது. 2:159,161,162, 7:175-179 இறைவாக்குகள் கூறும் உண்மை இதுவே. மனித சுபாவமே ஷைத்தானின் ஆசை வார்த்தைகளில் மயங்கி அல்லாஹ்வின் கட்டளைகளைப் புறக்கணித்து- நிராகரித்து (25:30) ஷைத்தானைப் பின் தொடர்வதாகவே இருக்கிறது. இது ஆதித் தந்தை ஆதத்தில் தொடங்கி, அவரது மகன், மார்க்கத்தை மதமாக்கும் புரோகிதர்கள், புரோகிதர்களது பக்தர்கள் என தொடர் கதையாகத் தொடர்கிறது. புரோகிதர்களின் வசீகர உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு நேரடியாக குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளைப் படித்து விளங்கி அவற்றில் உள்ளது உள்ளபடிச் செயல்படுகிறவர்களே வெற்றியாளர்கள்.<br /><br />By<br /><br />Abdul Rahman<br />DohaABDUL RAHMANhttp://www.blogger.com/profile/17272066359885172059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4509831693098583447.post-45165389211627348532010-06-05T01:54:00.000-07:002010-06-05T01:56:35.091-07:00Face Book (முகநூல்) என்ற போதை<span style="font-weight:bold;">அன்பின் சகோதரர்களே நண்பர்களே உங்கள் அனைவருக்கும் தூய இஸ்லாத்தின் சிறப்பான முகமனை தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />அஸ்ஸலாமு அலைக்கும்….<br /></span><br /><br />இன்றைய நவீன உலகம் நமது கைக்குல் சுருங்கிவிட்டது இப்படி சுருங்கியதால் மிகப்பெரிய நன்மைகள் இருப்பதைப் போல் தீமைகளும் இருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.<br /><br />இன்று கையில் கையடக்க தொலைபேசி இல்லாதவர்கள் இல்லை என்கின்ற அளவுக்கு அனைவரிடமும் தொலைபேசி விளையாடுகிறது.அதுபோல் பெரும்பாலான வீடுகளில் இணையத்தள பயன்பாடு அதிகரித்திருக்கிறது.இப்படி வீட்டிலிருந்து அனைத்து துறைகளிலுமே நவீனத்துவம் நுழைந்துதான் உள்ளது.<br /><br />இப்படிப்பட்ட நிலையில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம் இந்த இணையத்தள பயன்பாடு.இதனை எப்படி பயன்படுத்த வேண்டும்? யார் பயன்படுத்துவது போன்ற விபரங்கள் கண்டிப்பாக நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.<br /><br />ஏன் என்றால் இணையத்தளத்தில் எப்படி பல நல்ல விஷயங்கள் படிப்பதற்கு தேவையான தகவல்கள் இருக்கின்றதோ அது போல் அதற்கு சரி சமமாக கெட்ட விஷயங்களும் கொட்டிக்கிடக்கிறது.<br /><br />இந்த சந்தர்பத்தில் ஒரு உண்மை முஸ்லிம் இதில் அல்லாஹ்வைப் பயந்து நடந்து கொள்ள வேண்டியுள்ளது ஏன் எனில் எவ்வளவு சிறந்தவராக தன்னை ஒருவர் சொல்லிக் கொண்டாலும் சந்தர்பம் அவரை நல்லவரா கெட்டவரா என்று காட்டிக் கொடுத்து விடும்.<br /><br />இப்படி இணையத்தள பாவனையாளர்கள் இன்று அதிகமானோல் தங்களை தாங்கள் யார் என்று அடையாளப் படுத்தும் ஓர் இடமாக இருப்பதுதான் முகநூல் (Face Book) இதில் உலகத்தில் கிட்டத்தட்ட (02.12.2009 கணிப்பின் படி) முன்னூற்று ஐம்மது மில்லியனுக்கு அதிகமானவர்கள் வாசகர்களாக உலா வருகிறார்கள்.அத்துடன் சென்ற வருட கணிப்பின் படி உலகில் முதல் இடம் பிடித்திருக்கும் இணையத்தளமும் இதுதான்.<br /><br />350 மில்லியன் வாசகர்களில் கிட்டத்தட்ட பண்ணிரண்டு வீதமானவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.<br /><br /><span style="font-weight:bold;">பேஸ்புக் என்றால் என்ன?</span><br /><br /><br />முகநூல் என்று அழைக்கப் படக்கூடிய பேஸ்புக் என்ற இந்த இணையத்தளத்தில் இன்று அதிகமான ஆண்களும் பெண்களும் வாசகர்களாகியுள்ளனர்.இந்த இணையத்தளம்<br />2004 அன்று Mark Elliot Zuckerberg என்பவரால் உருவாக்கப் பட்டதாகும். ஆரம்பத்தில் இவர் facemash எனும் இணையத்தளத்தையே கண்டுபிடித்தார். பின்னர் தொழிநுட்ப வளர்ச்சி காரணமாக இவரது facemash ஆனது இவரால் facebook ஆக மாற்றப்பட்டது. இரண்டாயிரத்து ஆராம் ஆண்டிலிருந்து 13 வயதிற்கு மேற்பட்ட எவரும் facebook ஜப் பயன்படுத்த முடியுமென்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டது.<br /><br />குறிப்பிட்ட காலப்பகுதிக்குல் இந்த இணையத்தளம் மிகப் பெரியதொரு வாசகர் வட்டத்திற்கு உரியதாக மாரியது.<br /><br />பேஸ் புக்கில் நடப்பது என்ன?<br /><br />இன்று நண்பர்களை சேமிக்கிறோம் என்று சொல்லித்தான் இளைஞர்கள் இந்த இணையத்தளத்தில் உருப்பினர்களான மாறுகிறார்கள்.<br /><br />ஆனால் இந்த இணையத்தளத்தில் எப்படிப்பட்ட நற்புகள் உருவாகிறது என்றால் மிகவும் ஆபாசமாகவும்,அந்தரங்கத்தை வெளிப்படுத்தக் கூடியதாகவும் மொத்தத்தில் ஒரு உண்மை மனிதன் அங்கீகரிக்க முடியாத ஒரு நற்புதான் இதில் உருவாகிறது.<br /><br />உதாரணத்திற்கு ஒருவர் இந்த பேஸ்புக்கில் தனக்குறிய உருப்பினர் அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டவுடன் அவர் பற்றிய விபரங்களை அதிலே அவர் இடுவதற்கான அவருக்குறிய பகுதி அதிலே ஒதுக்கப் படும் பின் அவர் அதிலே இட்ட தகவல்களை படிப்பதற்கு அணைவருக்கும் அனுமதிக்கப் பட்டுவிடும்.<br /><br />தனது புகைப்படம்.<br /><br />தான் யார்?<br /><br />எந்த நாட்டை சேர்ந்தவர்?<br /><br />தொழில் செய்பவரா? அல்லது மாணவரா?<br /><br />இது போன்ற என்னோரன்ன தகவல்கள் அதிலே பதியப் படும் இவையனைத்தும் அனைவரும் படிப்பதற்கு ஏற்ற வகையில் வெளிப்படையாகவே இருக்கும்.<br /><br />இப்படியிருக்கும் போது இதில் ஒருவர் இன்னொருவருடன் நற்பை ஏற்படுத்துவார் அந்த நேரத்தில் ஆண் பெண் என்ற வித்தியாசமே இருக்காது.<br /><br />ஆரம்பத்தில் வேறுவிதமாக நற்பு என்ற பெயரில் உருவெடுக்கும் இந்த உறவு காலப்போக்கில் காதலாக,காமமாக கள்ளத் தொடர்புகளாக மாறுவதை இதில் தொடர்புல்ல எவரும் மறுக்க முடியாது.<br /><br />அத்துடன் இப்படிப்பட்ட பேஸ்புக் தொடர்பால் பாதிக்கப் பட்டு வாழ்க்கை இழந்தவர்களின் வரலாறுகளும் பல உண்டு என்பதும் உண்மை.<br /><br />இந்த வகையான நற்புகளில் ஈடுபடும் சிலர் இதற்கு ஒரு காரணத்தை பதில் என்ற பெயரில் குறிப்பிடுகிறார்கள்.<br /><br />அதாவது நாங்கள் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்கிறோம் நமது மார்கத்தை உலகத்திற்கு எத்தி வைக்கிறோம் இதுதான் அவர்களின் பதில்.<br /><br />முதலில் ஒரு இந்து அன்பரிடம் அல்லது கிருத்தவ நண்பரிடம் நாம் நமது மார்கத்தை பிரச்சாரம் சைகின்ற போது நாம் ஒரு இந்துவாகவோ கிருத்தவராகவோ மாற வேண்டிய அவசியம் இல்லை அப்படி நமது மார்கம் நமக்கு கற்றுத்தரவும் இல்லை.<br /><br />ஆனால் இந்த பேஸ்புக் (முகநூல்) பிரச்சாரகர்கள்(?) அத்தனைபேரும் நாங்கள் இதிலே பிரச்சாரம் செய்கிறோம் என்று வாய் கூசாமல் கூறுகிறார்கள்.<br /><br />அத்தனை அனாச்சாரமும் கொட்டிக்கிடக்கின்ற இடத்தில் தான் நீங்களும் சேர வேண்டுமா? அப்படி உங்களுக்கு அவர்களிடம் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்ய வேண்டுமென்றால் வேறு எத்தனையோ வழிமுறைகளை கையாளலாமே? அதை எல்லாம் விட்டு விட்டு ஏன் ஒரு வயதுக்கு வந்த ஆண் ஒரு வயதுக்கு வந்த அன்னிய பெண்ணிடம் மாத்திரம் பேச வேண்டும் பழக வேண்டும்?<br /><br />போட்டோ இல்லை என்றால் அல்லது குறிப்பிட்ட அந்த நபர் பெண்ணாக இல்லை என்றால் யாரும் அவர்களுக்கு பிரச்சாரம் செய்ய முன்வருவதில்லை.இது தான் பேஸ்புக் பிரச்சாரத்தின் லச்சனம்.<br /><br />ஆக அன்பின் இஸ்லாமிய நெஞ்சங்களே! சகோதர சகோதரிகளே!<br /><br />அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள் facebook ஐ தவிர்ந்து கொள்ளுங்கள்.ABDUL RAHMANhttp://www.blogger.com/profile/17272066359885172059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4509831693098583447.post-81965071994143597182010-05-04T06:53:00.000-07:002010-05-04T06:57:02.788-07:00வெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை!بسم الله الرحمن الرحيم<br />سر النجاح<br />ومفتاح الخير والبركة والفلاح<br /><br />ஒரு வாலிபன் ஒரு பெண்னை திருமணம் செய்வதற்காக வேண்டி இஸ்திஹாரா தொழுகையை தொழுகின்றான்; பின்னர் திருமணத்துக்காக தயாராகின்றான்; அப்போது அவனது சகோதரன் அப்பெண்னை திருமணம் முடிப்பதை விட்டும் அவனைத் தடுக்கின்றான். வேறு குடும்பத்தில் பெண் பார்க்க வேண்டுகிறான். அந்த வாலிபனோ, தான் பார்த்த பெண்னை மணம் முடிப்பதற்காக தனது சகோதரனை கவரும் வகையில் பல முயற்சிகளை மேற்கொள்கிறான்; ஆனால் அனைத்து முயற்சிகளும் பயனளிக்கவில்லை. இறுதியில் வேறொரு பெண்னை மணக்கின்றான். குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பின்னர் அவ்வாலிபனுக்கு முதலாவது திருமணம் பேசப்பட்ட அப்பெண் மரணிக்கின்றாள். தற்போது அவனுக்கு தான் தொழுத அந்த இஸ்திஹாரா தொழுகையில் முழுமையான திருப்தி ஏற்பட்டதோடு தன்னை தடுத்த தனது சகோதரனின் விருப்பமின்மை அவனுக்கு நல்லதாக அமைந்தது.<br /> <br />ஒரு வாலிபன் தொழிற்சாலை ஒன்றில் காலை மாலை என இரண்டு நேரங்களிலும் வேலை பார்த்து வந்தான்; ஆனால் அவனது சம்பளமோ தனது அடிப்படைத் தேவையைக்கூட நிறைவேற்ற போதாது; அல்லாஹ் அவனுக்கு நேரான வழியைக் காட்டினான்; அல்- குர்ஆன் மனனப்பிரிவில் சேர்ந்தான்; அத்தோடு பள்ளியில் நடக்கக்கூடிய மார்க்க வகுப்புக்களிலும், மார்க்க சொற்பொழிவுகளிலும் தவறாமல் கலந்து கொள்பவனாக இருந்தான். என்றாலும் அவனது தொழிலோ அதற்குத் தடையாகவே இருந்து வந்தது. இதனால், தான் மனைவி மக்களுடன் வீட்டில் இருப்பதற்கும் வீட்டின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் மிக மிக குறைவாகவே அவனுக்கு நேரம் கிடைத்தது.<br /><br />ஒரு நாள் அறிஞர் ஒருவரிடம் சென்று, தனது கஷ்டத்தை, முறைப்பாட்டை முன் வைக்கின்றான். அவர் சில அறிவுரைகளைக் கூறினார். அன்றிலிருந்து அந்த வேலையை வெறுத்தவனாக தான் அல்-குர்ஆனையும் கற்று, மார்க்க வகுப்புக்களிலும் கலந்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு வேறொரு வேலையை தேடுகிறான். ஆனாலும் எங்கு தான் செல்ல? பின்னர் மார்க்க அறிஞர் அவனை பார்த்து, நன்மையை, தனது தேவையை வேண்டி தொழும் தொழுகையைப் பற்றி (இஸ்திகாரா தொழுகை) தெரியுமா? என்று கேட்க, அவன் தெரியாது என்று கூறினான். பின்னர் அதனை கற்றுக் கொடுத்தார். அவன் உடனே இஸ்திகாரா தொழுகையைத் தொழுதுவிட்டு இறைவன் பால் நம்பிக்கை வைத்தவனாக பிரார்திக்கின்றான். பின்னர் முயற்ச்சி செய்து ஒரு வேலையை பெற்றுக் கொள்கின்றான்.<br /> <br />சிறிது காலத்துக்குப் பிறகு மார்க்க அறிஞரிடம் மகிழ்ச்சியுடன் சநதோஷமான நிலையில் சென்று கூறினான். அல்லாஹ் எனது கஷ்டத்தை நீக்கினான்; குறைந்த நேரத்தில் அதிக சம்பளத்தை பெறக்கூடிய ஒரு தொழிலைப் பெற்றுக் கொண்டேன்; இதன் மூலம் மார்க்க வகுப்புக்களிலும், தனது மனைவி மக்களுடனும் இருப்பதற்கு மிக மிக வசதியாக இருப்பதாக கூறினான். <br /><br />இதனது இரகசியம் தான் என்ன? இவர்களது வெற்றிக்கு காரணமாக அமைந்தது எது? இதுதான் இஸ்திகாரா தொழுகையின் இரகசியம்! இதனை பற்றிய தகவல்களை பின்வருமாறு பார்ப்போம்.<br /><br /> <span style="font-weight:bold;">இஸ்திகாரா தொழுகையின் முக்கியத்துவமும் சிறப்பும்!</span><br /> <br />மனிதனுக்கு எவ்வளவு தான் அறிவு ஞானம் கொடுக்கப்பட்டிருந்தாலும் பல திறமைகள் இருந்தலும், தன்னைப் படைத்த இறைவன் பால் ஒவ்வொரு நொடியிலும் அவனுக்குத் தேவைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. ஒரு மனிதன் குறித்த வேலையை செய்வதற்கு பல திட்டங்களை இட்டு எந்த முறையான வழிகளை அதற்கு கையால வேண்டுமோ அனைத்தையும் கையாண்டு செய்வதற்கு முற்படலாம். இறுதியில் அவைகள் அனைத்தும் பிரயோஜனம் அற்றவைகளாக மாறுகின்றன.<br /><br />ஒரு மனிதனிடம் இரண்டு விஷயங்களுக்கு மத்தியில் தடுமாற்றம் ஏற்படலாம்! எதனை செய்தால் தனது குறிக்கோளை அடைய முடியும்? என்பதில் முடிவை காண முடியாதவனாக இருப்பான்! சில வேலை அச்செயல் அவனை தான் விரும்பாத முடிவுக்கு கொண்டு சேர்க்கும்; அல்லது அது அவனை அழித்து விடும்! இவ்வாறான நிலைமைகளில் அவன் தடுமாற்றமுள்ளவனாக இருப்பான்.<br /><br />இவ்வாறாண நிலைமைகளில் ஜாஹிலியா கால அரேபியர்கள் இவற்றிலிருந்து விடுபடுவதற்காக சில வழிமுறைகளைக் கையாண்டார்கள். அதுதான் அம்பெய்து குறி பார்ப்பதாகும்! அவர்களிடம் மூன்று சீட்டுகள் இருக்கும்; அவற்றில் ஒன்றில் “செய்” என்றும் மற்றதில் “செய்யாதே” என்றும் மற்றொன்றில் “ஒன்றும் இருக்காது”! இவற்றில் “செய்”என்ற சீட்டு விழுந்தால் குறித்த அக்காரியத்தைச் செய்வார்கள். “செய்யாதே” என்ற சீட்டு விழுந்தால் அதனைச் செய்ய மாட்டார்கள்.<br /><br />“ஒன்றும் இல்லாத” சீட்டு விழுந்தால் ஏதோ ஒன்று விழும் வரை தொடர்ந்து சீட்டுகளை போட்டுக்கொன்டே இருப்பார்கள். இவ்வாறான நிலைமைகளில் இருந்து அல்லாஹ் முஃமின்களை பாதுகாத்தான். அதனை அவர்களுக்கு தடை செய்தான்.<br /><br />قال تعالى (وأن تستقسموا بالأزلام ذلكم فسق….) سورة المائدة :03<br /><br />அல்லாஹ் கூறுகிறான்:<br /><br />“நீங்கள் அம்பெறிந்து குறிபார்ப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளன. இவை பாவமாகும்” (அல்குர்-ஆன் 5:3)<br /><br />இதற்கு பகரமாக, நன்மையை நாடி தொழும் தொழுகையை (ஸலாத்துல் இஸ்திகாரா) நபி (ஸல்)அவர்கள் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். இதில் இருக்கக்கூடிய பிரார்தனை, “அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தல், உதவி தேடுதல் அனைத்து சக்திகளை விட்டும் ஏக இறைவனது சக்தியை மாத்திரம் எதிர்பார்த்தல் முழுமையாக அவனது செயல்கள் வர்னனைகளை ஒருமைப்படுத்தல் அல்லாஹ்வையே பொறுப்பு சாட்டுவது போன்ற முக்கியமான கருத்துக்களை உள்ளடக்கிய பிரார்த்தனையாகும்.”<br /><br />அல்லாஹ் மனிதனிடத்தில் கொண்ட கருனையால் தனது அடியானுக்கு (இஸ்திகாரா தொழுகையை) செய்யும்படி சொல்கின்றான். இச்செயலை செய்வதற்கு படைத்த இறைவனுக்கு முன்னால் ஒரு சில நிமிடங்களை மாத்திரமே செலவு செய்ய வேண்டும. இக்காரியத்தைச் செய்கின்றவர்கள் மிக மிக அரிதே! இத்தொழுகையின் மூலம் தான் நாடியதை தனது இறைவனிடம் கேட்பான்! அது மிகச் சிறிய விஷயமாக இருந்தாலும் அல்லது மிகப் பெரிய விஷயமாக இருந்தாலும் சரியே!<br /><br />இத்தொழுகையின் மூலமும், பிரார்த்தனையின் மூலமும் ஒரு அடியான் சிறிய விஷயமொன்றை நாடலாம்! ஆனால் காலப் போக்கில் அப்பிரார்தனையின் மூலம் அந்த விஷயம் பெரிய நன்மையைத் தரக்கூடியதாக மாறலாம்! இதனால் அனைத்து நன்மையான சந்தர்பங்களிலும் இத்தொழுகையைத் தவறவிடக் கூடாது. இதனது முக்கியத்துவத்தை நபி (ஸல்) அவர்கள் எமக்கு காட்டித் தந்தார்கள்! அவர்கள் தனது தோழர்களுக்கு அல்-குர்ஆனில் ஒரு சூராவை கற்று கொடுப்பதை போன்று இத்தொழுகையைக் கற்று கொடுத்தார்கள்.<br /><br />ஜாபிர் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:<br /><br />“நபி (ஸல்) அவர்கள் அல்-குர்ஆனில் ஒரு சூராவை கற்றுத் தருவதை போன்று இஸ்திகாரா தொழுகயைக் கற்றுதருபவராக இருந்தார்கள்”<br /><br />இஸ்திகாரா தொழுகையின் சிறப்பையும் முக்கியத்துவத்தையுமே இந்த நபிமொழி உறுதிப்படுத்துகின்றது.<br /><br /><span style="font-weight:bold;">இஸ்திகாரா தொழுகையை தொழும் முறை:</span><br /><br />பர்ளு தொழுகை அல்லாத இரண்டு ரக்அத்துக்களை இஸ்திகாரா தொழுகை என்ற என்னத்தோடு தொழ வேண்டும். அதில் சூரா பாதிஹாவையும் அதன் பின்னால் அல்குர்-ஆனில் சில வசனங்களையும் ஓத வேண்டும். சுஜூதில் அல்லது அத்தஹியாத்தில் அல்லது ஸலாம் கொடுத்ததற்கு பிறகு இஸ்திகாரா நபிமொழியில் வரக்கூடிய பிரார்த்தனையை, துஆவை பொருள் விளங்கி ஓதவேண்டும். தொழுகைக்கு பிறகு பிரார்த்திப்பதே மிக சரியான முறையாகும்.<br /><br />இஸ்திகாரா தொழுகையைப் பற்றி வரக்கூடிய நபிமொழியும் பிரார்தனையும்:<br /><br /> عن جابر رضي الله عنهما قال:كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا الاستخارة في الأمور كلها كما يعلمنا السورة من القرآن،يقول:إذا هم أحدكم بالأمر فليركع ركعتين من غير الفريضة ثم ليقل : اللهم إني أستخيرك بعلمك، وأستقدرك بقدرتك، وأسألك من فضلك العظيم،فانك تقدر ولا أقدر،وتعلم ولا أعلم،وأنت علام الغيوب،اللهم إن كنت تعلم أن هذا الأمر- ويسمي حاجته-خير لي في ديني ومعاشي وعاقبة أمري-أو<br /><br />قال عاجل أمري وآجله-فاقدره لي ويسره لي،ثم بارك لي فيه،وان كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري- أو قال:عاجله وآجله-فاصرفه عني واصرفني عنه،واقدر لي الخير حيث كان ثم أرضني به. (أخرجه البخاري. )<br /><br />“அல்லாஹூம்ம இன்னீ அஸ்தகீருக பி இல்மிக, வ அஸ்தக்திருக பீகுதுரதிக, வஅஸ் அலுக மின் பழுலிகல் அழீம், பஇன்னக தக்திர் வலா அக்திர், வதஃலம் வலா அஃலம், வ அன்த அல்லாமுல் குயூப், அல்லாஹூம்ம இன் குன்த தஃலம் அன்ன ஹாதல் அம்ர – (தேவையைக் குறிப்பிட வேண்டும்) -கைருன் லீ பீ தீனீ வமஆஷீ வஆகிபது அம்ரீ பக்துர்கு லீ வயஸ்ஸிர்கு லீ சும்ம பாரிக்லீபீ, வ இன்குன்த தஃலம் அன்ன ஹாதல் அம்ர ஷர்ருன் லீ பீதீனீ வமாஆஷீ வ ஆகிபது அமரீ பஸ்ரிப்கு அன்னீ வஸ்ரிப்னீ அன்கூ வக்துர்லியல் கைர ஹைசு கான சும்ம அர்லினீ பீஹ்”<br /><br /><span style="font-weight:bold;">இதன் பொருள்:</span><br /><br />“யா அல்லாஹ்! நான் உன்னிடம் உனது ஞானத்தைக் கொண்டு நன்மையை யாசிக்கின்றேன்; மேலும் உனது ஆற்றலைக் கொண்டு ஆற்றலை யாசிக்கிறேன்; மேலும் உன்னிடமிருந்து உனது மகத்தான அருளை யாசிக்கிறேன்; ஏனெனில் நீ ஆற்றல் பெற்றவன்; என்னிடம் எந்த ஆற்றலும் இல்லை. மேலும் நீ நன்கு அறிபவன். நான் எதனையும் அறியமாட்டேன். மேலும் நீயே மறைவானவை அனைத்தும் அறிந்தவன்! யாஅல்லாஹ்! இந்த விஷயம் (விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்) எனக்கும், எனது தீனுக்கும், எனது வாழ்கைக்கும், எனது விவகாரத்தின் முடிவுக்கும்-இவ்வாறும் சேர்த்துக் கொள்ளலாம். எனது உடனடியான, தாமதமான விவகாராத்திற்கும் – நன்மையானது என நீ அறிந்தால் இதனை எனது விதியில் சேர்ப்பாயாக! மேலும் இதனை எனக்கு எளிமையாக்கித் தருவாயாக! பிறகு இதில் எனக்கு பாக்கியம் அருள்வாயாக! ஆனால் இந்தப் பணி எனக்கு, எனது தீனுக்கும் எனது வாழ்கைக்கும் எனது விவகாரத்திம் முடிவுக்கும் – இவ்வாறு சேர்த்துக் கொள்ளலாம். எனது உடனடியான், தாமதமான விவகாரத்துக்கும்) தீமையானது என நீ அறிந்தால் இதனை என்னை விட்டு அகற்றி விடுவாயாக! மேலும் எனது விதியில் நன்மையை சேர்ப்பாயாக! அது எங்கிருந்தாலும் சரியே! பிறகு அதில் எனக்கு திருப்தி ஏற்படுத்தித் தருவாயாக!” (ஆதாரம் புகாரி)<br /><br /><span style="font-weight:bold;">இஸ்திகாரா தொழுகையை தொழும் நேரம்</span>:<br /><br />இஸ்திகாரா தொழுகைக்கு என்று குறிப்பிட்ட நேரங்கள் கிடையாது. எனினும் தொழுவதற்கு தடுக்கப்பட்ட நேரங்களை தவிர்ந்து கொள்வது நல்லதே! பஜுர் தொழுகையிலிருந்து சூரியன் ஒரு ஈட்டி உயரும் வரை உள்ள நேரம், மற்றும் அஸருடைய நேரம் முடிந்ததிலிருந்து சூரியன் மரையும் வரை உள்ள நேரங்களையும் குறிப்பிடலாம். இவ்வாறான நேரங்களில் நபிலான தொழுகைகள் தடுக்கப்பட்டுள்ளன. ஏதாவதொரு காரணத்துக்காக தொழும் தொழுகையை தொழலாம். உதாரணமாக பள்ளியுடைய கானிக்கை தொழுகை (தஹீயதுல் மஸ்ஜித்) மேலும் பிரார்த்தனைகள் ஏற்று கொள்ளப்படும் நேரங்களில் தொழுவது வரவேற்கத்தக்க விஷயமாகும். உதாரணமாக இரவின் கடைசி பகுதி, பாங்குக்கும் இகாமத்துக்கும் இடைப்பட்ட நேரம், இஸ்திகாரா தொழுகை தொழ தடுக்கப்பட்ட நேரத்தை விட்டும் பிந்திவிடுமானால் அந்நேரத்தில் தொழலாம்.<br /><br /><span style="font-weight:bold;">தவறான நம்பிக்கை:</span><br /><br />இஸ்திகாரா தொழுகையை இரவில் தூங்குவதற்கு முன் தொழுதுவிட்டு தூங்கினால் அத்தூக்கத்தில் ஒரு கணவு காண்பார்; அக்கணவே சரியானது என்று சில மனிதர்கள் தவறாக இதனை புரிந்திருக்கின்றார்கள். இது முற்றுமுழுதாக பிழையான கருத்தும் நபிமொழிக்கு மாற்றமான முறையும் ஆகும். மேற்குறிப்பிட்டது போல் இத்தொழுகைகென்று குறிப்பிட்ட நேரம் இல்லை. அத்தோடு இஸ்திகாரா தொழுபவர் கணவு காண்பது நிபந்தனையும் அல்ல! ஆகையால் எப்பொழுது ஒரு மனிதனுக் தேவை வருகின்றதோ அப்பொழுது அவன் தொழுவான். பின்னர் அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை வைப்பான்.<br /><br /><span style="font-weight:bold;">இஸ்திகாரா தொழுவதற்கு அனுமதிக்கப்பட்ட விஷயங்கள்:</span><br /><br />அனைத்து விஷயங்களுக்காகவும் தொழலாம்! அது மிகச் சிறிய விஷயமாக இருந்தாலும் அல்லது மிக பெரிய விஷயமாக இருந்தாலும் சரியே! எத்தனை மனிதர்களது சிறிய விஷயங்கள் மிக பெரிய விஷயங்களாக மாறி இருக்கின்றன! இந்த நபிமொழியில் வரக்கூடிய “அனைத்து விஷயங்களிலும்” என்ற சொல் இதற்கு ஆதாரமாக இருப்பதோடு அதனை உறுதிப்படுத்துகின்றது.<br /><br /><span style="font-weight:bold;">ஆனால் இரண்டு விஷயங்களை விட்டு தவிர்ந்து கொள்ள வேண்டும்:</span><br /><br />(1) கட்டாயமான கடமைகள், தடுக்கப்பட்டவைகள்; உதரணமாக ஒரு மனிதன் லுஹர் தொழுவதற்காக வேண்டி லுஹர் தொழுவதா? இல்லையா? என்பதற்காக இஸ்திகாரா தொழுவது கூடாது! அல்லது ஹராமக்கப்பட்டிருக்கின்ற வட்டியை வாங்குவதற்கு முன்னால் வட்டியை வாங்குவதா? இல்லையா? என்பதற்கு இத்தொழுகை தொழக் கூடாது! ஏனெனில் லுஹர் தொழுகை என்பது ஒரு கடமையான தொழுகை. அதனை ஒரு முஸ்லிம் தொழுதுதான் ஆக வேண்டும். அத்தோடு வட்டி எடுப்பது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட விஷயங்களில் ஒன்று. அதனை ஒருவன் தவிர்ந்துதான் ஆகவேண்டும்.<br /><br />(2) வழமையான விஷயங்கள், உதாரணமாக ஒருவன் உண்பதற்கும் குடிப்பதற்கும் இஸ்திகாரா தொழ முற்படுகிறான் உண்பதா? குடிப்பதா? என்று! இதற்கு இஸ்திகாரா தொழவேண்டிய தேவையும், பிரார்திக்க வேண்டிய அவசியமும் கிடையாது. ஏனெனில் ஒருவன் உண்பதும் குடிப்பதும் இன்றியமையாத தேவைகளாகும்.<br /><br /><span style="font-weight:bold;">அல்லாஹ்வினால் தேர்ந்தெடுத்தவற்றிலே நன்மையுண்டு:</span><br /><br />ஒரு முஸ்லிம், ஒரு விஷயத்துக்காக இஸ்திகாரா தொழுவான்; ஆனால் அந்த விஷயத்தையே முக்கியத்துவப்படுத்தி அதிலே உறுதியாக இருப்பான்; அல்லாஹ் அவனுக்கு அதனை விதியாக்கி இருக்கமாட்டான்! உதாரணமாக, ஒருவன் தனக்கு விரும்பிய பெண்னை திருமணம் முடிப்பதற்காக இஸ்திகாரா தொழலாம். ஆனால் அல்லாஹ்வின் விதியில் அது எழுதப்பட்டிருக்காது. இவ்வாறான நிலைமையில் அல்லாஹ்வின்பால் அவன் நல்லெண்ணம் வைக்க வேண்டும். அவனது விதியை முழுமையாக பொருந்திக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கபட்டவற்றிலே நன்மையும் வெற்றியும் உண்டு என்று அவன் நம்ப வேண்டும். சில வேளைகளில் அவன் விரும்பிய அப்பெண் அவன் மோசமாகுவதற்கு அல்லது பாவியாகுவதற்கு காரணமாக இருக்கலாம்! ஆனால் அதனை அவன் அறியமாட்டான். யாவற்றையும் அறிந்த அல்லாஹ்வே மிக அறிந்தவன்.<br /><br />قال تعالى(وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون)<br /><br />سورة البقرة :216<br /><br />அல்லாஹ் கூறுகிறான்:<br /><br />“நீங்கள் ஒன்றை வெறுப்பீர்கள்; அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்; நீங்கள் ஒன்றை விரும்புவீர்கள்; அது உங்களுக்கு தீங்காகவும் இருக்கலாம்; நீங்கள் அறிய மாட்டீர்கள் அல்லாஹ்வே மிக அறிந்தவன்” (அல்-குர்ஆன் 2:216)<br /><br />அதிகமான மக்கள் பல விஷயங்களை வெறுத்திருப்பார்கள்; ஆனால் அவைகள் அவனது விதியில்-அல்லாஹ்வினால் நன்மையுள்ளதாக எழுதப்பட்டிருக்கும்! பிற்காலத்தில் அதில் அவனுக்கு நன்மையாக அமைகின்றது. அதே போன்று எத்தனையோ மனிதர்கள் ஏராளமான விஷயங்களை விரும்பி இருப்பார்கள். விரும்பப்பட்ட அவ்விஷயங்கள் அவனை அழிவின்பால் இட்டுச் சென்றிருப்பதைப் பார்க்கலாம். இதனையே அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.<br /><br />قال تعالى (والله يعلم وأنتم لا تعلمون)سورة البقرة :216<br /><br />அல்லாஹ் கூறுகின்றான்:<br /><br />“அல்லாஹ் தான் நன்கறிபவன் நீங்கள் அறிய மாட்டீர்கள்” (அல்-குர்ஆன் 2:216)<br /><br />சில விஷயங்களை பொருத்தவவையில், அல்லாஹ் ஒரு மனிதனுக்கு நன்மையை நாடி இருப்பான். ஆனால் அதில் அவனுக்கு வெற்றி இருக்காது! உதாரணமாக ஒரு மனிதன் ஒரு பெண்னை திருமணம் செய்வதற்காக இஸ்திகாரா தொழுது பிரார்திப்பான்; அத்திருமணம் நடக்கும்; குறித்த அப்பெண்னை மணப்பான்; காலப்போக்கில் அத்திருமணம் சீர்குழைந்துவிடும்; எனவே இச்சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வை பொருந்திக்கொள்ள வேண்டும். அதுவும் அவனுக்கு நல்லதாகவே இருக்கும் அதனை அவன் அறியமாட்டான்<br /><br /><span style="font-weight:bold;">இஸ்திகாரா தொழுகையினால் ஏற்பட்ட ஒரு உண்மை நிகழ்வொன்றை காண்போம்:</span><br /><br />ஹிஜ்ரி 1400 ஆம் ஆண்டு ஒருவர் பிரயாணத்தை மேற்கொள்வதற்காக ரியாத் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றார். அவர் விமான நுழைவு சீட்டையும் (Boarding Pass) பெற்று விமானத்துக்கு புறப்படும் இடத்தில், அழைக்கும் வரை எதிர்பார்த்து இருந்தார். அப்போது தன்னை அறியாமல் தூக்கம் அவரை மிகைத்து விட்டது. திடீரென விழித்தபோது, விமானம் புறப்படக்கூடிய நேரம் நெருங்கிவிட்டது; வாயில்கள் மூடப்பட்டுவிட்டன; அப்போது அவருக்கு விமானத்தில் ஏறுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை!<br /><br />விமானத்திற்குள் நுழைவதற்காக தன்னால் முடியுமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். இறுதியில் அனைத்துமே பயனளிக்கவில்லை! பின்னர் தான் கவலையுற்றவராக தடுமாறிக் கொண்டிருந்தார். குறித்த விமானம், ஒரு சில வினாடிகளில் ஏதோ ஒரு கோளாறு இருப்பதாக அடுத்த விமான நிலையத்திற்கு தரையிறக்குமாறு கட்டளையிடப்பட்டது. ஆனால் தரையிறக்கப்படுவதற்கு முன்னரே 300 பிரயாணிகளுடன் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இதனது இரகசியம் என்ன?<br /><br />அம்மனிதர் தீப்பிடிக்கும் என்று கற்பனைக் கூட செய்திருக்க மாட்டார்! இதுதான் அல்லாஹ்வின் ஏற்பாடு! நிச்சயமாக அம்மனிதருக்கு பிரயாணம் செய்ய கிடைக்கவில்லை; அதன் மூலம் அவருக்கு நலவு இருந்திருக்கின்றது!<br /><br />எப்பொழுது துஆவுடன் மாத்திரம் சுருக்கிக்கொள்ள வேணடும்?<br /><br />சிலருக்கு சில சந்தர்ப்பத்தில் தொழுகையை நிறைவேற்ற முடியாதவர்களாக இருப்பார்கள்! மாதவிடாய், நிபாஸ் நிலைமைகளில் இருக்ககூடிய பெண்களைப் போன்றவர்ககளைக் கூறலாம். இவர்களை பொருத்தவரையில் தொழ முடியுமான நிலை வரும்வரை தொழுகையைப் பிற்படுத்தலாம். குறித்த அச்சந்தர்ப்பத்தைப் பிற்படுத்த முடியாவிட்டால், தொழுதுதான் ஆகவேண்டுமானால் துஆவுடன் மாத்திரம் நிறுத்திக் கொள்ளலாம். அதாவது நபிமொழியில் வரக்கூடிய பிரார்தனையை மாத்திரம் கேட்பார். இதற்கு பின்வரக்கூடிய வசனங்கள் ஆதாரமாக அமைகின்றன.<br /><br />قال تعالى(لا يكلف الله نفسا إلا وسعها….)سورة البقرة286<br /><br />அல்லாஹ் கூறுகின்றான்:<br /><br />“அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை” (அல்-குர்ஆன் 2:286)<br /><br />قال تعالى (فاتقوا الله ما استطعتم)سورة التغابن:16<br /><br />அல்லாஹ் கூறுகின்றான்:<br /><br />“உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்” (அல்குர்-ஆன் 64:16)<br /><br />சகோதரா! உனது வியாபாரத்தை துவக்குவதற்கு முன்னால் அல்லது தொழிற்சாலைக்கு வேலையாட்களை சேர்ப்பதற்கு முன்னால் இஸ்திகாரா தொழுகையை தொழுதுகொள்!<br /><br />சகோதரா! நீ ஒரு தொழிலுக்காக விண்ணப்பிப்பதற்கு முன்னால் அதில் நன்மையுண்டா? தீமையுண்டா? என்பதனை உன்னால் அறிய முடியாது! அல்லது ஒரு நோயாளி தனது நோயை குணப்படுத்த வைத்தியசாலைக்கு செல்வதற்கு முன்னால், அல்லது ஒரு வீட்டையோ, தொலைதொடர்பு சாதனங்களையோ, ஒரு வாகனத்தையோ வாங்குவதற்கு முன்னால் இஸ்திகாரா தொழுகையை தொழுது பிரார்தித்துக்கொள்!<br /><br />சகோதரா! திருமணத்திற்காக தயாராகுவதற்கு முன்னால், திருமண பேச்சுவார்த்தையை துவக்குவதற்கு முன்னால், மணமகன் அல்லது மணமகளைப் பார்ப்பதற்கு முன்னால் இஸ்திகாரா தொழுகையை தொழுது பிரார்தித்துக்கொள்!<br /><br />சகோதரா! இஸ்திகாரா தொழுகை வெற்றியின் ஆரம்ப படித்தரமாகும்! அல்லாஹ்வின் நாட்டத்தால் இம்மை மறுமை வெற்றிக்கு காரணமாகவும் அமைகின்றது! அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடந்து அவனுடன் உண்மையான முறையில் நடந்துகொண்டால், அவன் மீதே நம்பிக்கை வைத்தால், வெற்றியின் நுழைவாயில்கள் அனைத்தையுமே அவன் திறந்து கொடுப்பான்.<br /><br />இது அல்லாஹ்வின் அருள்! அவன் நாடியவருக்கு அருள்பாளிக்கின்றான்! அல்லாஹ் மகத்தான அருளுக்கு உரியவனுமாவான்.<br /><br />Abdul Rahman<br />Doha-QatarABDUL RAHMANhttp://www.blogger.com/profile/17272066359885172059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4509831693098583447.post-60073421795497231772010-04-21T07:08:00.000-07:002010-04-21T07:15:56.092-07:00செல்வத்தைப் பெருக்கும் ஆசை!<span style="font-weight:bold;">செல்வத்தின் மீதுள்ள ஆசை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது!</span><br /><br />''பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு'' (அல்-குர்ஆன் 3:14)<br /><br /><br /><span style="font-weight:bold;">கப்ருகளை சந்திக்கும் வரை செல்வத்தை பெருக்கும் ஆசையில் இருக்கும் மனிதன்!</span><br /><br /><br />''செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது- நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை. அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது). நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள். பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள். பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்'' (அல்-குர்ஆன் 102:1-8)<br />பொருட் செல்வமும், மக்கள் செல்வமும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்!<br /><br />''செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன'' (அல்-குர்ஆன் 18:46)<br />இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்!<br /><br />அறிந்து கொள்ளுங்கள்: ''நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும், பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையன வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு - ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை''' (அல்-குர்ஆன் 57:20)<br /><br /><span style="font-weight:bold;">இவ்வுலகில் செல்வங்கள் தரப்பட்டிருப்பது ஒரு சோதனைக்காதத் தான்!</span><br /><br />''நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு’ என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்'' (அல்-குர்ஆன் 8:28)<br />அல்லாஹ் சிலரை சிலரைவிட செல்வத்தில் மேன்மைப்படுத்தி இருக்கிறான்!<br /><br />''அல்லாஹ் உங்களில் சிலரை சிலரைவிட செல்வத்தில் மேன்மைப்படுத்தி இருக்கிறான்; இவ்வாறு மேன்மையாக்கப்பட்டவர்கள்; தங்களுடைய செல்வத்தை தங்கள் வலக்கரங்களுக்கு உட்பட்டு(த் தம் ஆதிக்கத்தில்) இருப்பவர்களிடம் கொடுத்து, அவர்களும் இவர்கள் செல்வத்தில் சமமான உரிமை உள்ளவர்கள் என்று ஆக்கிவிடுவதில்லை; (அவ்வாறிருக்க) அல்லாஹ்வின் அருட்கொடையையா? இவர்கள் மறுக்கின்றனர்'' (அல்-குர்ஆன் 16:71)<br />செல்வமும் வறுமையும் அல்லாஹ்வின் நாட்டத்தில் உள்ளவை!<br /><br />''நிச்சயமாக என்னுடைய இறைவன் தான் நாடியவர்களுக்கு, செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும், (அதை, தான் நாடியவர்களுக்கு சுருக்கியும் விடுகிறான் - எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்' என்று (நபியே!) நீர் கூறும்'' (அல்-குர்ஆன் 34:36)<br />அல்லாஹ் வழங்கியிருக்கும் செல்வ செழிப்பைக் கொண்டு ஆணவம் கொள்ளாதீர்கள்! அல்லாஹ் காரூனுக்கு வழங்கிய செல்வத்திலிருந்தும், தண்டனையிலிருந்தும் படிப்பினை பெறுங்கள்!<br /><br />''நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன; அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்: ''நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்'' என்று கூறினார்கள். ''மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை'' (என்றும் கூறினார்கள்). (அதற்கு அவன்) கூறினான்: ''எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!'' இவனுக்கு முன் இவனை விட மிக்க வலிமையுடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களுமான (எத்தனையோ) தலைமுறையினர்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால் குற்றவாளிகள் அவர்கள் செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி கணக்குக் கேட்கப்பட மாட்டார்கள்.<br /><br />அப்பால், அவன் (கர்வத்துடனும், உலக) அலங்காரத்துடன் தன் சமூகத்தாரிடையே சென்றான்; (அப்போது) இவ்வுலக வாழ்க்கையை எவர் விரும்புகிறார்களோ அவர்கள்: ''ஆ! காரூனுக்கு கொடுக்கப்படடதைப் போன்று நமக்கும் இருக்கக்கூடாதா? நிச்சயமாக, அவன் மகத்தான பாக்கியமுடையவன்’ என்று கூறினார்கள். கல்வி ஞானம் பெற்றவர்களோ; ''உங்களுக்கென்ன கேடு! ஈமான் கொண்டு, நல்ல அமல்களை செய்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வெகுமதி இதைவிட மேன்மையானது; எனினும், அதைப் பொறுமையாளரைத் தவிர, (வேறு) எவரும் அடைய மாட்டார்கள்'' என்று கூறினார்கள்.<br /><br />ஆகவே, நாம் காரூனையும் அவன் வீட்டையும் பூமியில் அழுந்தச் செய்தோம்; அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்கிற கூட்டத்தார் எவருமில்லை; இன்னும் அவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை. முன் தினம் அவனுடைய (செல்வ) நிலையை விரும்பியவர்களெல்லாம், ''ஆச்சரியம் தான்! அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு ஆகார வசதிகளைப் பெருக்குகிறான், சுருக்கியும் விடுகிறான்; அல்லாஹ் நமக்கு கிருபை செய்யவில்லையாயின் அவன் நம்மையும் (பூமியில்) அழுந்தச் செய்திருப்பான்; ஆச்சரியம் தான்! நிச்சயமாக காஃபிர்கள் சித்தியடைய மாட்டார்கள்'' என்று கூறினார்கள்'' (அல்-குர்ஆன் 28:76-82)<br /> <br /><br /><span style="font-weight:bold;">செல்வ செழிப்புள்ளவர்களைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள்!</span><br /><br />''இன்னும் அவர்களுடைய செல்வங்களும், பிள்ளைகளும் உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம்; நிச்சயமாக இவற்றைக் கொண்டு அவர்களை இவ்வுலகத்திலேயே வேதனை செய்யவும், அவர்கள் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே அவர்களின் உயிர் போவதையும் அல்லாஹ் விரும்புகிறான்'' (அல்-குர்ஆன் 9:85)<br />நிராகரிப்பாளர்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் செல்வத்தைக் கண்டு அதைப் போல் அடைய வேண்டும் என ஆசைக் கொள்ளாதீர்கள்!<br /><br />நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு, மனிதர்கள் (நிராகரிக்கும்) சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால், அவர்களின் வீட்டு முகடுகளையும், (அவற்றுக்கு அவர்கள்) ஏறிச் செல்லும் படிகளையும் நாம் வெள்ளியினால் ஆக்கியிருப்போம்'' (அல்-குர்ஆன் 43:33)<br />உங்களின் பிள்ளைகளும், செல்வங்களும் இறைவனை மறக்கச் செய்ய வேண்டாம்!<br /><br />''ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் - எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்'' (அல்-குர்ஆன் 63:9)<br />இவ்வுலகின் செல்வம், செல்வாக்கு மற்றும் அதிகாரங்கள் யாவும் அழிந்து விடக் கூடியவைகள்!<br /><br />''ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்: ''என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே! ''அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே- ''(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா? ''என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே! ''என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!'' (என்று அரற்றுவான்)'' (அல்-குர்ஆன் 69:25-29)<br />நிலையற்ற இவ்வுலக செல்வத்தின் மீது காதல் கொண்டுள்ள மனிதன்!<br /><br />''குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான். ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும். அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும். நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும். நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக)'' (அல்-குர்ஆன் 104:1-9)<br />மறுமையில் பயனளிக்காத இவ்வுலக செல்வங்கள்!<br /><br />''அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா'' (அல்-குர்ஆன் 26:88)<br /><br />இம்மையின் செல்வ சுகங்களில் மூழ்கிக் கிடந்தவர்களின் செயல்கள் யாவும் அழிந்து விடும்!<br /><br />''(முனாஃபிக்குகளே! உங்களுடைய நிலைமை) உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கிறது; அவர்கள் உங்களைவிட வலிமை மிக்கவர்களாகவும், செல்வங்களிலும், மக்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள்; (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு அவர்கள் சுகமடைந்தார்கள்; உங்களுக்கு முன் இருந்தவர்கள் அவர்களுக்குரிய பாக்கியங்களால் சுகம் பெற்றது போன்று, நீங்களும் உங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களால் சுகம் பெற்றீர்கள். அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக்கிடந்தவாறே நீங்களும் மூழ்கி விட்டீர்கள்; இம்மையிலும், மறுமையிலும் அவர்களுடைய செயல்கள் யாவும் (பலனில்லாமல்) அழிந்து விட்டன - அவர்கள்தான் நஷ்டவாளிகள்'' (அல்-குர்ஆன் 9:69)<br />நரகத்தில் விழுந்து விட்டால் நம்முடைய இவ்வுலக செல்வங்கள் எவ்விதப் பயனும் அளிக்காது!<br /><br />''(ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது'' (அல்-குர்ஆன் 92:11)<br />இறைவனுக்கு நெருக்கமாக்கி வைக்கும் ஆற்றல் செல்வத்திற்கு இல்லை! மாறாக ஒருவரின் நற்கருமங்களே இறை நெருக்கத்தைப் பெற்றுத்தரும்!<br /><br />''இன்னும் உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ (உங்களுக்குத் தகுதி கொடுத்து) உங்களை நம்மளவில் நெருங்கி வைக்க கூடியவர்கள் அல்லர். ஆனால் எவர் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அத்தகையோர்க்கு, அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பு நற்கூலி உண்டு; மேலும் அவர்கள் (சுவனபதியின்) உன்னதமான மாளிகைகளில் நிம்மதியுடன் இருப்பார்கள்'' (அல்-குர்ஆன் 34:37)<br />கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு உதவினால் அல்லாஹ் இரு மடங்கு கூலி தருவான்!<br /><br />''(கஷ்டத்திலிருப்போருக்காக) அல்லாஹ்வுக்கு அழகிய கடன் எவர் கொடுக்கின்றாரோ, அதை அவருக்கு அவன் இரு மடங்காக்கி பன்மடங்காகச் செய்வான் - அல்லாஹ்தான் (உங்கள் செல்வத்தைச்) சுருக்குகிறான்; (அவனே அதைப்)பெருக்கியும் தருகிறான்; அன்றியும் நீங்கள் அவனிடமே மீட்டப்படுவீர்கள்'' (அல்-குர்ஆன் 2:245)<br />தான தர்மங்கள் செய்வதினால் வறுமை உண்டாகாது! மாறாக செல்வம் பெருகும்!<br /><br />''(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்¢ யாவற்றையும் நன்கறிபவன்'' (அல்-குர்ஆன் 2:268)<br />ஒவ்வொரு முறை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யும் போதும் 1x7x100=700 மடங்கு நன்மைகள் கிடைக்கும்!<br /><br />''அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்'' (அல்-குர்ஆன் 2:261)<br />செய்த தர்மங்களை சொல்லிக்காட்டாதிருந்தால் நற்கூலிகள் கிடைக்கும்!<br /><br />''அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு; இன்னும் - அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள்'' (அல்-குர்ஆன் 2:262)<br />அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக தான தர்மங்கள் செய்பவருக்கான உவமானம்!<br /><br />''அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது: உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் மேல் பெரு மழை பெய்கிறது; அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது; இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது; அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான்'' <br />(அல்-குர்ஆன் 2:265)<br /><br /><span style="font-weight:bold;">அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்பணித்துக் கொண்டவர்களுக்கு தான தர்மங்கள் செய்யுங்கள்!</span><br /><br />''பூமியில் நடமாடித்(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்; அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம்; அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்'' (அல்-குர்ஆன் 2:273)<br /><br /><span style="font-weight:bold;">நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்!</span><br /><br />''நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்'' (அல்-குர்ஆன் 3:92)<br />பணக்காரர்களுக்கிடையில் செல்வம் சுற்றிக்கொண்டிருக்கக் கூடாது!<br /><br />''அவ்வூராரிடமிருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு (மீட்டுக்) கொடுத்தவை, அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்குமாகும்; மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது); மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்'' (அல்-குர்ஆன் 59:7)<br /><span style="font-weight:bold;"><br />தான தர்மங்கள் செய்வதினால் உள்ளும் புறமும் தூய்மையடையும்!</span><br /><br />''நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக; நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்'' (அல்-குர்ஆன் 9:103)<br /><br /><br />Abdul Rahman<br />Doha-Qatar<br />Please write your comments and your suggestion also send to mail:rahman1891@yahoo.comABDUL RAHMANhttp://www.blogger.com/profile/17272066359885172059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4509831693098583447.post-59855932589591516232010-04-14T00:08:00.000-07:002010-04-14T00:24:58.170-07:00பெற்றோர்களே! கணவன்மார்களே! குழந்தைகளே! உஷார்.அஸ்ஸலாமு அலைக்கும்<br /> <br />சமீபத்தில் பத்திரிக்கை வாசித்த அனைவருக்கும் இந்த விஷயம் அறிந்ததே. tamilmuslimbrothers group லும் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டதை அனைவரும் அறிவர். விஷயம் பாரதூரமாகி விட்டபடியால், இதன் நம்பகத்தன்மையைப்பற்றியெல்லாம் மேலும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்காமல், நாம் அனைவரும் உடனடியாக நம்முடைய குடும்பத்தினர்களுக்கு இஸ்லாமிய வழிமுறையை பின்பற்ற கட்டளையிடுவதுடன், அவர்களின் நடவடிக்கையை கண்கானிக்கவும் வேண்டும். அப்போதுதான், இறைவனின் உதவியோடு, காவிகளின் சூழ்ச்சியை முறியடிக்க முடியும். மேலும், நாம் ஒவ்வொருவரும், இந்த விஷயம் முஸ்லிம்கள் அனைவரையும் சென்றடைந்து விட்டது (forward to everyone one who knows) என்பதை உறுதி செய்ய வேண்டும். பிரச்சனை நம் வீட்டின் கதவை தட்டுவதற்கு முன், இதன் வீரியத்தை உணர்ந்து, முற்றாக ஒழிப்பதற்கு நாம் எல்லாவிதமான முயற்சிகளையும் எடுக்க வேண்டும். வல்ல ரஹ்மான் அதற்கு உதவி செய்வானாகவும். ஆமீன்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQpv0vwF74oHVLvsut2nUKeoiOwFZfXJR63SWun9O-3gvb5L2e8DkSFJlUrKG0vObqi-X39hoS5tSz7NRX3m2RMkF1B6J3YUGAxlkTHG__cnrK-QQqqmdCH2LJiCAJN-PzEULJzoeKajI/s1600/111.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 293px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQpv0vwF74oHVLvsut2nUKeoiOwFZfXJR63SWun9O-3gvb5L2e8DkSFJlUrKG0vObqi-X39hoS5tSz7NRX3m2RMkF1B6J3YUGAxlkTHG__cnrK-QQqqmdCH2LJiCAJN-PzEULJzoeKajI/s400/111.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5459888412290902482" /></a><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpzoSFAiDUTOkWIRxjIw9aejKRPmC1z013bBpBz1lVxjkRPJskFYkr-sPKf-ugrdokAIe1VZ53gQWKnxbE9dLSV4c76AOWjaUiAC4SN05FHQ5-JTcdPltMt7zF2JdMtvOLPbskz8-I1IU/s1600/222.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 337px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpzoSFAiDUTOkWIRxjIw9aejKRPmC1z013bBpBz1lVxjkRPJskFYkr-sPKf-ugrdokAIe1VZ53gQWKnxbE9dLSV4c76AOWjaUiAC4SN05FHQ5-JTcdPltMt7zF2JdMtvOLPbskz8-I1IU/s400/222.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5459888682057381586" /></a><br /> <br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJOdoJgLhBMnewi2ex-6EsNmybRxRWndHSZp4Ci-KJ2IPfwcUYHhG1A994ZRoedcfGceUSFK9DxyPVpj3TMzclaTo4ueG8Y_wDID1_Lj6t5de23_6xs1xadQawIYZmJxLk_VZvAkY9igA/s1600/333.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 359px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJOdoJgLhBMnewi2ex-6EsNmybRxRWndHSZp4Ci-KJ2IPfwcUYHhG1A994ZRoedcfGceUSFK9DxyPVpj3TMzclaTo4ueG8Y_wDID1_Lj6t5de23_6xs1xadQawIYZmJxLk_VZvAkY9igA/s400/333.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5459888692635367346" /></a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUBzr7RvXsMfilMn9FRYF82nX8lOLgMPmgSrqR_g0wARy9Dq3mZ8KPLLekByoW6pxljlzyJfRRdNkgStUSzCzefmHUAHIh6WcHI2nhvDNR3QDow3fVdF5_Ytl9-q16jwx7GRWVuDu4Dzk/s1600/444.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 360px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUBzr7RvXsMfilMn9FRYF82nX8lOLgMPmgSrqR_g0wARy9Dq3mZ8KPLLekByoW6pxljlzyJfRRdNkgStUSzCzefmHUAHIh6WcHI2nhvDNR3QDow3fVdF5_Ytl9-q16jwx7GRWVuDu4Dzk/s400/444.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5459888702883778450" /></a><br /><br /><br /><br /><br /><br />by <br /><br />Abdul rahmanABDUL RAHMANhttp://www.blogger.com/profile/17272066359885172059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4509831693098583447.post-79912905329824562282010-04-05T04:26:00.000-07:002010-04-05T04:29:24.591-07:00பாவச் செயல்கள் المعاصي وأنواعهاஅல்லாஹ் தன்னை வணங்குவதற்காகவே படைப்பினங்கள் அனைத்தையும் படைத்துள்ளான். அவனது வல்லமையைப் புரிந்து கொண்டு தன்னைப் பயந்து வாழ வேண்டும் என்பதற்காகத் தனது அத்தாட்சிகளைத் தெளிவுபடுத்தினான். அவ்வாறே, தனது கட்டளைக்கு மாறு செய்வோருக்குத் தான் சித்தப்படுத்தி வைத்துள்ள தண்டனைகளையும் அவன் விபரித்துவிட்டான்.<br /><br /> ஆனால், இன்று மனிதர்களுடைய நிலையை எடுத்துப் பார்த்தால், அவர்கள் அல்லாஹ் தடுத்தவற்றை எடுத்து நடப்பவர்களாகவும் அவன் விலக்கியவற்றைத் தமக்கு அனுமதிக்கப்பட்டவை போன்று மாற்றிக் கொண்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. மேலும், அவர்கள் அல்லாஹ்வுடைய ஏவல்களை உதாசீனஞ் செய்கின்றனர். இதன் காரணமாக மனிதனுக்கும் அல்லாஹ்வுக்குமுள்ள உறவு துண்டிக்கப்பட்டுள்ளது. ஜீவனோபாயத்திலும், ஆயுட் காலத்திலும் அபிவிருத்தி இல்லாமற்போய்விட்டது. இது பாவங்களுக்கான தண்டனைகளில் ஒன்றாகும்.<br /><br /> அதே நேரம் அவர்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அபிவிருத்தியையும் பாவ மன்னிப்பையும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், தனது ஏவல்களை அலட்சியப்படுத்தி விலக்கல்களைச் செயற்படுத்தும்போது அல்லாஹ் கோபப்படுகிறான் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள்.<br /><br /> நிச்சயமாக அல்லாஹ் பாவிகளைக் கடுமையாகத் தண்டிக்கக் கூடியவன் என்பதை மனிதன் அறிந்துகொள்ள வேண்டும். பாவிகளை விட்டும் அவனது தண்டனை தடுக்கப்பட முடியாததாகும். இன்று அதிகமானோர் அல்லாஹ்வுக்கு மாறு செய்கின்ற அதேவேளை இறைவன் தம்மை அவதானித்துக் கொண்டிருக்கிறான் என்பதையும் மறந்து வாழ்கின்றனர். அவர்கள் துணிச்சலுடன் பாவச் செயல்களில் ஈடுபடுவதற்கு இது மிகப் பிரதானமான காரணங்களிலொன்றாகும். இவ்வாறானவர்களுக்கு அல்லாஹ் தனது கடுமையான தண்டனையையும் கோபத்தையும் எச்சரிக்கை செய்கிறான்.<br /><br /> மேலும், பாவச் செயல்கள் அல்லாஹ்வுக்கும் மனிதனுக்குமிடையிற் தடுப்புச் சுவர்களாக மாறிவிடுவது மாத்திரமன்றி, முதலாவதாக அல்லாஹ்விடமும், அடுத்ததாக அவனது படைப்புக்கள் மத்தியிலும் அவனுக்கு இழிவைத் தேடிக் கொடுக்கின்றன. மனிதர்களோ பாவிகள், அநியாயக்காரர்கள் போன்றோரை இழி கண்கொண்டு நோக்குவர்.<br /><br /> இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது, “பாவங்கள் மனித உள்ளங்களுக்குக் கேடு விளைவிக்கின்றன. நச்சுப் பொருட்கள் மனித உடலிற் பாதிப்புக்களை ஏற்படுத்துவது போலவே பாவங்கள் மனித உள்ளங்களைப் பாதிக்கின்றன. பாவங்கள் பல்வேறுபட்ட தராதரங்களிற் காணப்படுவது போல அவை யேற்படுத்துகின்ற தாக்கங்களும் பாதிப்புக்களும் வித்தியாசப்படுகின்றன. உலகிற் காணப்படுகின்ற நோய்கள் மற்றும் அழிவுகளுக்குக் காரணம் மனிதன் புரிகின்ற பாவச் செயல்கள் தவிர்ந்த வேறு காரணங்கள் ஏதுமுண்டா!”.<br /><br /> ஆகவே, பாவிகளனைவரும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி மீள வேண்டும். ஏனெனில், பாவ மன்னிப்பென்பது ஈருலக நற்பாக்கியங்களுக்குமான முதற்படியாகும். இதன் மூலம் மனிதனுக்கு ஆயுளிலும், ஜீவனோபாயத்திலும் அபிவிருத்தி கிடைக்கிறது; அழிவுகள் நீங்கிவிடுகின்றன. இவை பாவ மன்னிப்புக் கோருவதன் சில பயன்களாகும்.<br /><br /> <span style="font-weight:bold;"> பாவ மன்னிப்புக் கோருபவர் கீழ்வரும் விடயங்களைக் கவனத்திற் கொள்வது அவசியமாகின்றது:</span><br /><br />¨ பாவத்தை விட்டும் விலகி நடத்தல்<br /><br />¨ தான் செய்த பாவங்களை நினைத்து மனம் வருந்துதல்<br /><br />¨ ஏற்கனவே செய்த பாவங்களை மீளவுஞ் செய்யாதிருக்க உறுதி கொள்ளல்<br /><br />¨ பிறரது உடமைகளில் வரம்பு மீறி நடந்து கொண்டிருந்தால் அவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்தல்<br /><br />¨ பிறரது உரிமைகளை மீறியிருந்தால் அவற்றுக்காக உரியவரிடம் மன்னிப்புக் கோருதல்<br /><br />¨ ஹராமான உழைப்பின் மூலம் வளர்த்த தனது உடலை நினைத்து மனம் வருந்துதல்<br /><br />¨ ஏற்கனவே பாவச் செயல்களில் ஈடுபடப் பயிற்றுவிக்கப்பட்ட தனது உடலை நல்லறங்களில் ஈடுபடப் பயிற்றுவித்தல்<br /><br />¨ அல்லாஹ் தனது பாவங்களை மன்னிக்க மாட்டானென்று நிராசை அடையாதிருத்தல்<br /><br /> ஒரு தாய் தனது குழந்தைகள் மீது காட்டுகின்ற அன்பைவிட மிக அதிக அளவில் அல்லாஹ் தனது அடியார்கள் மீது அன்பு காட்டுகிறான். இதன் காரணமாக இரவு காலங்களிற் பாவச் செயல்களில் ஈடுபட்டோர் பாவ மன்னிப்புக் கோரி மீளுவதற்காகப் பகலிலும், பகற் காலங்களிற் குற்றச் செயல்களில் ஈடுபட்டோர் பாவ மன்னிப்புக் கோரி மீளுவதற்காக இரவிலும் அல்லாஹ் தன் கரம் நீட்டுகிறான். ஆகவே, ஏற்கனவே இழைத்த குற்றச் செயல்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி மீளுவதுடன், மென்மேலும் பாவச் செயல்களில் ஈடுபடாது அல்லாஹ்வுக்குப் பொருத்தமான முறையில் நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயற்சி செய்வோமாக!<br /><br /> <br /><br /><span style="font-weight:bold;">பாவங்களும் அவற்றின் வகைகளும்</span><br /><br /> பாவங்கள் என்பது அல்-குர்ஆனின் மூலம் அல்லது நபி (ஸல்) அவர்கள் மூலம் விதியாக்கப்பட்ட கடமைகளில் ஒன்றை விட்டுவிடுதல் அல்லது தடை செய்யப்பட்டவைகளில் ஒன்றைச் செய்தலாகும். அவை உள்ளத்தால் நிறைவேற்றப்படுகின்ற செயல்களாகவோ அல்லது உறுப்புக்களாற் செய்யப்படுகின்ற செயல்களாகவோ இருக்கலாம். அல்லாஹ் கூறுகிறான்,<br /><br />وَمَن يَعْصِ اللّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُّهِينٌ<br /><br />“எவன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகத்திற் புகுத்துவான்; அவன் அங்கு என்றென்றும் தங்கிவிடுவான்; மேலும், அவனுக்கு இழிவான வேதனையுண்டு” (அந்நிஸாஃ: 14).<br /><br /> <br /><br /><span style="font-weight:bold;">பாவத்தின் வகைகள்</span><br /><br /> பாவங்கள் இரு வகைப்படுகின்றன. அவையாவன: 1) சிறு பாவங்கள், 2) பெரும் பாவங்கள். இவ்வாறு பாவங்களை இரு வகையாகப் பிரித்து நோக்குவதற்குக் கீழ்வரும் அல்-குர்ஆன் வசனங்களையும் நபி மொழியையும் ஆதாரமாகக் கொள்ளலாம். அல்லாஹ் கூறுகிறான்,<br /><br />إِن تَجْتَنِبُواْ كَبَائِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنكُمْ سَيِّئَاتِكُمْ وَنُدْخِلْكُم مُّدْخَلاً كَرِيمًا<br /><br />“நீங்கள் தடுக்கப்பட்டவற்றிற் பெரும் பாவங்களைத் தவிர்ந்து கொண்டால், உங்களுடைய குற்றங்களை நாம் மன்னிப்போம்” (அந்-நிஸாஃ: 31).<br /><br />الَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ إِلَّا اللَّمَمَ<br /><br /> “நன்மை செய்வோர் யாரெனில், எவர்கள் சிறு பிழைகளைத் தவிரப் பெரும் பாவங்களையும் மானக் கேடானவற்றையும் தவிர்ந்து கொள்கிறார்களோ, அவர்கள்” (அந்-நஜ்ம்: 32). நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெரும் பாவங்களில் ஈடுபடாது தவிர்ந்து கொள்ளும் காலமெல்லாம், ஐவேளைத் தொழுகைகள் ஒரு தொழுகை மறு தொழுகை வரையும், ஒரு ஜும்ஆத் தொழுகை மறு ஜும்ஆத் தொழுகை வரையும், ஒரு வருட ரமழான் மாத நோன்பு மறு வருட ரமழான் மாத நோன்பு வரையும் இடைப்பட்ட காலங்களில் நடைபெற்ற சிறு பாவங்களுக்குப் பரிகாரமாக அமைகின்றன. [நூல்: முஸ்லிம்]<br /><br /> <br /><br /><span style="font-weight:bold;">சிறு பாவங்கள்</span><br /><br /> கீழ்வரும் 4 நிலைகளிற் பாவச் செயல்கள் சிறு பாவங்களாகக் கருதப்படுகின்றன:<br /><br />¨ இம்மையிலும் மறுமையிலும் பெரும் பாவங்களுக்கு வழங்கப்படுகின்ற மிகக் குறைந்த தண்டனையின் அளவை விட இவற்றுக்கு வழங்கப்படுகின்ற தண்டனைகள் அதிகமாக இல்லாதிருத்தல்.<br /><br />¨ குர்ஆன் வசனங்களிலோ நபி மொழிகளிலோ இவற்றுக்கான தண்டனை கூறப்படாதிருத்தல்.<br /><br />¨ இவை அல்லாஹ்வின் சாபம், கோபம் போன்றவற்றை ஏற்படுத்தும் என்று இடம்பெறாதிருத்தல்.<br /><br />¨ இவற்றில் ஈடுபடுவது ஈமானைப் போக்கிவிடும் என்று இடம்பெறாதிருத்தல்.<br /><br /> இவ்வாறான சிறு பாவங்களுக்குக் கீழ்வரும் விடயங்களை உதாரணமாகக் கூற முடியும். <br /><br />¨ அந்நியப் பெண்களைப் பார்த்தல்<br /><br />¨ பள்ளிவாசலிற் துப்புதல்<br /><br />¨ பள்ளிவாசலிற் தர்க்கம் புரிதல்<br /><br />¨ தொலைந்த பொருட்களைப் பள்ளியினுட் தேடுதல்<br /><br />¨ தொழுகையில் திரும்பிப் பார்த்தல்<br /><br /> இவை தவிர இன்னும் ஏராளமான சிறு பாவங்களை அல்-குர்ஆனும் நபி மொழிகளும் அடையாளப்படுத்துகின்றன.<br /><br /> <br /><br /><span style="font-weight:bold;">பெரும் பாவங்கள்</span><br /><br /> உலகத்தில் அல்லது மறுமையில் தண்டனைகள் நிர்ணயிக்கப்பட்ட விடயங்கள் அனைத்தும் பெரும் பாவங்கள் ஆகும். அதாவது, ஒரு செயலைக் குறித்து அதனைச் செய்தவன் மீது நரகம் கட்டாயமாகிவிடும்; அல்லது அவன் மீது அல்லாஹ்வின் கோபம் அல்லது சாபம் ஆகிய இரண்டிலொன்று ஏற்பட்டுவிடும்; அல்லது உலகத்திலோ, மறுமையிலோ அதற்காகக் குறிப்பிட்ட தண்டனையுண்டு என்று எச்சரிக்கப்பட்ட அனைத்து விடயங்களும் பெரும் பாவங்களாகவே கருதப்படுகின்றன.<br /><br /> <br /><br /><span style="font-weight:bold;">பெரும் பாவங்களின் எண்ணிக்கை</span><br /><br /> பெரும் பாவங்களின் எண்ணிக்கையை வரையறுத்துக் கூறுவதில் ஸஹாபாக்கள் மத்தியிலும் முரண்பாடான கருத்துக்களே நிலவியுள்ளன. அவை வருமாறு:<br /><br />¨ இப்னு மஸ்ஊத் (ரலி) கூறுவதாவது, “பெரும் பாவங்களின் எண்ணிக்கை நான்காகும்”.<br /><br />¨ இப்னு உமர் (ரலி) கூறுவதாவது, “பெரும் பாவங்களின் எண்ணிக்கை ஏழாகும்”.<br /><br />¨ இப்னு அப்பாஸ் (ரலி) கூறுவதாவது, “பெரும் பாவங்கள் ஏழு என்று கூறுவதை விட எழுபது என்று கூறுவதே மிகப் பொருத்தமானது”.<br /><br />மேலும், 700 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குக் கீழ்க் காணும் விடயங்களை உதாரணமாகக் குறிப்பிட முடியும்.<br /><br /> அதே போன்று கீழ்வரும் விடயங்களும் பெரும் பாவங்களைச் சார்ந்தனவாகும்:<br /><br />¨ ஒரே பாவத்தைத் தொடர்ந்து செய்தல்<br /><br />¨ அல்லாஹ்வின் அருளை விட்டும் நம்பிக்கையிழத்தல்<br /><br />¨ அல்லாஹ்வின் தண்டனையை விட்டும் அபயம் பெற்றிருத்தல்<br /><br />¨ பொய்ச் சத்தியம் செய்தல்<br /><br />¨ விபச்சாரம் செய்தல்<br /><br />¨ ஓரினச் சேர்க்கையில் ஈடுபடல்<br /><br />¨ திருடுதல்<br /><br />¨ பொய்யுரைத்தல்<br /><br />¨ சபித்தல்<br /><br />¨ போதைப் பொருட்களைப் பாவித்தல்<br /><br />¨ கர்வங் கொள்ளல்<br /><br />¨ உறவுகளைத் துண்டித்து நடத்தல்<br /><br />¨ புறம் பேசுதல்<br /><br />¨ மோசடி செய்தல்<br /><br />¨ ஆண்கள் கரண்டைக் காலுக்குக் கீழாக ஆடை அணிதல்<br /><br />¨ இலஞ்சம் (வாங்குதல், வழங்குதல், துணை போதல்)<br /><br />¨ ஆண்கள் பெண்களுக்கும், பெண்கள் ஆண்களுக்கும் ஒப்பாகுதல்<br /><br />¨ அயல் வீட்டாருக்குத் தீங்கிழைத்தல்<br /><br />¨ ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்ட காரணங்கள் எதுவுமின்றி ஜும்ஆ, ஜமாஅத் தொழுகைகளை விட்டுவிடுதல்<br /><br /> இவ்வாறான குற்றச் செயல்களைத் தவிர்ந்து நடப்பதன் மூலம் அல்லாஹ்வின் அருளுக்கும் பாவ மன்னிப்புக்கும் உரியவர்களாக மாற எம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!<br /><br /><br />Abdul Rahman<br />Doha -QatarABDUL RAHMANhttp://www.blogger.com/profile/17272066359885172059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4509831693098583447.post-65127879393435760682010-04-04T02:51:00.000-07:002010-04-04T02:54:10.011-07:00அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் :<span style="font-weight:bold;">இழப்புக்குள்ளாக்கப் படும் அருட் செல்வங்கள்: -</span><br /><br />“மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாம் விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். (ஆதாரம் : புகாரி)<br /><br /><span style="font-weight:bold;">உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்தது: -</span><br /><br />‘சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு இடம் (கிடைப்பது), உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும். காலையில் சிறிது நேரம் அல்லது மாலையில் சிறிது நேரம் இறைவழியில் செல்வது உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன். அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி), ஆதாரம் : புகாரி<br /><br /><span style="font-weight:bold;">வழிப்போக்கனைப் போல இவ்வுலகில் வாழ வேண்டும்: </span>-<br /><br />அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு ‘உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு’ என்றார்கள்.<br /><br />அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘நீ மாலை நேரத்தை அடைந்தால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு’ என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள். (ஆதாரம் : புகாரி)<br /><br /><span style="font-weight:bold;">முதியவரின் இளமை: </span>-<br /><br />“முதியவரின் மனம் கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்துவரும். 1. இம்மை வாழ்வின் (-செல்வத்தின்) மீதுள்ள பிரியம். 2. நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி<br /><br /><span style="font-weight:bold;">மனிதர்களோடு வளரும் ஆசைகள்: -</span><br /><br />“மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன: 1. பொருளாசை. 2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் : புகாரி<br /><br /><span style="font-weight:bold;">நரகம் தடை செய்யப்படக் காரணமான வார்த்தை: -</span><br /><br />இத்பான் இப்னு மாலிக் அல்அன்சாரி (ரலி) அவர்கள் (பின்வருமாறு) சொல்ல கேட்டேன். “(ஒருநாள்) அதிகாலையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்திருந்தபோது ‘அல்லாஹ்வின் திருப்தியை நாடி ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று கூறியவாறு மறுமை நாளில் ஓர் அடியார் வந்தால் அவரின் மீது நரகத்தை அல்லாஹ் தடை செய்யாமல் இருப்பதில்லை”‘ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: முஹ்மூத் இப்னு ரபீஉ (ரலி), ஆதாரம் : புகாரி<br /><br /><span style="font-weight:bold;">பொறுமைக்குப் பிரதிபலன் சொர்க்கம்: -</span><br /><br />இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் கூறினான்: இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றிவிடும்போது நன்மையை நாடிப் பொறுமை காத்தால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும்”. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி<br /><br /><span style="font-weight:bold;">மறுமையை மறக்கடிக்கும் உலகத்தின் செல்வம்: -</span><br /><br />‘அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சவில்லை. ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் தாராளமாகக் கொடுக்கப்பட்டதைப் போன்று உங்களுக்கும் தாராளமாகக் கொடுக்கப்பட்டு, அதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட, அது (மறுமையின் எண்ணத்திலிருந்து) அவர்களின் கவனத்தைத் திருப்பிவிட்டதைப் போன்று உங்களின் கவனத்தையும் அ(ந்த உலகாசையான)து திருப்பிவிடுமோ என்றே நான் அஞ்சுகிறேன்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மிஸ்வர் இப்னு மக்ரமா (ரலி), ஆதாரம் : புகாரி<br /><br /><span style="font-weight:bold;">செல்வத்துக்கு அடிமையானவன் துர்பாக்கியவான் ஆவான்: </span>-<br /><br />“பொற்காசு, வெள்ளிக்காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, சதுரக் கம்பளி ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்டவன் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான். (செல்வம்) வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான்” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி<br /><br />“ஆதமின் மகனக்கு (மனிதனுக்கு) இரண்டு நீரோடைகள் (நிறைய) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. (பாவங்களிலிருந்து) பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : புகாரி<br /><br /><span style="font-weight:bold;">நம்முடைய செல்வம் எது?<br /></span><br />“(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் ‘உங்களில் யாருக்காவது தம் செல்வத்தை விடத் தம் வாரிசுகளின் செல்வம் விருப்பமானதாக இருக்குமா?’ என்று கேட்டார்கள். தோழர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! எங்கள் அனைவருக்குமே (வாரிசுகளின் செல்வத்தை விட) எங்களின் செல்வமே விருப்பமானதாகும்’ என்று பதிலளித்தார்கள். ‘அவ்வாறாயின், ஒருவர் (இறப்பதற்கு முன் அறவழியில்) செலவிட்டதே அவரின் செல்வமாகும். (இறக்கும் போது) விட்டுச் செல்வது அவரின் வாரிசுகளின் செல்வமாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி<br /><br /><span style="font-weight:bold;">மறுமையில் நற்பலன் குன்றியவர்கள்: -</span><br /><br />‘(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ளவர்களே மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர்கள் ஆவர்; ஒரு சிலரைத் தவிர, அவர்களுக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அதை அவர்கள் தம் வலப் பக்கமும் இடப் பக்கமும் தம் முன் பக்கமும் பின் பக்கமும் வாரி வழங்கி அச்செல்வத்தால் நன்மை புரிகிறார்கள். (இவர்களைத் தவிர)’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி), ஆதாரம் : புகாரி (நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி).<br /><br /><span style="font-weight:bold;">போதுமென்ற மனமே உண்மையான செல்வமாகும்: -</span><br /><br />“(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி<br /><br /><span style="font-weight:bold;">தொடர்ந்து செய்யப்படும் நற்செயலே அல்லாஹ்வுக்கு விருப்பமானது!</span><br /><br />‘நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் ‘(எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே’ என்று விடையளித்தார்கள். மேலும், ‘நற்செயல்கள் புரிவதில் இயன்றவரை அதன் எல்லையைத் தொடமுயலுங்கள்’ என்றும் கூறினார்கள். . அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி<br /><br /><span style="font-weight:bold;">நன்றியுள்ள அடியாரின் செயல்: -</span><br /><br />நபி(ஸல்) அவர்கள் தம் பாதங்கள் வீங்கும் அளவுக்கு அல்லது புடைக்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்படும்போது ‘நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?’ என்று கேட்பார்கள். அறிவிப்பவர்: முஃகீரா இப்னு ஷ{அபா(ரலி), ஆதாரம் : புகாரி<br /><br /><span style="font-weight:bold;">விசாலமான அருட்கொடை எது?</span><br /><br />அன்சாரிகளில் சிலர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் (பசிக்கு உணவும் செலவுக்குப் பணமும்) கேட்டார்கள். அவ்வாறு கேட்ட யாருக்குமே நபி(ஸல்) அவர்கள் கொடுக்காமல் இருக்கவில்லை. இறுதியாக, நபியவர்களிடம் இருந்த அனைத்தும் தீர்ந்துவிட்டது. தம் கரங்களால் செலவிட்டு எல்லாப் பொருட்களும் தீர்ந்து போன பின்பு அந்த அன்சாரிகளிடம் நபி(ஸல்)<br />அவர்கள் ‘என்னிடம் உள்ள எச்செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து வைக்கப் போவதில்லை. (இருப்பினும்) சுயமரியாதையோடு நடப்பவரை அல்லாஹ் சுயமரியாதையுடன் வாழச் செய்வான். (இன்னல்களைச்) சம்ப்பவருக்கு அல்லாஹ் மேலும் சம்ப்புத் தன்மையை வழங்குவான். பிறரிடம் தேவையாகாமல் (தன்னிறைவுடன்) இருப்பவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான். பொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை (வேறெதும்) உங்களுக்கு வழங்கப்படவில்லை’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி), ஆதாரம் : புகாரி<br /><br /><span style="font-weight:bold;">விசாரணை ஏதுமின்றி சொர்க்கம் செல்பவர்கள்!</span><br /><br />“என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் விசாரணை ஏதுமின்றி சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் யாரெனில், ஓதிப்பார்க்க மாட்டார்கள். பறவை சகுனம் பார்க்கமாட்டார்கள். தம் இறைவ(ன் மீது முழு நம்பிக்கை கொண்டு அவ)னையே சார்ந்திருப்பார்கள்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி<br /><br />சொர்க்கத்திற்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டவர்கள்!<br /><br />“தம் இரண்டு தாடைகளுக்கு இடையே உள்ளத(hன நாவி)ற்கும், தம் இரண்டு கால்களுக்கு இடையே உள்ளத(hன மர்ம உறுப்பி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிப்பவருககு நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) , ஆதாரம் : புகாரி<br /><br /><span style="font-weight:bold;">அண்டை வீட்டாருக்கு தொல்லை தராதே!<br /></span><br />“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய் மூடி இருக்கட்டும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹ¤ரைரா (ரலி) , ஆதாரம் : புகாரி<br /><br /><span style="font-weight:bold;">விருந்தினரைக் கண்ணியப்படுத்துங்கள்!</span><br /><br />நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதை என் காதுகள் செவியேற்றன்; என் உள்ளம் அதை மனனமிட்டது. விருந்துபசாரம் மூன்று நாள்களாகும். (அவற்றில்) ‘அவரின் கொடையும் அடங்கும் அப்போது அவரின் கொடை என்ன?’ என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘(அவரின் கொடை) ஒரு பகல் ஓர் இரவு (உபசரிப்பு) ஆகும்’ என்று கூறிவிட்டு, ‘அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். மேலும், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்’ என்றார்கள். அறிவிப்பவர்:அபூ ஷ{ரைஹ் அல்அதவீ அல்குஸாஈ(ரலி), ஆதாரம் : புகாரி<br /><br /><span style="font-weight:bold;">பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் பேசினால்?</span><br /><br />“ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசிவிடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவைவிட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி<br /><br />“ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி<br /><span style="font-weight:bold;"><br />மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழல் யாருக்கு கிடைக்கும்?</span><br /><br />“(தன்னுடைய நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில்) ஏழு போருக்கு அல்லாஹ் தன்னுடைய (அரியாசத்தின்) நிழலில் அடைக்கலம் அளிக்கிறான். (தனிமையில்) அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனுடைய அச்சத்தால்) கண்ணீர் வடிப்பவர் (அவர்களில் ஒருவராவார்.). என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி<br /><br /><span style="font-weight:bold;">இறையச்சத்தால் குறைவாக சிரி! நிறைய அழு!</span><br /><br />“நான் அறிவதை நீங்கள் அறிவீர்களாயின் நிச்சயம் குறைவாகச் சிரிப்பீர்கள். அதிகமாக அழுவீர்கள்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி<br /><br /><span style="font-weight:bold;">சொர்க்கம், நரகம்!</span><br /><br />“மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அறிவிப்பவர்: அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி<br /><span style="font-weight:bold;"><br />செல்வத்தில் கீழானவர்களை நினைத்துப்பார்: -</span><br /><br />“செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழனாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்”என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி<br /><br /><span style="font-weight:bold;">நன்மையான காரியத்தை செய்ய நினைத்தாலே நன்மை எழுதப்படுகின்</span>றது: -<br /><br />“(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனத்தில்) எண்ணிவிட்டாலே அதைச் செயல்படுத்தாவிட்டாலும் அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும்விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழு நூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான்” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : புகாரி<br /><br /><span style="font-weight:bold;">சொர்க்க வாசியா அல்லது நரகவாசியா என தீர்மானிப்பது எது?</span><br /><br />“(கைபர் போரின் போது) நபி(ஸல்) அவர்கள் (யூத) இணைவைப்பாளர்களிடம் போரிட்டுக் கொண்டிருந்த (குஸ்மான் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதரைப் பார்த்தார்கள். அவர் எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பதில் முஸ்லிம்களிலேயே மகத்தான (பங்காற்றுப)வராக இருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘நரகவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புகிறவர் இவரைப் பார்த்துக் கொள்ளலாம்’) என்று (குஸ்மான் எனும் அந்த மனிதரைக் குறித்துக்) கூறினார்கள். (அவரைப் பற்றி நபியவர்கள் ஏன் அவ்வாறு கூறினார்கள் என்று அறிந்து கொள்வதற்காக) உடனே அவரை இன்னொரு மனிதர் பின்தொடர்ந்தார். (குஸ்மான் என்ற) அந்த மனிதரோ (எதிரிகளுடன் கடுமையாகப்) போராடிக் கொண்டு இருந்தார். இறுதியில் அந்த மனிதர் (எதிரிகளால் கடுமையாகக்) காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்துவிட விரும்பி, தன்னுடைய வாளின் (கீழ்ப் பகுதியைப் பூமியில் நட்டு வைத்து, (கீழ்ப் பகுதியைப் பூமியில் நட்டு வைத்து, அதன்) கூரான பகுதியைத் தம் மார்புகளுக்கிடையே வைத்து, அந்த வாளின் மீது உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து) கொண்டார். வாள் அவரின் தோள்களுக்கிடையே இருந்து வெளியேறியது.<br /><br />அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘ஓர் அடியார் மக்களின் பார்வையில் சொர்க்கவாசிகளின் நற்செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். (இதைப் போன்றே) ஓர் அடியார் மக்களின் பார்வையில் நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்துவருவார். (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இறுதி முடிவுகளைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன’ என்றார்கள்” அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ (ரலி), ஆதாரம் : புகாரி<br /><br /><br />Abdul Rahman<br />Doha-QatarABDUL RAHMANhttp://www.blogger.com/profile/17272066359885172059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4509831693098583447.post-40354139588566172552010-04-03T02:38:00.000-07:002010-04-03T02:49:08.498-07:00குர்ஆனில் சினிமாவைப் பற்றி… ?ஒருமுறை (World Students Association) உலக மாணவர் கழகத்தைச் சார்ந்த மாணவர் குழு ஒன்று மௌலானா அப்துல் அலீம் ஸித்திக்கி அவர்களை பேட்டி கண்டனர். அவர்களில் ஒருமாணவர்,<br /><br />குர்ஆனில் உலகிலுள்ள அனைத்தும கூறப்பட்டிருக்கிறது என்று நீங்கள் கூறுவது உண்மையென்றால் இக்காலத்திலுள்ள சினிமாவைப்பற்றி கூறப்பட்டிருக்கிறதா? என கிண்டலாகக் கேட்டார்.<br /><br />அப்போது சினிமா அறிமுகமகாத காலம். மௌலானா ஸித்தீக்கீ அவர்கள், சினிமா என்றால் என்ன என்று சற்று விளக்மாகக்கூறுங்கள். பினனர் நான் பதில் சொல்கிறேன் என்றார்கள்.<br /><br />அந்த மாணவர்,<br /><br />“கற்பனைக் கதைகளை விலைக்கு வாங்கி அதில் கூத்தடிகளை நடிக்க வைத்து, மக்களை சிரிக்கவைத்துப் பொழுது போக்குவது தான் சினிமா என்று விளக்கம் கூறினார். உடனே மௌலானா அவர்கள் “ஆம்! அதுபற்றி குர்ஆனில் கூறப்பட்டிருக்கிறதே என்றார்கள். அவரோ வியப்பு மேலீட்டால், ‘ எங்கே காட்டுங்கள் பார்க்கலாம் என மீண்டும் வினாவைத் தொடர்ந்தார் அந்த மாணவர்.<br /><br />அதைக் கேட்ட மௌலானா சிறிதும் தயஙகாமல், குர்ஆனின் 31வது அத்தியாயத்தில் சூரா லுக்மானில் ஆறாவது வசனத்தில்<br /><br />وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُواً أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُّهِينٌ<br />(அல்குர்ஆன் : அத்தியாயம் -லுக்மான்,வசனம்- 33)<br /><br />மனிதர்களில் சிலர் உள்ளனர்.அவர்கள் வீணான செய்திகளை ( பெய்யான கட்டுக்கதைகளை) விலைக்கு வாங்கி அறிவின்றி அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களை) வழிகெடுத்து அதனை பரிகாசமாக்கிக் கொள்கின்றனர். இவர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு’ (31:6)<br /><br />என்ற திருமறை வசனத்தை ஓதிக் காண்பித்து கேள்வி கேட்டவரையே வாயடைக்கசெய்தார்கள். உடனே அந்த மாணவர் குழு அனைவரும் “1400 ஆண்டுகளுக்கு முன்னரே சினிமாவைப்பற்றியும் கூறப்பட்டி ருக்கிறதே” என்று அதிசயித்து இஸ்லாத்தை ஏற்றனர்.<br /><br />சினிமாவை சென்ற நூற்றாண்டில் தான் கணடுபிடித்தார்கள். ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அதைப்பற்றி மிகத்துல்லியமாகக் கூறப்பட்டிருக்கிறதென்றால் அது முக்காலத்தையும் அறிந்த இறைவனின் வேதவாக்காகத்தான் இருக்கமுடியும் என்பதில் என்ன சந்தேகமிருக்கமுடியும் ?<br /><br />இதுவும் குர்ஆன் இறைவேதம் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்<br /><br />Abdul RahmanABDUL RAHMANhttp://www.blogger.com/profile/17272066359885172059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4509831693098583447.post-36688766996460491222010-03-30T06:59:00.000-07:002010-03-30T07:02:31.357-07:00சுவனத்தில் பெண்கள்அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கின்றேன். ஸலவாத்தும் ஸலாமும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் அவர்களது மனைவிமார் மீதும் மற்றும் நல்லவர்கள் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக.<br /><br />சுவர்க்கத்தில் பெண்களின் நிலைமைகள் பற்றி அதிகமாக கேள்விகள் எழுப்பப்படுவதால் அது சம்பந்தமாக சில கருத்துக்களை ஆதாரபூர்வமாக அறிஞர்களின் கருத்துக்களிலிருந்து முன்வைக்க முனைகின்றேன் அல்லாஹ் அதற்கு அருள் செய்வானாக.<br /><br />1- பெண்கள் அவர்களுக்கு சுவர்க்கத்தில் கிடைக்கும் இன்பங்கள், கூலிகள் பற்றி கேள்விகளைக் கேட்பது ஒரு குறையாக கணிக்கப்படமாட்டாது. ஏனனில் மனித உள்ளம் எப்போதும் தனது எதிர்காலம் பற்றியும் கடைசி முடிவு பற்றியும் தெரிந்து கொள்வதில் கடும் ஆசை கொள்கிறது. நபி (ஸல்) அவர்கள், ஸஹாபாக்கள் சுவர்க்கம் பற்றியும் அதிலிருப்பவைகள் பற்றியும் கேள்விகளைக் கேட்ட போது அதைத் தடுக்கவில்லை. ஸஹாபாக்கள் சுவர்க்கம் எதனால் கட்டப்பட்டுள்ளது என்றும் கேட்டார்கள் அதற்கு நபியவர்கள் “சுவர்க்கம் தங்க, வெள்ளி கற்களால் கட்டப்பட்டுள்ளது என்றார்கள்”. மற்றுமொரு சந்தர்ப்பத்தில் “எங்கள் மனைவிமார்கள் சுவர்க்கத்தில் எமக்குக் கிடைப்பார்களா?” என ஸஹாபாக்கள் கேட்டதற்கு “அவர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள்” என நபியவர்கள் கூறினார்கள்.<br /><br />2- மனித உள்ளங்கள் – அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் – சுவர்க்கம் அதன் இன்பங்கள் விவரிக்கப்படுகின்ற போது அதை அடைய பேராசை கொள்கின்றன. இது ஒரு நல்ல அம்சமே ஆனால் இதை அடைவதற்கான எந்தவொரு முயற்சியும் செய்யாது வெறும் ஆசையாக மட்டும் இருக்கக்கூடாது. ஏனனில் அல்லாஹ் கூறுகிறான் “நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) வைகள் காரணமாக இந்த சுவர்க்கத்தை நீங்கள் அடைந்து கொண்டீர்கள்” (43:72.) சுவர்க்கத்தை அடைய ஆசைப்படுங்கள். அது வெறும் ஆசையாக மட்டும் இருக்காது செயல்களால் அதனை உண்மைப்படுத்துங்கள்<br /><br />3- சுவர்க்க இன்பங்கள் ஆண்களுக்கு மட்டும் உரியவைகள் அல்ல. மாறாக அது ”பயபக்தி உடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது” என ஆண் பெண் இரு பாலரையும் சேர்த்தே குர்ஆன் கூறுகின்றது. மற்றோரிடத்தில் ”ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள். இன்னும் அவர்கள் சிறிதளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.” (4:124) எனவும் அல்லாஹ் கூறுகிறான்.<br /><br />4- பெண்கள் சுவனத்தில் நுழைந்தால் எங்கிருப்பார்கள்? என்ன செய்வார்கள்? இப்படியாக சுவர்க்கத்தில் அவர்களின் நிலை பற்றி அதிகமான கேள்விகளைக் கேட்டு இதிலேயே தங்கள் சிந்தனையை எப்போதும் மூழ்கடித்து விடக்கூடாது.<br /><br />உலகில் நாம் காணும் இழிவு, கஷ்டம், துன்பங்கள் அனைத்தும் சுவர்க்கத்தில் நுழைவதன் மூலமே இல்லாது போய்விடும். அந்த சுவர்க்க வாழ்க்கை முடிவே இல்லாத முழு இன்பம் நிறைந்த ஒரு வாழ்க்கையாகும். இதனையே அல்லாஹ் இப்படிக் கூறுகிறான் ”அவற்றில் (சுவர்க்கங்களில்) அவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது, அவற்றிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்.” (15:48.)<br /><br /> <br />மற்றுமோர் இடத்தில் ”இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கணகளுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன. இன்னும் ”நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்” (என அவர்களிடம் சொல்லப்படும்.)” (43:71.) இவை அத்தனைக்கும் மேலாக அல்லாஹ்வின் பின்வரும் கூற்றே போதுமானதாகும். ”அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொண்டான், அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் – இது மகத்தான பெரும் வெற்றியாகும்.” (5:119)<br /><br />5- சுவர்க்கத்தில் உள்ளம் ஆசை கொள்ளும் அம்சங்களாக அல்லாஹ் குறிப்பிடும் உணவு வகைகள், கண் கவர் காட்சிகள், அழகான படுக்கையறைகள், பலவிதமான உடைகள் இவை அனைத்தும் ஆண் பெண் இரு பாலாருக்கும் பொதுவானதே. எல்லோரும் இவ்வின்பங்களை அனுபவிப்பார்கள்.<br /><br /> <br />அதிகமாக பெண்கள் தரப்பிலிருந்து வினவப்படும் ஓர் அம்சம்தான் அல்லாஹ் சுவர்க்கத்தை மக்களுக்கு ஆசையூட்டும்போது அங்கு ஆண்களுக்கு ‘ஹூருல் ஈன்’ பெண்கள் சுவர்க்கத்தமிலிருப்பதாகவும் இன்னும் அழகான பெண்கள் இருப்பதாகவும் கூறுகிறான் ஆனால் இது போல் பெண்கள் சம்மந்தமாக ஏதும் கூறவில்லையே, பெண்களுக்கு என்ன கிடைக்கும்? என்பதாகும்.<br /><br /><strong>இதற்குரிய விடையை இப்படி நாம் பார்க்கலாம்.</strong><br /><br /> <br />(1) அல்லாஹ் ”அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது, ஆனால் அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள்.” ஆனால் ஏன் அல்லாஹ் இந்த வியத்தை இப்படி வைத்திருக்கிறான் என்பதை இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களுக்குள்ளே இருந்து விளங்கிக் கொள்ள முயற்சிப்பதில் குற்றம் ஏதும் இருக்காது.<br /><br /> <br />(2) எல்லோரும் ஏற்றுக் கொள்வது போல் பெண்களிடம் காணப்படும் இயற்கையான ஒரு அம்சம்தான் வெட்கம். இதனால் இறைவன், பெண்கள் வெட்கப்படும் ஒரு விஷயத்தைக் கொண்டு அவர்களுக்கு சுவர்க்கத்தை ஆசையூட்டவில்லை.<br /><br /> <br />(3) பெண்கள் மீது ஆண்கள் ஆசை கொள்ளும் அளவுக்கு ஆண்கள் மீது பெண்கள் ஆசை கொள்வதில்லை. எனவே அல்லாஹ் ஆண்கள் மிக ஆசை கொள்ளும் இவ்வம்சத்தின் மூலம் ஆண்களுக்கு சுவர்க்கத்தை ஆசையூட்டுகின்றான். நபி (ஸல்) அவர்கள் ”எனக்குப் பின் நான் உங்களில் அதிகம் பயப்படும் விஷயம் பெண்களால் ஏற்படும் பித்னாக்களைத்தான்” என்று கூறியிருக்கின்றார்கள். பெண்கள் ஆண்கள் மீது ஆசை கொள்வதை விட அழகு, ஆபரணங்கள், அலங்காரம் போன்றவற்றில் மிக மிக ஆசை கொண்டவர்களாகவே இருப்பார்கள். இது அவர்களின் சுபாவமாகும். <br /><br />(4) இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் ”அல்லாஹுதஆலா ஆண்களுக்கு மனைவிமார்கள் (சுவர்க்கத்தில்) உண்டு எனக்கூறியது, எப்போதும் ஆண்களே பெண்களைத் தேடுவார்கள் (ஆசையோடு அழைப்பார்கள்) எனவே சுவர்க்கத்தில் மனைவிமார்கள் உண்டு எனக்கூறி பெண்களுக்கு கணவன்மார்கள் பற்றி கூறவில்லை. ஆனால் இதனால் சுவர்க்கத்தில் பெண்களுக்கு கணவர்மார்கள் இல்லை என்பது அர்த்தமல்ல. அவர்களுக்கும்(பெண்களுக்கு) மனிதர்களிலிருந்தும் கனவன்மார்கள் அங்கிருப்பார்கள்.<br /><br />6- உலகத்தில் பெண்கள் பின்வரும் நிலைமைகளுக்கு உட்பட்டவர்களாகவே இருப்பார்கள். <br /><br />(1) திருமணம் முடிப்பதற்கு முன் ஒரு பெண் இறந்து விடலாம்.<br /><br />(2) திருமணம் முடித்து விவாகரத்துச் செய்யப்பட்ட நிலையில், மற்றுமொருவரை திருமணம் முடிக்க முன்பு இறந்து விடுபவள்.<br /><br />(3) திருமணம் முடித்தவள். ஆனால் அவளுடைய கணவனோடு சுவனம் நுழையாதவள். (இந்நிலையிலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக).<br /><br />(4) திருமணம் முடித்த நிலையில் மரணித்தவள்.<br /><br />(5) ஒரு பெண் கணவன் மரணித்த பிறகு, அவள் மரணிக்கும் வரை திருமணம் முடிக்காது இருந்தவள். (6) தன் கணவன் இறந்த பின் இன்னுமொருவரை மணமுடித்தவள். உலகில் பெண்கள் சந்திக்கும் இந்நிலைமைகளுக்கு பொருத்தமானதை மறுமையில் சந்திப்பார்கள்.<br /><br />1- திருமணம் முடிக்கும்முன் இறந்து போன இவளுக்கு மனிதர்களில் ஒருவரை அல்லாஹ் சுவர்க்கத்தில் திருமணம் முடித்து வைப்பான். நபி (ஸல்) கூறுகிறார்கள் ”சுவர்க்கத்தில் திருமணம் முடிக்காது யாரும் இருக்க மாட்டார்கள்” அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் (ரஹ்) கூறுகிறார்கள் ”உலகத்தில் திருமணம் முடிக்காது மரணித்து விட்ட பெண்ணுக்கு சுவர்க்கத்தில் அவளுக்கு விருப்பமானவரை அல்லாஹ் திருமணம் முடித்துக் கொடுப்பான். சுவர்க்க இன்பங்கள் ஆண்களுக்கு மட்டும் உரியவைகள் அல்ல. இரு பாலாருக்கும் பொதுவானதே. சுவர்க்க இன்பத்தில் ஒன்றுதான் திருமணம்.”<br /><br />2-இது போன்றே விவாகரத்துச் செய்யப்பட்டவளாக மரணித்த பெண்ணுக்கும் கிடைக்கும்.<br /><br />3-இது போன்றுதான் கணவன் சுவர்க்கம் நுழையாத பெண்ணுக்குமாகும். அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் (ரஹ்) கூறுகிறார்கள் ”ஒரு பெண் சுவனம் நுழைந்து அவள் உலகில் திருமணம் முடிக்காதவளாக இருந்தால், அல்லது அவளின் கணவர் சுவனம் நுழையாது இருந்தால் அங்கு சுவனத்திலும் திருமணம் முடிக்காத ஆண்கள் இருப்பார்கள்.” (அதாவது இந்த ஆண்கள் அந்தப் பெண்களைத் திருமணம் முடித்துக் கொள்வார்கள்).<br /><br />4- திருமணம் முடித்த நிலையில் இறந்து போனவள் சுவனம் நுழைந்தால் அவள் உலகத்தில் அவளுடைய கணவரை அங்கு பெற்றுக் கொள்வாள். (அவரும் சுவனபதியாக இருந்தால்)<br /><br />5- கணவன் மரணித்த நிலையில் அவள் மரணமாகும் வரையில் வேறு திருமணம் முடிக்காது இருந்தவள் இவள் அந்தக் கணவனுக்கே மனைவியாக இருப்பாள்.<br /><br />6-கணவன் மரணித்த பின் வேறொருவரை திருமணம் முடித்தவள் சுவனத்தில் தனது கடைசிக் கனவனையே அடைவாள். நபி (ஸல்) கூறுகிறார்கள் ”ஒரு பெண் தனது கடைசிக் கணவனுக்கே உரியவள்.” ஹுதைபா (ரழி) தன் மனைவிக்கு ”நான் சுவர்க்கத்தில் உனக்கு கணவனாக இருக்க வேண்டுமென நீ விரும்பினால், எனக்குப் பின் வேறொருவரை மணமுடிக்காதே. ஏனெனில் சுவர்க்கத்துப் பெண்களுக்கு உலகில் அவர்களின் கடைசிக் கணவன்தான் கிடைப்பார். எனவேதான் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களை நபியவர்களின் மரணத்தின் பின் மணமுடிப்பதை அல்லாஹ் ஹராமாக்கினான். சுவனத்திலும் இவர்களே நபிக்கு மனைவிமார்களாவார்கள்.<br /><br />7 -ஒரு பெண் சுவனம் நுழைந்தால் அல்லாஹ் அவளை குமரிப் பெண்ணாக ஆக்கி விடுகிறான். நபி (ஸல்) கூறுகிறார்கள் ”எந்த ஒரு பெண்ணும் வயோதிக நிலையில் சுவர்க்கம் நுழைய மாட்டார்கள். அல்லாஹ் அவர்களை சுவர்க்கத்தில் நுழைய வைத்து அங்கு அவர்களை குமரிகளாக ஆக்கி விடுவான்.”<br /><br />8- சில ஸஹாபாக்கள் ”உலகத்துப் பெண்கள் சுவர்க்கத்தில் ஹூருல் ஈன்களைவிட பன்மடங்கு அழகாக இருப்பார்கள். காரணம் உலகில் அவர்கள் அல்லாஹ்வை வணங்கி வழிப்பட்டதாகும்.” எனவும் கூறியிருக்கின்றார்கள்.<br /><br />9- இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் ”அங்கு சுவர்க்கத்தில் யாரும் மற்றவர்களின் மனைவிமார்களை நெருங்க முடியாது தடுக்கப்பட்டிருப்பார்கள்.”<br /><br />இறுதியாக அன்பின் சகோதரிகளே! சுவர்க்கம் ஆண்களுக்குப் போன்றே உங்களுக்காகவும் (பெண்களுக்காகவும்) அலங்கரிக்கப்பட்டிருக்கும். ”நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளில் (அவற்றிலுள்ள) ஆறுகளில் இருப்பார்கள். உண்மையான இருக்கையில் சர்வ வல்லமையுடைய அரசனின் (அருள்) அண்மையில் இருப்பார்கள்.” என அல்குர்ஆன் கூறுகின்றது (54:54,55.)<br /><br />அழிவே இல்லாத சுவர்க்க வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வுலக வாழ்க்கை அவசரமாக முடிந்து விடும். அன்புச் சகோதரிகளே அந்த சுவனத்தை அடைய வழி உறுதியான ஈமானும் ஸாலிஹான அமல்களுமாகும். போலியான வெறும் சுவன ஆசை மட்டும் நமக்கு அதைப் பெற்றுத்தராது. நபியுடைய இந்த பொன்மொழியை யோசித்துப்பாருங்கள். ”ஒரு பெண் ஐவேளை தொழுதும், வருடத்தில் ஒரு மாதம் நோன்பு நோற்றும், தனது கற்பைப் பாதுகாத்தும், கனவனுக்கு வழிப்பட்டும் நடந்து கொண்டால் ‘மறுமையில் நீ விரும்பும் வாயிலினூடாக சுவர்க்கத்தில் நுழைவாயாக’ என அவளுக்கு கூறப்படும்.” என நபி (ஸல்) கூறினார்கள்.<br /><br />தான்தோன்றித்தனமாக, கட்டவிழ்த்த காளைக்கன்று போல் ஒழுக்கம் எனும் பாதுகாப்பு வளையத்திற்குள்ளிருந்து வெளியேறுவதுதான் பெண்ணுரிமை, பெண் சுதந்திரம், என்றெல்லாம் இன்று அழைப்பு விடுக்கின்ற அறிவுஜீவிகள், சிந்தனையாளர்கள்(?), எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் மற்றும் இணைய, ஒலி, ஒளி அலைவரிசைகளிலிருந்தும் மிக எச்சரிக்கையோடு உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக இவர்கள் உங்களை இந்த சுவன இன்பத்தை அடையவிடாது தடுப்பதற்கே முயற்சிக்கின்றார்கள். இவர்களைத்தான் அல்லாஹ் இப்படி எச்சரிக்கின்றான் ”(முஃமின்களே) அவர்கள் (நயவஞ்சகர்கள், காபிர்கள்) நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி (இவ்வகையில்) நீங்களும் அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள். ” (4:89.)<br /><br />எனவே அல்லாஹ் நமது பெண்களுக்கு சுவனம் நுழையும் பெரும் பாக்கியத்தை கொடுப்பானாக. மனித, ஜின், ஷைத்தான்களின் மாய வலைகளிலிருந்து அல்லாஹ் நம்மையும் நம் பெண்களையும் காப்பானாக. ஆமீன்.<br /><br /><br />Abdul Rahman<br />Doha-QatarABDUL RAHMANhttp://www.blogger.com/profile/17272066359885172059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4509831693098583447.post-89670480332728665902010-03-20T02:31:00.000-07:002010-03-20T02:56:49.014-07:00மஹ்ஷரும் இளைஞனும்<strong>بسم الله الرحمن الرحيم</strong><br /><br /><br /><strong>அன்புள்ள சகோதர, சகோதரிகளே தங்கள் அனைவருக்கும்</strong><br /><br />”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் மத்துல்லாஹி வபரக்காத்தஹு (தங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!)<br /><br /><br /><strong>முன்னுரை</strong><br /><br />இன்றைய காலகட்டத்தில் நம் இளைஞர் சமுதாயம் சீரழிந்து வருகிறது இதற்கு இஸ்லாத்தை சேர்ந்த இளைஞர்கள் மட்டும் விதிவிலக்கா? என்றால் இல்லை ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு இளைஞானவது சீரழிகிறான் இந்த சீரழிவிற்கு 2 காரணங்கள் உள்ளன ஒன்று தவறான நண்பர்கள் இப்படிப்பட்ட நட்பின் காரணமாக அவர்களிடம் கட்டுக்கடங்காத வேகமும் துணிச்சலும் நிறைந்துவிடுகிறது இதனை நன்முறையில் பயன்படுத்தினால் அவன் மிகச் சிறந்த மனிதனாக வரலாம் ஆனால் ஷைத்தான் அவனை சூழ்ந்துக்கொண்டு அவனை சிந்தனையை மறக்கடித்து விடுகிறான்!<br /><br /><br /><br />மற்றொரு காரணம் இஸ்லாம் அவர்களை சென்றடைவதில் ஏதோ சிக்கல் உள்ளது அப்படியே சென்றடைந்தாலும் அவர்கள் புரிந்துக்கொள்ள தடுமாறுகிறார்கள்! இத்தனைக்கும் காரணம் நம் குடும்ப உறுப்பினர்கள் இப்படிப்பட்ட இளைஞர்களை திட்டுவதும், தரக்குறைவாக நாலுபேர் முன்னாடி அவமானமாக பேசுவதாலும் அவர்கள் மனம் உடைந்து போய் இதற்குமேல் என்ன உள்ளது பெயர் கெட்டுப்போக என்று எண்ணி விடுகிறார்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்களிடம் இஸ்லாத்தை எடுத்துச்சொன்னால் உன் வேலையைப் பார்த்து விட்டுப் போங்கள் என்றும் உதாசீனப்படுத்தி தங்களைத்தாங்களே நஷ்டத்தை விலைக்கு வாங்கிக்கொள்கிறார்கள்!<br /><br /> <br />இப்படியே இவர்களை விட்டுவிட்டால் இவர்கள் கைசேதப்பட்டுவிடுவார்கள் எனவே தான் ஒரு வித்தியாசமான முறையில் இவர்களை அணுக எண்ணி இந்த கட்டுரையை வரைந்துள்ளேன்! இதைப்படிக்கும்போது நகைச்சுவையாகவும் கிண்டல் அடிப்பது போன்றும் சிலருக்கு தோன்றும் ஆனால் இந்தக் கட்டுரையை சிந்தித்து படித்தால் இக்கட்டுரையின் உண்மை நோக்கம் தங்கள் முன் வரும்! தயவு செய்து சிந்தித்துப்படியுங்கள் உங்கள் சகோதரர்களுக்காக! தங்களது குடும்பங்களில் இஸ்லாத்தின் தாவா பணி மேற்கொள்ள இது சிறந்த வழியாகவும் ஒரு சிறு உதவியாகவும் தங்களுக்கு இருக்கும் என நினைக்கிறேன்! அல்லாஹ் நமக்கு தெளிவுபடுத்துவானாக!<br /><br /> <br />மனிதன் மஹ்ஷரில் வெற்றி பெற நபிகளாரின் அறிவுரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஹ்சரின் கேள்விக் கணக்கைப்பற்றி கூறும்போது பின்வரும் 5 கேள்விகளை முன்வைத்தார்கள் இறைவனின் நீதி மன்றத்திலிருந்து அகன்று செல்ல முடியாது என்றார்கள்<br /><br />1) வாழ்நாளை எப்படி கழித்தான்,<br /><br />2) வாலிபத்தை எவ்வாறு கழித்தான்,<br /><br />3) எவ்வாறு செல்வத்தை ஈட்டினான்,<br /><br />4) அந்த செல்வத்தை எவ்வாறு செலவழித்தான்,<br /><br />5) அவன் அறிந்ததிலிருந்து எவ்வாறு செயல்பட்டான். (திர்மிதி)<br /><br /> <br /><strong>குறிப்பு-</strong><br /><br />இங்கு ”நான்” என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளதன் காரணம் ஒவ்வொருவரும் இதை உள்ளத்தால் உணரவேண்டும் என்பதற்காகவே! தவறாக எண்ணிவிடவேண்டாம். இந்தக் கட்டுரை ஒரு பிராக்டிகல் (ஒரு செயல்முறை விளக்கமாக உள்ளது)<br /><br /> <br /><strong>இனி இந்த கட்டுரையின் உள்ளே செல்வோம்!</strong><br /><br />நான் மரணித்துவிட்டேன், கப்ருவாழ்க்கையை அணுபவித்து விட்டேன்! இப்போது இறைவன் சந்நிதானத்தில் நிற்கிறேன்! அவன் அர்ஷிலிருந்து என்னைப்பார்த்து கேட்கிறான்!<br /><br /><br /><strong>அல்லாஹ்</strong><br /><br />ஆதமின் மகனே! நீ உன் வாலிபத்தை எவ்வாறு கழித்தாய்?<br /><br /> <br /><strong>இன்றைய இளைஞன்</strong><br />என் இறைவா! நான் பெண்கள் பின்னால் நாயாக அழைந்தேன்! ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் நின்றுக்கொண்டு அவர்களில் ஒருத்தியை கடைக்கண் பார்வையால் பார்த்துக் கொண்டிருந்தேன்! இதைக்கண்ட அந்தப் பெண்ணின் உறவினர்கள் என்னை துரத்தி துரத்தி அடித்தார்கள்!<br /><br />இதைக்கண்ட என் தந்தை என் படிப்பை நிறுத்திவிட்டு என்னை தனது கடையில் அமர்த்திக்கொண்டார். அப்போதும் நான் திருந்தவில்லை என் தந்தை இல்லாத சமயத்தில் கல்லாப் பொட்டியில் தினமும் சில ரூபாய்களை திருடினேன்! என் தந்தையோ மகன்தானே என்று கண்டுக்காமல் இருந்துவிட்டார்!<br /><br />திருடிய பணத்தில் கடைத்தெருவின் ஒரு ஓரத்தில் ஒழிந்துக்கொண்டு புகை பிடித்தேன்! இதைக்கண்ட என் தந்தை ஓட, ஓடு விரட்டியடித்தார்! இதைக்கண்ட ஒரு மாற்றுமத பெண் சிறித்தால் உடனே இருவருக்கும் காதல் மலர்ந்தது! இப்படியே சில மாதங்கள் என் இளமைப்பருவம் கழிந்தது பிறகு ஒருநாள் என் தந்தை இல்லாத நேரத்தில் கடையில் இருந்த 10000 ரூபாயை எடுத்துக்கொண்டு அந்த பெண்ணுடன் தலைமறைவாகிவிட்டேன். பத்து நாட்கள் உல்லாசமாக திரிந்ததால் பணம் குறைந்தது உடனே வீட்டிற்கு தெரியப்ப டுத்தினோம் நம் குடும்பத்தினர் பதறியடித்துக்கொண்டு வந்து எங்களை மீட்டனர்! என்னுடன் இருந்த அந்த பெண்ணின் குடும்பம் அவமானம் தாங்காமல் ஊரை காலி செய்துவிட்டு சென்றனர்! சனியன் தொலைந்து போனதாக எண்ணி என நான் நிம்மதி பெறுமூச்சு விட்டேன்!<br /><br /> <br /><strong>அல்லாஹ்</strong><br /><br />என் மீது பயம் வரவில்லையா? பாங்கு சப்தம் உண் காதுகளில் விழவில்லையா?<br /><br /> <br /><strong>இன்றைய இளைஞன்</strong><br /><br />இல்லையே! காரணம் நான்தான் செல்போனுடன் கூடிய ஏர் போன்-ஐ காதில் மாட்டிக்கொண்டு எப்போதும் சினிமா பாடல்களை கேட்டு ரசித்துக் கொண்டிருந்தேனே எவ்வாறு பாங்கு சப்தம் கேட்கும்.<br /><br /> <br /><strong>அல்லாஹ்</strong><br /><br />ஆதமின் மகனே நீ எவ்வாறு செல்வத்தை ஈட்டினாய்?<br /><br /> <br /><strong>இன்றைய இளைஞன்</strong><br /><br />நான் தவறான பாதையில் சென்றதை கண்டு என் தாயார் கவலையடைந்து பெண் பார்க்க ஆரம்பித்தனர் மாப்பிள்ளை வெத்துவேட்டு என்று கூறிவிடுவார்களோ என்று பயந்த என் தந்தை கடையின் முழு பொறுப்பையும் எண்ணிடம் கொடுத்து விட்டு வீட்டில் அமர்ந்துவிட்டார். நானோ புது முதலாளி என் நண்பர்களுடன் சேர்ந்து சுதந்திரப்பறவை போல் என் இளமையை கழித்தேன் யாரும் என்னை இஸ்லாத்தை பற்றி எடுத்துக்கூறவில்லை!<br /><br />1000 பொய் சொல்லி நிறை பணத்தை செலவழித்து மார்க்க ஒழுக்கம் பற்றி அறியாத ஒரு பெண்ணை மணந்துக் கொண்டேன் காரணம் நிறைய தங்கமும், கை நிறைய வரதட்சணை பணமும் கொடுத்தார்கள்! 8 மாதங்கள் கழிந்தன தலைப்பிரசவத்தை என்னுடைய குடும்பத்தில் பார்ப்பதில்லை என்று என் தாயார் அறிவுரை கூறியதன் படி கர்ப்பிணிப்பெண்ணாகிய என் மனைவியை அவளது தாயார் வீட்டிற்கு பிரசவம் முடிந்து வா! என துரத்தினேன்! அவளும் கை குழந்தையுடன் 6 மாதம் கழித்து புத்தாடைகள், நகைகள், குழந்தையின் பெயரில் வைப்புத்தொகை (Fixed Deposit) போன்ற வற்றை கொண்டுவந்தால் உடனே ஏற்றுக்கொண்டேன்! என் மாமனாரோ என்னால் கடனாளியாக மாறினார்! இவ்வாறுதான் நான் செல்வத்தை ஈட்டினேன் என்பான்!<br /><br /> <br /><strong>அல்லாஹ்</strong><br /><br />ஆதமின் மகனே உன் செல்வத்தை எவ்வாறு செலவழித்தாய்?<br /><br /> <br /><strong>இன்றைய இளைஞன்</strong><br /><br />என் இறைவா! என்னுடைய குழந்தை பிறந்ததும் என் மாமியார் குழந்தைக்கு நாகூர் தர்காவிறகு சென்று மொட்டை அடித்து தலையில் சந்தனம் தடவினால் முடி நன்றாக முளைக்கும் என்று கூறினார்! உடனே என் தாயாரோ அப்படியே ஏர்வாடிக்கு சென்றுவிட்டுவரலாம் எனக்கு பலநாட்களாக ஒரு நியாஸ் (வேண்டுதல்) உள்ளது என்றார்! உடனே என் மைத்துனரும் தங்கையும் அருகே உள்ள முத்துப்பேட்டை மற்றும் வேளாங்கண்ணிக்கும் சென்று சுற்றுலா செல்லலாம் என்று கூறினார்கள்! உடனே நானும் சம்மதித்து மினி வேன் ஒன்றில் கூட்டுக்குடும்பமாக சுற்றுலா சென்றோம் அதற்கு ஆன செலவுத் தொகை ரூபாய் 30000.<br /><br />சுற்றுலா சென்று 6 மாதங்களுக்குள் என்னுடைய தொழிலில் பெருத்த நட்டம் ஏற்பட்டது உடனே எனது மனைவியின் நகைகளை அடைமானம் வைத்து வட்டிக்கு பணம் வாங்கி தொழில் நடத்தினேன். ஓரளவு லாபம் வந்தது வட்டி கூட கட்டவில்லை!<br /><br />ஆனால் மனதில் ஒரு நீங்காத ஆசை இருந்தது 2 வட்டிக்கு ரூ.60000- த்தில் லேட்டஸ்ட் மாடலில் ஒரு மோட்டர் பைக் வாங்கினேன்!<br /><br />மனைவி கோபித்துக் கொண்டால் உடனே 4 வட்டிக்கு ரூ. 1 இலட்சத்தில் 10 சவரன் நகை வாங்கி கொடுத்தேன்!<br /><br />பிறந்த என் மகனுக்கு எல்.கே.ஜி. சேர்க்க வேண்டும் எனது தந்தையோ செல்வந்தர்கள் படிக்கும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என கட்டாயப்படுத்தினார் 6 வட்டிக்கு ரூ.40000 செலவானது.<br /><br />மைத்துனர் வந்தார் மச்சான் ஒரு 3 அடுக்கு மாடி வீடு உள்ளது சீப் ரேட்டில் ரூ.10 லட்சத்தில் முடித்துத்தருகிறேன் என்றார் உடனே என்னிடம் இருந்த சொத்தை 3 இலட்சத்துக்கு விற்று 3 அடுக்கு மாடி வீடு வாங்க திட்டமிட்டு வாங்கிய வீட்டை வங்கியில் அடைமானம் வைத்தேன்.<br /><br /> <br /><strong>அல்லாஹ்</strong><br /><br />ஆதமின் மகனே! நீ அறிந்ததிலிருந்து எவ்வாறு செயல்பட்டாய்?<br /><br /><strong>இன்றைய இளைஞன்</strong><br /><br />என் இறைவா! கடன் தொல்லை தாங்க முடியவில்லை தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டேன்.<br /><br /><strong>அல்லாஹ்</strong><br /><br />ஆதமின் மகனே! நீ மரணித்த பின் உன் குடும்பத்தின் நிலை என்ன?<br /><br /><strong>இன்றைய இளைஞன்</strong><br /><br />என் இறைவா! நான் மரணித்தபின் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது!<br /><br /> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyKohELqteFvv8sbfahTahfKIqUMBGOVvyUGqpCR1kWxoIr2qakiyuPVbgMGQ6eBl5uXg2Mk00X51O7jJUMIFU3DouxDLSOmEMcd3po-8lTrrajs0BaahijFH0TO0AowRmSnCMPQL1V80/s1600-h/1.bmp"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 220px; height: 219px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyKohELqteFvv8sbfahTahfKIqUMBGOVvyUGqpCR1kWxoIr2qakiyuPVbgMGQ6eBl5uXg2Mk00X51O7jJUMIFU3DouxDLSOmEMcd3po-8lTrrajs0BaahijFH0TO0AowRmSnCMPQL1V80/s400/1.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5450649549936236114" /></a><br /><br /><br /><strong>அல்லாஹ் (இவ்வாறு சொன்னால்)</strong><br /><br />ஆதமின் மகனே! நீ மரணித்த பின் உன் குடும்பத்தின் நிலை இதுதான், கேள்!<br /><br /><strong>விதவையான உன் மனைவியின் நிலை பற்றி கேள்</strong><br /><br />நீ மரணித்தபின் ஒரு நாள் உன் விதவையை உன் நெருங்கிய உறவினர் கையை பிடித்து இழுத்தான் அவளோ பதறித்துடித்து ஓடி அறைக்குள் தாழிட்டு தன் கற்பை காப்பாற்றிக்கொண்டாள்! அழுதாள்! (இவள் மார்க்க நெறி பேணி தன் கணவனுக்கு நல்ல புத்தியை புகட்டியிருந்தால் இந்த நிலை வருமா? இது இவள் செய்த தீய செயலுக்கான விதி அதனால் அவதிப்படுகிறாள்)<br /><br /> <br /><strong>அநாதையான உன் மகனின் நிலை பற்றி கேள்</strong><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiL8O3yfve1KlrME8HbIPI6nzobFTs8e7pbiWmMfxLnIfl1jmy3FpEexi8SqOS9dEdm7ygrT4POxrdDz_m0nVRyqiPdMtalJHq1YvQeS0NgpDyEAkEyZcxqxI-5tAzF0UvMs7CF6PYI5es/s1600-h/2.bmp"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 219px; height: 299px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiL8O3yfve1KlrME8HbIPI6nzobFTs8e7pbiWmMfxLnIfl1jmy3FpEexi8SqOS9dEdm7ygrT4POxrdDz_m0nVRyqiPdMtalJHq1YvQeS0NgpDyEAkEyZcxqxI-5tAzF0UvMs7CF6PYI5es/s400/2.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5450650098699342546" /></a><br /><br />ஒருநாள் உன் மகன் பள்ளியில் சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு மாணவன் சொன்னான் என் தந்தை டாக்டர், ஒருவன் என் தந்தை இஞ்ஜீனியர், ஒருவன் என் தந்தை வக்கீல் என்றனர் அவர்கள் உன் மகனிடம் உன் தந்தை என்ன செய்கிறார் என்று கேட்க அவனோ மூச்சடைத்து நின்றான்! பதிலுக்கு எனக்கு அப்பா இல்ல! என்று கதறினான் பிறகு ஓடிச் சென்று பள்ளியில் உள்ள ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து தேம்பி! தேம்பி அழுதான் (இவன் என்ன பாவம் செய்தான்? இந்த பச்சிளம் பிஞ்சின் அழுகைக்கு உன்னிடம் பதில் உள்ளதா? என்று அல்லாஹ் நம்மை கேட்பானே!)<br /><br /> <br /><strong>அநாதையான உன் பெற்றோர் நிலை பற்றி கேள்</strong><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVjiItOLgnerPFo_x5AqNtsWxm-v2yriEz0nVhHvgkO2XQ4ccn8OlPLt3gKVHjprIWBJSINq8Cz04jr6Oxovh6hBuSAsHNcqg6gTSEppubfT8hSdSp8kyu3jrUJH9OajOfk2RphPlTkxQ/s1600-h/3.bmp"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 237px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVjiItOLgnerPFo_x5AqNtsWxm-v2yriEz0nVhHvgkO2XQ4ccn8OlPLt3gKVHjprIWBJSINq8Cz04jr6Oxovh6hBuSAsHNcqg6gTSEppubfT8hSdSp8kyu3jrUJH9OajOfk2RphPlTkxQ/s400/3.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5450650643264564482" /></a><br /><br />நீ மரணித்தபின் உன் தந்தை உன்னால் சொத்தை இழந்தார், சுகத்தை இழந்தார் நோய்வாய்பட்டு மருத்துவம் செய்ய வசதியில்லாமல் ”கேடுகெட்ட மகனையா நான்<br />பெற்றேன்” என்று உன்னை சபித்துக்கொண்டு மரணித்தார்!<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0yJ0USzQUV822ueKrixN476SJxieq_BCo1eolkFS5PB2gQSXF-9XJRGrZy8OZ1S3UAPa8XGSlpXubCGdrdc8Xpc8NGgMLayINF_wsIJyXuv2y9bYoJ53Ge3ThuytqsWl0g7l-z5J03-Q/s1600-h/4.bmp"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 298px; height: 399px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0yJ0USzQUV822ueKrixN476SJxieq_BCo1eolkFS5PB2gQSXF-9XJRGrZy8OZ1S3UAPa8XGSlpXubCGdrdc8Xpc8NGgMLayINF_wsIJyXuv2y9bYoJ53Ge3ThuytqsWl0g7l-z5J03-Q/s400/4.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5450651195083911858" /></a><br /><br />நீயும் உன் தந்தையும் மரணித்த பின் உன்னை 10 மாதம் வயிற்றில் சுமந்து சிரமத்திலும் சிரமமாக பெற்றெடுத்த தாய் அநாதையாக எந்த புகழிடமும் கிடைக்காமல் கிழவியாக ஒவ்வொரு வீட்டிலும் பத்துப்பாத்திரம் தேய்த்து வாழ்கையை கழித்தாள்! அவளுக்கு ஆறுதல் சொல்ல ஒரு நாதியும் இல்லாமல் மனம் உடைந்து ”கேடுகெட்ட மகனையா நான் 10 மாதம் சுமந்தேன்” என்று உன்னை சபித்துக் கொண்டு மரணித்தாள்!<br /> <br /><strong>இன்றைய இளைஞன் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டால்?</strong><br /><br />இந்த இன்றைய இளைஞன் அல்லாஹ்விடம் மஹ்ஷரில் மன்னிப்பு கேட்பான் அல்லாஹ் மன்னிப்பானா? கேடுகெட்டவனே நீ மனிதர்களிளேயே மஹா கெட்ட மனிதனாகிய பிர்அவுனைவிட கேவலமான காரியத்தை செய்துவிட்டு என்னிடம் மன்னிப்பை வேண்டுகிறாயா? நீயோ பிர்அவுன்-ஐ விட முந்தி அவனுக்கு தந்தையாக உள்ளாய் போ நரகின் பாதாளத்தில் நிரந்தரமாக தங்கிக்கொள்! உனக்கு மன்னிப்பே கிடையாது என்று சொல்லிவிட்டால் ? ? ? ? (அல்லாஹ் காப்பாற்ற வேண்டும் இந்த நிலை நம்மில் யாருக்கும் வரவேண்டாம்)<br /><br /><strong>இளைஞர்களே இதோ குர்ஆனில் உங்களுக்குள்ள கனிவான அறிவுரை</strong><br /><br />”இன்னும் நினைவு கூறுங்கள் நாம் (யாஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது! (உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன் (களான ஏழை களுக்கும்) நன்மை செய்யுங்கள்! மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்! மேலும் தொழுகையை முறையாக கடைபிடித்து வாருங்கள்! ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்! என்று உறுதி மொழியை வாங்கினோம் ஆனால்உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல் (அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள். இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்! (உலகப் பொதுமறை திருக்குர்அன் 2:83)<br /><br /> “எவர் அல்லாஹ்வுக்கு பயந்து நடக்கிறாரோ அல்லாஹ் அவருக்குச் சிரமங்களிலிருந்து வெளியேறுவதற்கு ஏதேனும் வழி வகையை ஏற்படுத்துவான். அன்றி, அவர் அறிந்திராத விதத்தில் அவருக்கு வாழ்க்கை வசதிகளை வழங்குவான். (திருக் குர்ஆன் 65: 2-3)<br /><br /><strong>இளைஞர்களே</strong><br /><br />“இன்னும் அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக! (திருக்குர்ஆன் 7:199)<br /><br />“அளவு கடந்து வீண் செலவு செய்ய வேண்டாம்”.(திருக் குர்ஆன் 17:26)<br /><br />“அல்லாஹ்வின் அருளைப்பற்றி நீங்கள் நம்பிக்கையிழந்து விட வேண்டாம்! (திருக் குர்ஆன் 39:53)<br /><br />ஆதமனின் சந்ததிகளே! இவ்வாறு அல்லாஹ்விடம் துவா கேளுங்கள்!<br /><br />”இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதம் புறிந்த நிஃமத்துக்காக (அருள் கொடைகளுக்காக!) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலி ஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தி யருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன், அன்றியும் நான் முஸ்லிம்களில் நின்று முள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக) இருக்கிறேன்” என்று கூறுவான். (உலகப் பொதுமறை திருக்குர்அன் 46:15)<br /><br /><strong>முடிவுரை</strong><br /><br />என் அருமை மூமின்களே! தந்தை இல்லாத, தாய் இல்லாத அநாதை சிறுவர்களை விரட்டாதீர்கள் அவர்கள் பாசம் வேண்டி தங்களிடம் வந்திருக்காலாம் நீங்கள் அறியமாட்டீர்கள் அல்லாஹ் அறிவான்!<br /><br />என் அருமை மூமின்களே! கணவனில்லாத ஏழை விதவைகளை தவறான கண்ணோடத்தில் பார்க்காதீர்கள் மேலும் அவர்களை விரட்டாதீர்கள் அவர்கள் தங்களது கற்புக்கு புகழிடம் தேடி தங்களிடம் வந்திருக்காலாம் நீங்கள் அறியமாட்டீர்கள் அல்லாஹ் அறிவான்!<br /><br />என் அருமை மூமின்களே! பிள்ளைகளை இழந்து தவிக்கும் அல்லது பிள்ளைகளே இல்லாமல் வயதான காலத்தில் தவிக்கும் பெற்றோர்களை விரட்டிவிடாதீர்கள்! அவர்கள் பாசம் வேண்டி தங்களிடம் வந்திருக்காலாம் நீங்கள் அறியமாட்டீர்கள் அல்லாஹ் அறிவான்!<br /><br /><strong>மூமின்களே அல்லாஹ்வின் வார்த்தைகளை கேளுங்கள்</strong><br /><br /> “(நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா? பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான். மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை” ……………..(அல்-குர்ஆன் 107:1-3)<br /><br />“அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; ‘எதை, (யாருக்குச்) செலவு<br />செய்யவேண்டும்’ என்று; நீர் கூறும்: ‘(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதை களுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச்<br />செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்” (அல்-குர்ஆன் 2:215)<br /><br /><strong>குறிப்பு</strong><br /><br />மூமின்களே! இங்கு பதியப்பட்டது எனது சொந்தக்கருத்துக்களே! இது இளைஞர்களிடம் தாவா செய்யும் ஒரு கருவியாக இருக்கட்டும்! இக்கட்டுரையில் தவறு இருந்தால் திருத்துவதற்கு அறிவுரை கூறுங்கள் (இன்ஷா அல்லாஹ்) திருத்திக்கொள்ளலாம்! இந்தக்கட்டுரை உங்களுக்கு அர்ப்பணம்! இதை நீங்கள் வரைந்த கட்டுரையாக நினைத்துக்கொண்டு இளைஞர்களை சீர்படுத்துங்கள் எப்படியாவது நம் இளைஞர்கள் சீர்படவேண்டும் என்பதே நம் ஆசையாக இருக்கட்டும்! பேரும் புகழும் அல்லாஹ்வுக்கே சொந்தம் நம் எல்லோருக்கும் அல்லாஹ் நிறைவான கூலி வழங்கி அருள்புரிவானாக! அமீன்!<br /><br /><strong>அன்புடன்</strong><br /><br />அல்லாஹ்வின் அடிமை – உங்கள் நலம் விரும்பி<br /><br />Abdul Rahman<br />KilakaraiABDUL RAHMANhttp://www.blogger.com/profile/17272066359885172059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4509831693098583447.post-31969308702366743492010-03-20T02:19:00.000-07:002010-03-20T02:21:29.753-07:00அல்லாஹ்! சுப்ஹானல்லாஹ்<strong>بسم الله الرحمن الرحيم</strong><br /><br /> <strong> அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)</strong> <br /> <br />இறை விசுவாசிகளே! <br /><br />நாம் சம்பாதிக்கவேண்டும், உயர்ந்த மாளிகைகளைப் போன்ற வீடுகளை கட்ட வேண்டும் அதில் அழகிய துணைகளுடனும் வாரிசுகளுடனும் குடிபுக வேண்டும் என்று சிந்திப்போம் அதற்கான திட்டங்கள் தீட்டி அதை நடைமுறைப் படுத்துவோம் அதில் சிலருக்கு அல்லாஹ் வெற்றி அளிப்பான் மற்றும் சிலருக்கு தோல்வியளிப்பான்.<br /><br /> <br /><br />தங்கள் எண்ணங்களில் வெற்றிபெற்றவர்கள் அல்லாஹ்வின் கிருபை கிடைத்து விட்டதாக எண்ணி ஆனந்தமாக இருப்பார்கள் மற்றும் சிலரோ தன் எண்ணங்களில் தோல்வியடைந்தவர்களாக விரக்தியடைந்தும் அல்லாஹ்வின் கிருபை கிடைக்கவில்லை என்று எண்ணி சலிப்படைந்து வாழ்ந்து வருவார்கள்.<br /><br /> <br /><br />சகோதரர்களே! சிந்தித்துப்பாருங்கள்! நாம் எங்கே இருக்கிறோம்! பணம், பொருள், மனைவி மக்கள், வசதிவாய்ப்புகள் இவைகள்தான் நமக்கு அல்லாஹ்விடம் கிடைத்த அருட்கொடைகளா?<br /><br /> <br /><br />அல்லாஹ் நமக்கு ஏதோ ஒன்றை அருளிவிட்டால் உடனே ”அர் ரஹ்மான்! அர்ரஹ்மான்” என்று கூறுகிறோம்! ஆனால் நாம் நினைத்தது நடக்காமல் போகும்பட்சத்தில் சோகமே உருவானதாக எண்ணிக் கொண்டு அல்லாஹ்வைத் தவிர வேறு ஏதாவது ஒரு சக்தி கைகொடுக்குமா? என்று ஏங்கி அதைத் தேடும் பாதைகளில் அமர்ந்துவிடுகிறோம்!<br /><br /> <br /><br />ஏன் நீங்கள் நினைத்ததை அல்லாஹ் நிச்சயம் நடத்தவேண்டும் என்று நினைக்கிறீர்களா? இப்படி நீங்கள் நினைத்து விடாதீர்கள் காரணம் நீங்கள் இப்படி நினைத்துவிட்டால் இது பாவங் களிலேயே மிகப்பெரிய பாவமாக மாறிவிடும் மேலும் ”அல்லாஹ்வுக்கு நாம் அடிமை” என்ற கொள்கை தலைகீழாக மாறிவிடும்! (அல்லாஹ் என்னை மன்னிப்பானாக!).<br /><br /> <br /><br />சகோதரர்களே இந்த உலக வாழ்கை பற்றி அல்லாஹ் கூறும் போது<br /><br />“இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றக் கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை” (ஆலஇம்ரான்:185)<br /><br /> <br /><br /> மேலும் இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் வீணுமேயன்றி (வேறு) இல்லை. இன்னும் பயபக்தியுடையோருக்கு நிச்சயமாக மறுமையின் வீடு மேலானதாகும்” (அல்அன்ஆம்: 32)<br /><br /> <br /><br />அல்லாஹ் நம்மை துரத்தி துரத்தி உதவிக் கொண்டிருக்கிறான் நாம் அதை சிந்திப்பதில்லையே!<br /><br />சகோதரர்களே நீங்கள் இந்தக் கட்டுரையை படித்துக் கொண்டிருக்கின்றீர்கள் சற்று தங்களைப்பற்றி கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்!<br /><br />சென்ற வினாடி நாம் எங்கே இருந்தோம்<br />சென்ற வாரம் நாம் எங்கே இருந்தோம்<br />சென்ற மாதம் நாம் எங்கே இருந்தோம்<br />சென்ற வருடம் நாம் எங்கே இருந்தோம்<br />பிறப்பதற்கு முன் நாம் எங்கே இருந்தோம்<br />(குழப்பமாக இருக்கிறதா? இதுதான் வாழ்க்கை!)<br /><br /> <br /><br />நம்மை பாலூட்டி, அறிவுட்டி வளர்த்த அருமைத் தாய் கர்ப்பம் தறிக்கும் முன் நாம் அற்பத்திலும் அற்பமான ஒரு கொசுவின் சடலமாக கூட இருக்கவில்லையே! அதைவிட கொடுமை ஒரு சூனியமாக (புஜ்ஜியமாக) கூட இருக்கவில்லையே! இப்படிப்பட்ட நிலையில் அல்லாஹ் நாம் பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு நம் தாயின் வயிற்றில் ஒரு அற்பமான நீர்த்துளியால் (இந்திரியத்துளியாக) நம்மை செலுத்தி அந்த நீர்த்துளிக்குள் நம் உயிரை ஊதினானே! அவன் ரஹ்மானில்லையா?<br /><br /> <br /><br />தாயின் வயிற்றில் நம்மை ஒப்படைத்து உதவினானே!<br /><br />உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப் பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து. (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே, சிந்தித்து விளங்கிக் கொள்ள கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்கள் விவரித்துள்ளோம் (6-98)<br /><br /> <br /><br />நம் உயிருக்கு உடல் கொடுத்து உதவினானே!<br /><br />அவன்தான் கர்ப்ப கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்கின்றான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை, அவன் யாரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான் (3-6)<br /><br /> <br /><br />தாயின் கர்ப்பப் பையில் நம் உயிரை கண்காணித்து உதவினானே! ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப் பைகள் சுருங்கி குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான். ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது (13-8)<br /><br /> <br /><br />வளரும் பருவத்தில் நமக்கு கல்வி அறிவைக் கொடுத்தானே!<br /><br />”(நபியே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். நீர் ஓதும், உமது இறைவன் மாபெரும் கொடையாளி, அவன்தான் எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதன் அறியாத வற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.” (96:5)<br /><br /> <br /><br />நமக்கு வாழ வழிவகை செய்து ஆற்றலை கொடுத்தானே!<br /><br />நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான். (அல்குர்ஆன்: 16:14)<br /><br /> <br /><br />நமக்கு ஆற்றல் மட்டும் போதுமா என்று எண்ணி நம் ஆற்றலுக்கு உதவியும் செய்தானே!<br /><br />அவன்தான் வானத்திலிருந்து மழையை அளவோடு இறக்கி வைக்கிறான். பின்னர், அதனைக் கொண்டு இறந்து கிடந்த பூமியை நாம் தாம் உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே நீங்களும் (மரணத்திற்கு பின் உயிர்ப்படுத்தப் பெற்று) வெளிப் படுத்தப்படுவீர்கள். (43:11)<br /><br /> <br /><br />மனிதர்களுக்கு குறைகளும் கொடுத்தான் அந்த குறைகளால் நிறைகளும் கொடுத்தானே!<br /><br />சகோதரர்களே, அல்லாஹ் சிலர் சிலருக்கு உடலளவில் குறைபாடுகள் கொடுத்தான் ஆனால் நாமோ இந்த குறைபாடுகளை கண்டு ஏன் இவர்களை இவ்வாறு இறைவன் படைத்தான் என்று எண்ணிக் கொண்டிருப்போம்! ஆனால் அல்லாஹ்வோ யாருக்கு குறைகள் கொடுத்தானோ அவர்களுக்கு நிறைகளையும் கொடுத்து உதவுகிறானே! சிந்தித்துப்பாருங்கள்!<br /><br /> <br /><br />கண்பார்வை இல்லாதவர்கள் எதனையும் காண முடியாது இது அவர்களுக்கு உள்ள குறை அதே வேளையில் காதுகளில் நுண்ணறிவோடு கேட்கும் சக்தி அதிகமாக்கித்தந்தானே! இதை விட சிறந்த உதவியாக கண்பார்வையற்றவர்கள் கண்களின் விபச்சாரத் திலிருந்து பாதுகாப்பு பெறுகிறார்களே! மஹ்ஷரில் அவர்களுக்கு எதிராக அவர்களது கண்களுக்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா?<br /><br /> <br /><br />காது கேளாதோருக்கு கேட்கும் திறன் குறைவாக இருக்கும் இவ்வாறு உள்ளவர்களுக்கு நினைவாற்றல் அதிகமாக இருக்குமே! அதே வேளையில் காது கேளாதவர்கள் தீய வார்த்தைகளை கேட்காமல் தீய பாடல்களை கேட்காமல் இருப்பதானல் மஹ்ஷரில் அவர்களுக்கு எதிராக அவர்களது செவிக்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா?<br /><br /> <br /><br />வாய்பேச முடியாத ஊமைகள் இருக்கிறார்கள் அவர்கள் தங்கள் வாய்களினால் எதனையும் பேச முடியாது ஆனால் அதே நேரம் அவர்கள் புறம் பேசுதல் போன்ற எந்த கெட்ட வார்த்தைகளையும் பேச முடியாதே அவர்களுக்கு மஹ்ஷரில் அவர்களின் வாய்க்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா?<br /><br /> <br /><br />சகோதரர்களே! பிறக்கும் குழந்தைகளிலோ அல்லது ஏதாவது விபத்திலோ சிலருக்கு புத்தி சுவாதீனம் இல்லாமல் பைத்தியமாக இருப்பார்கள் அவர்கள் நிலையைக் கண்டால் நம்மில் சிலருக்கு பைத்தியம் என்று எண்ணி மனதளவில் சிரிப்பு வரும் ஆனால் இவர்களுக்கு உள்ள அருட்கொடைகளை எண்ணிப்பார்த்தால் நமக்கு வருத்தமளிக்கும் காரணம் இவர்கள் பிறவியிலேயே புத்திசுவாதீனமற்றவர்களாக இருந்தால் கேள்விக்கணக்கே இருக்காதே! மேலும் இடையில் ஏதாவது விபத்துக்களால் புத்திசுவாதீனம் ஏற்பட்டால் அன்று முதல் அவர்கள் தன்னை அறியாமல் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக் குமே! மேலும் மஹ்ஷரில் இப்படிப்பட்டவர்களின் உள்ளத்திற்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா!<br /><br /> <br /><br />இதையே திருமறை இவ்வாறு கூறுகிறது நாம் தான் சிந்திக்க தவறுகிறோம்<br /><br />‘நிச்சயமாக செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்தும் (மறுமை நாளில்) விசாரிக்கப்படும்.. (அல்-குர்ஆன் 17:36)<br /><br /> <br /><br />சகோதரர்களே! இதை செவி தாழ்த்திக் கேளுங்கள்!<br /><br />சகோதரர்களே நம்மில் சிலர் நம்மை வீடு தேடி வந்து உலகில் உயர்ந்த பொருள் (அல்லாஹ்வின் பார்வையில் அர்ப்பமான பொருள்) கொடுத்து உதவுவார்கள் அதற்கு பிரதிபலனாக உங் களிடம் உள்ள பொருள், பொன், ஆன்மக்கள், பெண் மக்கள், நற்பெயர் போன்ற எதையாவது எதிர்பார்ப்பார்கள் ஆனால் அல்லாஹ் உங்களுக்கு கிடைத்தற்கரிய உயிரை கொடுத்தான், உங்களுக்கு நிலத்திலும் உதவுகிறான்! நிலவிலும் உதவுகிறான்! காற்றில் பயணிக்கும் போதும் உதவுகிறான்! கடலில் பயணிக்கும் போதும் உதவுகிறான்!<br /><br /> <br /><br />ஏன் உங்களால் முடிந்தால் நீங்கள் பாம்பு பொந்துக்குள் ஓடி ஒழிந்துக் கொண்டாலும் அங்கும் சுவாசக் காற்றை கொடுத்து உதவுவானே! நீங்கள் நிலத்தில் சுரங்கம் தோண்டி தங்கத்தை வெட்டி எடுக்க முனைந்தாலும் அங்கும் காற்றை, நீர் மற்றும் உணவை கொடுத்து உதவுகிறானே!<br /><br />ஏன் நீங்கள் மரணித்தால் நல்லவராக இருந்தால் கப்ருக்கடியில் சுவனத்தின் கதவை திறந்துவிட்டு என் அடியான் உறங்கட்டும் என்று ஆசைப்படுகிறானே!!! அல்லாஹ் ரஹ்மானில்லையா? ரஹ்மத்துல் ஆலமீன் இல்லையா?<br /><br /> <br /><br />ஆனால் மனிதர்களாகிய நாம் அல்லாஹ்வின் உதவி கிடைக்கா விட்டால் உடனே விக்ரஹத்தையும் சமாதிகளையும் வணங்குகிறோம் அவைகள் உதவும் என்று எண்ணிக்கொள்கிறோம் இது அல்லாஹ்வுக்கு நாம் செய்யும் துரோக மில்லையா? இது படைத்த ரப்புல் ஆலமீனுக்கு எதிராக நாம் செய்யும் பாவமில்லையா? இது முறையா?<br /><br /> <br /><br />சிந்தியுங்கள் சகோதரர்களே உங்களுக்கு அளித்த அருட் கொடை களுக்கு பகரமாக அல்லாஹ் உங்களிடம் என்ன கேட்கிறான்! வாடகையா? கூலியா? உணவா? உடையா? கட்டணமா? ஒன்று மில்லையே! மாறாக கீழே உள்ள ஒன்றைத்தானே அவன் கேட்கி றான்!<br /><br />உங்கள் இறைவன் கூறுகிறான்; ”என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக் கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமை யடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.”( திருக்குர்ஆன் 40:60)<br /><br /> <br /><br />(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச்சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா? (75-37)<br /><br /> <br /><br />நீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ்தான் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகின்றான்; ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. (திருக்குர்ஆன் 40:61.)<br /><br /> <br /><br />அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்; மேலும், அவன் தான் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களை அழகாக்கி, சிறந்த ஆகார வசதிகளையும் அளித்தான்; அவன்தான் அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அகிலதாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியடையவன். (திருக்குர்ஆன் 40:64)<br /><br />அவனே (என்றென்றும்) உயிரோடிருப்பவன்; அவனையன்றி (வேறு) நாயனில்லை – ஆகவே நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு தூய உள்ளத்தோடு அவனை அழையுங்கள்; அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் – அனைத்துப் புகழும் அகிலங்கள்<br />எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும். (திருக்குர்ஆன் 40:65)<br /><br /> <br /><br />(நபியே!) கூறுவீராக ”என்னுடைய இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் எனக்கு வந்த பொழுது, அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைப்பவற்றை வணங்குவதை<br />விட்டும் நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன் – அன்றியும் – அகிலத்தின் இறைவனுக்கே அடிபணிய வேண்டும் என்று<br />கட்டளையிடப்பட்டிருக்கின்றேன்.” (திருக்குர்ஆன் 40:66)<br /><br /> <br /><br />சகோதர, சகோதரரிகளே நாம் உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான்!<br /><br />அல்லாஹ்வின் அருட்கொடைகளையும் கைமாறு செய்யப்பட முடியாத உதவிகளையும் கொடுத்த அல்லாஹ்விற்கு அடிமையாக இருக்க விரும்புவீர்களா? அல்லது பேசினால்<br />பதிலளிக்காது!. கேட்டால் கொடுக்காத! ஏன் உங்களை திரும்பிக்கூட பார்க்காத ஏதாவது ஒன்றிற்கு அடிமையாக இருக்க விரும்புவீர்களா?<br /><br />உங்களுக்கு சிறு உதவி இதோ!<br /><br />அல்லாஹ்வின் அருட்கொடைகளை படித்தீர்கள் அந்த அல்லாஹ்விடம் எனக்கு எது உண்மை எது பொய் என்று புரிய வில்லை என் மூதாதையர்களின் வழியில் நான் இருக்கின்றேன் எனக்கு விக்ரஹ மற்றும் தர்கா வழிபாடுகளை விட்டுவிடு என்று கூறுவது புதிதாக உள்ளது மேலும் கஷ்டமாக உள்ளது எனவே எனக்கு எது உண்மை எது போலி என்று இணம் காட்டி நேர்வழி காட்டுவாயா? நான் பின்பற்றுகிறேன் என்று கண்ணீர்மழ்க கேட்டுப்பாருங்கள்! விந்துத்துளியாக இருந்த உங்களுக்கு உயிரை ஊதிய உங்கள் அல்லாஹ் (இன்ஷா அல்லாஹ்) உங்களுக்கு நேர்வழி காட்டி சுவனத்தைகூட அளிப்பான்!<br /><br /> <br /><br />நீங்கள் வணங்கும் விக்ரஹ்மோ அல்லது கப்ரோ உங்களுக்கு சுவனத்தை அளிக்குமா? யார் யாருக்கோ சிந்திப்பீர்கள் சற்று உங்களுக்காக! சிந்தித்துப்பாருங்கள் நேர்வழி கிடைக்கும் (இன்ஷா அல்லாஹ்) உங்கள் முடிவு உங்கள் கையில்! ஸலாம்<br /><br /> <br /><br />இறுதியாக அல்லாஹ்வின் வார்த்தை ஒன்றைச் சொல்லிக் கொண்டு இந்த மடலை முடித்துக்கொள்கிறேன்!<br /><br /> என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ”நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்” (என்பதைக் கூறுவீராக!) (அல்குர்ஆன் 2:186)<br /><br /> <br /><br />அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப்புகழும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே)ABDUL RAHMANhttp://www.blogger.com/profile/17272066359885172059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4509831693098583447.post-15280053704535339962010-03-20T01:36:00.000-07:002010-03-20T01:46:14.577-07:00கணவன்- மனைவியின் எதிர்பார்ப்புகள்கணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது. இந்த நிலை மாற குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை? கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன? குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி? குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன? வரவு,செலவை வரையறுப்பது எப்படி?<br /><br />குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை? <br /><br />1. வருமானம் <br />2. ஒத்துழைப்பு <br />3. மனித நேயம் <br />4. பொழுதுபோக்கு <br />5. ரசனை <br />6. ஆரோக்கியம்<br />7. மனப்பக்குவம் <br />8. சேமிப்பு <br />9. கூட்டு முயற்சி <br />10. குழந்தைகள்<br /><br /><br /><strong>கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?</strong><br /><br /><br /><br /><br />1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.<br /><br />2. மனது புண்படும்படி பேசக் கூடாது.<br /><br />3. கோபப்படக்கூடாது.<br /><br />4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது<br /><br />5. பலர் முன் திட்டக்கூடாது.<br /><br />6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.<br /><br />7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.<br /><br />8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.<br /><br />9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்<br /><br />10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.<br /><br />11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.<br /><br />12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.<br /><br />13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.<br /><br />14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.<br /><br />15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.<br /><br />16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.<br /><br />17. ஒளிவு மறைவு கூடாது.<br /><br />18. மனைவியை நம்ப வேண்டும்.<br /><br />19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.<br /><br />20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.<br /><br />21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.<br /><br />22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.<br /><br />23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.<br /><br />24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.<br /><br />25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.<br /><br />26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் 'இது உன் குழந்தை ' என்று ஒதுங்கக் கூடாது.<br /><br />27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா,தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.<br /><br />28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.<br /><br />29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.<br /><br />30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.<br /><br />31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.<br /><br />32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.<br /><br />33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.<br /><br />34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.<br /><br />35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது. <br /><br />36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.<br /><br />37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும். <br /><br /><br /><br /><strong>மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?</strong><br /><br /><br />1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.<br /><br />2. காலையில் ஆறு மணிக்கு முன் எழுந்திருத்தல்.<br /><br />3. எப்போதும் சிரித்த முகம்.<br /><br />4. நேரம் பாராது உபசரித்தல்.<br /><br />5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.<br /><br />6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.<br /><br />7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.<br /><br />8. அதிகாரம் பணணக் கூடாது.<br /><br />9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.<br /><br />10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.<br /><br />11. கணவனை சந்தேகப்படக் கூடாது.<br /><br />12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.<br /><br />13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.<br /><br />14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.<br /><br />15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.<br /><br />16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.<br /><br />17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.<br /><br />18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.<br /><br />19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.<br /><br />20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.<br /><br />21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.<br /><br />22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.<br /><br />23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.<br /><br />24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.<br /><br />25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.<br /><br />26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.<br /><br />27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.<br /><br />28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.<br /><br />29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.<br /><br />30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.<br /><br />31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.<br /><br />32. அதிகம் சினிமா பார்க்கக் கூடாது.<br /><br />33. உடற்பயிற்சி செய்து உடம்பை சிலிம் ஆகவைத்துக் கொள்ள வேண்டும்.<br /><br /><br /><br /><strong>பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி?</strong><br /><br /><br />தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். சுயமாகச் சிந்திக்க, சுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.படிப்பில் , அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.<br /><br /><br />குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டுவிடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும் .'நீ ராசா அல்லவா? ராசாத்தி அல்லவா? ' என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். 'மக்கு, மண்டு, மண்டூகம் - போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.<br /><br /><br />பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.<br /><br /><br /><strong>மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது? </strong><br /><br /><br />பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள்.<br /><br />பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.<br /><br />1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.<br /><br />2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.<br /><br />3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.<br /><br />4. விரும்பியதைப் பெற இயலாமை.<br /><br />5. ஒருவரையொருவர் நம்பாமை.<br /><br />6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.<br /><br />7. உலலாசப் பயணம் போக இயாலாமை.<br /><br />8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.<br /><br />9. விருந்தினர் குறைவு.<br /><br />10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.<br /><br />11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.<br /><br />12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.<br /><br />13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.<br /><br />14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.<br /><br /><br /><strong>உங்கள் பங்கு என்ன?</strong><br /><br /><br /><br /><br />உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து இல்லாததைக் கொண்டு வர வேண்டும்.<br /><br /><br /><br />1. அன்பாகப் பேசுவது<br />2. பிறர் மீது அக்கறை காட்டுவது.<br />3. வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.<br />4. குறை கூறாமல் இருப்பது.<br />5. சொன்னதைச் செய்து கொடுப்பது.<br />6. இன்முகத்துடன் இருப்பது.<br />7.முன் மாதிரியாக நடந்து கொள்வது.<br />8. பிறரை நம்புவது.<br />9. ஒன்றாக உல்லாசப் பயணம் போக விரும்புவது.<br />10. பணிவு<br />11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.<br />12. பிறர் வேலைகளில் உதவுவது.<br />13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.<br />14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது. <br />15. சுறுசுறுப்பு<br />16. சிறிய விசயங்களைக் கூடப் பாராட்டுவது.<br />17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.<br />18. நகைச்சுவையாகப் பேசுவது.<br />19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.<br />20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.<br />21. நேரம் தவறாமை.<br />22. தற்பெருமை பேசாமல் இருப்பது.<br />23. தெளிவாகப் பேசுவது.<br />24. நேர்மையாய் இருப்பது.<br />25. பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது.<br /><br /><br /><strong>எதற்கும் யார் பொறுப்பு?</strong><br /><br />நமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அன்றாடம் அனேகம் பேரைச் சந்திக்கிறோம் உதவி கேட்கின்றோம். ஆணையிடுகிறோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறுகிறோமா? பல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன. விளைவாக - விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை, ஒத்துப்போக இயலாமை , உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலை? <br /><br /><br />நாம் மகிழ்வாக இருக்க, நம்மால் பிறரும் மகிழச்சி பெற , பிறர் நம்மை விரும்ப, பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர, பிறரிடம் நம் காரியங்களைச் சாதித்துக் கொள்ள ... <br /><br /><br /><strong>பத்து கட்டளைகள்</strong><br /><br />1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.<br /><br />2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.<br /><br />3. இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.<br /><br />4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.<br /><br />5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.<br /><br />6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.<br /><br />7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.<br /><br />8.ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.<br /><br />9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள் <br /><br />10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள். <br /><br /><br /><br />வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம். " <br /><br />Abdul Rahman<br />DohaABDUL RAHMANhttp://www.blogger.com/profile/17272066359885172059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4509831693098583447.post-18719678144185595712010-03-14T05:01:00.000-07:002010-03-14T05:12:56.972-07:00பிரியும் உயிர்...!? SUBHANALLAH....அஸ்ஸலாமுஅலைக்கும்.<br /><br /> அன்புள்ளங்களுக்கு சிறு செய்தி....<br /><br />"ஸகராத்துஹால்" என்று சொல்வோமே (மரணிக்கும் தருவாய்) அந்நிலையில் ஒருவரை "ஊடுகதிர்" பண்ணியபோது "ரூஹ்" எவ்வாறு பிரிகிறது என்பதை கண்டதாக கீழுள்ள செய்தி கூறுகிறது. <br /><br />அதாவது காலில் இருந்து பிரிய ஆரம்பித்த 'ரூஹ்' வாய் வழியாக வெளியேறுகிறது. "ஊடுகதிரில்" தெரிந்த உருவம் "ரூஹ்" பிரிய பிரிய மறைகிறது. "ரூஹ்" முழுவதும் பிரிந்த பிறகு "ஊடுகதிரில்" உருவம் தெரிய வில்லை. ஆனால் உடல் "ஊடுகதிர்" இயந்திரத்தினுள். سبحان الله وبحمدهسبحاناللهالعظيم இது சாத்தியமா? ரூஹ் பிரிவதை காண முடியுமா? 'குர்ஆன், சுன்னா' வோடு ஒப்பிட்டு உறுதிபடுத்தி கொள்ளுங்கள். <br /><br />பார்த்ததை பகிர்ந்தேன். (குறிப்பு: கீழுள்ள தளத்தை சொடுக்கி ஒளிப்பதிவைப் பாருங்கள். மேலும் செய்திகளை மொழியை தேர்வு செய்து வாசியுங்கள் ) رابط المشاهدة :<br /> <br />http://www.mashahd.net/video/63426<br /><br /><br /><OBJECT class=BLOG_video_class id=BLOG_video-6abd6527c768e5f2 height=266 width=320 contentId="6abd6527c768e5f2"></OBJECT><br /><br /><br />Abdul Rahman<br />Doha<br /><br /><br />Please Read & Write ur comments,ABDUL RAHMANhttp://www.blogger.com/profile/17272066359885172059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4509831693098583447.post-35977968454783829172010-03-14T00:17:00.000-08:002010-03-14T00:18:40.116-08:00நோயாளியை நலம் விசாரித்தல்பராஃ இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நோயாளிகளை நலம் விசாரிக்குமாறும், ஜனாஸாவை பின் தொடரவும், தும்மியவருக்கு பதிலளிக்கவும், சத்தியம் செய்தவருக்கு உபகாரம் செய்யவும், அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவி செய்யவும், அழைப்பை ஏற்று பதிலளிக்கவும், ஸலாமைப் பரப்புமாறும் நபி அவர்கள் எங்களை ஏவினார்கள். (ஸஹீஹ¤ல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)<br /><br /> <br /> நபி அவர்கள், ''முஸ்லிமின் மீது ஒரு முஸ்லிமுக்குரிய கடமைகள் ஐந்து'' என கூறியபோது நபி அவர்களிடம் அது என்ன? என்று கேட்கப்பட்டது. நபி அவர்கள் கூறினார்கள், ''அவரை நீ சந்தித்தால் ஸலாம் கூறு, அவர் உன்னை அழைத்தால் ஏற்றுக்கொள், உன்னிடம் அவர் நல்லுபதேசத்தை எதிர்பார்த்தால் அவருக்கு உபதேசம் செய், அவர் தும்மி அல்ஹம்துலில்லாஹ் என்று கூறினால் (யர்ஹமுக்கல்லாஹ் என்று) பதில் கூறு, நோய்வாய்ப்பட்டால் நலம் விசாரி, அவர் மரணித்தால் (ஜனாஸா) உடன் செல்.'' (ஸஹீஹ¤ல் புகாரி)<br /><br /> <br />''ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். நீ எனக்கு உணவளிக்கவில்லை'' என்று அல்லாஹ் கூறுவான். மனிதன் எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். உனக்கெப்படி நான் உணவளிக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''நீ அறிவாயா? எனது இன்ன அடியான் உன்னிடம் உணவளிக்கக் கேட்டான். நீ உணவளிக்கவில்லை. உனக்குத் தெரியுமா? நீ அவனுக்கு உணவளித்திருந்தால் அதன் நன்மையை என்னிடத்தில் பெற்றிருப்பாய்'' என்று கூறுவான்.<br /><br /> ''ஆதமின் மகனே! நான் உன்னிடம் தண்ணீர் கேட்டேன். நீ எனக்கு தண்ணீர் புகட்டவில்லை'' என்று கூறுவான். அம்மனிதன் ''எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். உனக்கு நான் எப்படி நீர் புகட்ட முடியும்? என்று கேட்பான். அல்லாஹ் ''எனது இன்ன அடியான் உன்னிடம் தண்ணீர் புகட்டுமாறு கேட்டான். உனக்குத் தெரியுமா? நீ அவனுக்கு தண்ணீர் புகட்டியிருந்தால் அதன் நன்மையை என்னிடம் பெற்றிருப்பாய்'' என்று கூறுவான். (ஸஹீஹ் முஸ்லிம்)<br /><br /> <br /> நபி அவர்கள் கூறினார்கள்: ''ஒரு முஸ்லிம், சகோதர முஸ்லிமை நலம் விசாரிக்க காலையில் செல்வாரேயானால் எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக மாலைவரை துஆச் செய்வார்கள். அவர் மாலையில் நலம் விசாரிக்கச் சென்றால் காலைவரை எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக துஆச் செய்வார்கள். அவருக்கென சுவனத்தின் கனிகள் தயாராக வைக்கப்படும்.'' (ஸ¤னனுத் திர்மிதி)<br /><br /> <br /> அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி அவர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த யூதச்சிறுவன் உடல்நலம் குன்றியபோது நபி அவர்கள் அவனிடம் நலம் விசாரிக்கச் சென்று அவனது தலைமாட்டில் அமர்ந்தார்கள். பின்பு அச்சிறுவனிடம் 'நீ இஸ்லாமை ஏற்றுக்கொள்' என்று கூறினார்கள். அச்சிறுவன் அருகிலிருந்த தனது தந்தையைப் பார்த்தான். அவர் ''நீ அபுல் காஸிமுக்கு கட்டுப்படு!'' என்று கூறினார். அச்சிறுவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். நபி அவர்கள், ''இச்சிறுவரை நரக நெருப்பிலிருந்து காத்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்'' என்று கூறியவர்களாக வீட்டை விட்டு வெளியேறினார்கள். (ஸஹீஹ¤ல் புகாரி)<br /><br /> <br /> இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி அவர்கள் எவரையேனும் நோய் விசாரிக்கச் சென்றால் அவரது தலைமாட்டில் அமர்ந்து கொண்டு ஏழுமுறை பின்வரும் துஆவைக் கூறுவார்கள்: ''உமக்கு ஷிஃபா அளிக்க வேண்டுமென மகத்தான அர்ஷின் இரட்சகனான, மகத்தான அல்லாஹ்விடம் நான் கேட்கிறேன்.'' (அல் அதபுல் முஃப்ரத்)<br /><br /> <br /> அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி அவர்கள் தமது குடும்பத்தில் ஒருவரை நலம் விசாரிக்கச் சென்றால் தமது வலது கரத்தால் அவரை தடவிக் கொடுத்து அல்லாஹ்¤ம்ம ரப்பன்னாஸ், அத்ஹ¢பில் பஃஸ, இஷ்ஃபி, அன்த்தஷ்ஷாஃபீ, லாஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக, ஷிஃபாஅன் லாயுஃகாதிரு ஸகமா'' என்று பிரார்த்திப்பார்கள். அதன் பொருள், ''யா அல்லாஹ்! மனிதர்களின் இரட்சகனே! நோயைப் நீக்குவாயாக! அறவே நோயில்லாமல் குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை.'' (ஸஹீஹ¤ல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)<br /><br /> <br /> இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி அவர்கள் ஒரு கிராமவாசியை நலம் விசாரிக்கச் சென்றார்கள். நபிஅவர்கள் நலம் விசாரிக்கச் சென்றால் ''கவலைப்பட வேண்டாம்! இறைவன் நாடினால் இது (உங்கள் பாவத்தைக் கழுவி உங்களைத்) தூய்மைப்படுத்திவிடும்'' என்று கூறுவார்கள். (ஸஹீஹ¤ல் புகாரி)<br /><br /><br /> நபி அவர்கள் கூறினார்கள்: ''பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளிகளை நலம் விசாரியுங்கள்; கைதிகளை விடுவியுங்கள்.'' (ஸஹீஹ¤ல் புகாரி)ABDUL RAHMANhttp://www.blogger.com/profile/17272066359885172059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4509831693098583447.post-75579876833323691392010-03-14T00:14:00.000-08:002010-03-14T00:15:55.610-08:00அண்டை வீட்டார்முஸ்லிம் பெண்களே! அண்டை வீட்டாருக்கு கொடுக்கும் பொருள் அற்பமாக இருப்பதாக (கொடுக்காமலிருக்க) வேண்டாம். சிறிதளவு இறைச்சி ஒட்டிக் கொண்டிருக்கும் எலும்புத் துண்டாக இருப்பினும் சரியே! என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.<br /><br /> <br /> அண்டை வீட்டுக் காரர் அவரது எல்லையில் ஒரு மரக்குச்சி நடுவதை ஆட்சேபிக்க வேண்டாம் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.<br /><br /> <br /> அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடியவர் தம் அண்டை வீட்டாரைத் தொல்லை படுத்த வேண்டாம் என்று என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.<br /><br /> <br /> அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர். அவ்விருவரில் யாருக்கு (முதலில்) அன்பளிப்புக் கொடுக்கவேண்டும் என்று கேட்டேன், அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் எந்த வீட்டின் வாசல் உனக்கு மிக அருகில் உள்ளதோ அந்த வீட்டாருக்கு என்று விடையளித்தார்கள் . ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி<br /><br /> <br /> அண்டை வீட்டாரை எனது வாரிசாக அறிவித்து விடுவாரோ என்று நான் எண்ணும் அளவுக்கு அண்டை வீட்டார் பற்றி ஜப்ரீல்(அலை) என்னிடம் வலியுருத்திக்கொண்டே இருந்தனர். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். ஆயிஷா(ரலி), இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.<br /><br /> <br /> அபூதர்! நீ குழம்பு சமைத்தால் (அது குறைவாக இருந்தால்) அதில் தண்னீரை அதிகப்படுத்தி உண் அண்டை வீட்டாரையும் கவனித்துக் கொள் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூதர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். முஸ்லிம்<br /><br /> <br /> எவரது தொந்தரவிலிருந்து அண்டை வீட்டார் அச்சமற்று இருக்க முடியவில்லையோ அவர் அல்லாஹ்வின் மீது ஆணையாக ஈமான் கொண்டவராக மட்டார். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.ABDUL RAHMANhttp://www.blogger.com/profile/17272066359885172059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4509831693098583447.post-12419793222061632322010-03-13T23:45:00.000-08:002010-03-14T00:05:59.618-08:00சொர்கத்தை நோக்கிநீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. <br /> அல்குர்ஆன் 3:133<br /><br /> இவ்வுலகில் வாழ்கின்ற நல்லடியார்கள் சுவனபதியை அடைவதற்காக பெரும் முயற்சி எடுக்கின்றனர். மார்க்க வழிபாடுகளுக்கு சம்பந்தமே இல்லாமல் வாழ்ந்து வருபவர்களின் உள்ளத்திலும் இந்த சுவனபதியை அடைய வேண்டும் என்ற ஆசையோடு வாழ்வதை நாம் காண முடிகிறது. உயர்வான இச்சுவனபதி வாழ்க்கையை அது ஒரு பிளாட்பார சரக்கு போன்று சாதாரணமாக எண்ணி வாழ்பவர்களை நாம் அதிகமாக காண முடிகிறது. இந்த உயர்வான வாழ்க்கையை அடைய வேண்டுமென்றால் அதற்காக நம்மை தயார் செய்ய வேண்டும்.<br /><br /><strong>சுவர்க்க வாழ்வு</strong><br /> என்னுடைய நல்லடியார்களுக்கு எந்தத் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் செவியுறாத, எந்த மனிதனின் உள்ளத்திலும் தோன்றிடாதவை எல்லாம் நான் தயாரித்து வைத்துள்ளேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.<br /><br /> 'ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்கு கூலியாக அவர்களுக்கு (தயாரித்து) மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்களின் குளிர்ச்சியை எந்தவொரு ஆத்மாவும் அறியாது' என்ற 32:17 வசனத்தையும் ஓதினார்கள். (அபூஹுரைரா (ரழி), புகாரி,முஸ்லிம், திர்மிதி)<br /><br /><strong>நோய், மரணம், முதுமை, பீடைகள் இல்லாத வாழ்வு</strong><br /><br /> சுவர்க்கத்திற்குறியவர்கள் சுவர்க்கத்தின் உள்ளே புகுந்துவிட்டால், "நீங்கள் ஆரோக்கியத்தோடு வாழ்வதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எப்போதும் இனி நோயுறமாட்டீர்கள். நீங்கள் நிரந்தரமாக ஜீவித்திருப்பதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே நீங்கள் எப்போதும் மரணிக்கவே மாட்டீர்கள்; நீங்கள் இளமையாக இருப்பீர்கள் என்பதை உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எப்போதும் இனி முதுமையை அடையமாட்டீர்கள். நீங்கள் பாக்கியங்கள் பெற்று சுகமாக வாழ்வதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எப்போதும் இனி பீடை பிடித்தவர்களாக ஆக மாட்டீர்கள்; என்று அழைப்பாளர் ஒருவர் அழைத்துக் கூறுவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா (ரழி), திர்மிதி)<br /><br /><strong>சுவர்க்க வாயில்கள்</strong><br /><br /> நிச்சயமாக சுவர்க்கத்திற்கு எட்டு வாயில்கள் உண்டு. எவர் தொழுகையாளியாக இருந்தாரோ அவர் தொழுகை வாயினிலிருந்து அழைக்கப்படுவார். எவர் நோன்பாளியாக இருந்தாரோ அவர் நோன்புடைய வாயினிலிருந்து அழைக்கப்படுவார். எவர் தர்மம் செய்பவராக இருந்தாரோ அவர் தர்மத்துடைய வாயினிலிருந்து அழைக்கப்படுவார் என்று கூறியதும், 'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இந்த எட்டு வாயில்களிலிருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா? என்று அபூபக்கர்(ரழி) கேட்டார்கள்; 'ஆம்' அவர்களில் நீரும் இருக்க ஆசிக்கின்றேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹ்லுப்னு ஸஅத்(ரழி) புகாரி, முஸ்லிம், அஹ்மத், இப்னு மாஜ்ஜா)<br /><br /> "நான் நபிமார்களை பின்பற்றுவோர்களை அதிகமாகக் கொண்டவன்; சுவர்க்க வாசலை தட்டுவோரில் நானே முதன்மையானவன்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.<br /><br /><strong>சுவர்க்கவாசிகளின் இதயங்கள்</strong><br /><br /> பாவங்கள், விரோதங்கள், பொறாமைகள் போன்ற அனைத்து கெட்டவைகளும் நீங்கிய இதயங்களாக இருப்பார்கள்.<br /><br /> "விசுவாசங்கொண்டு, நற்காரியங்கள் செய்து சுவர்க்கத்தில் நுழைந்துவிட்ட அவர்களின் நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்" என்ற இறை வசனத்தின்படி பரிசுத்தமான நெஞ்சங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள். அல்குர்ஆன் 7:43, 15:47<br /><br /><strong>சுவர்க்கம் புகும் முதல் கூட்டத்தின் நிலை</strong><br /><br /> சுவர்க்கம் புகும் முதல் கூட்டத்தினர் பவுர்ணமி இரவில் உள்ள முழு நிலவு போன்று இருப்பார்கள். அவர்களுக்கு அடுத்தவர்கள் வானத்தில் ஒளிவீசிக் கொண்டிருக்கும் நட்சத்திரம் போன்று இருப்பார்கள். அதற்கு பின்னால் அங்கே பல படித்தரங்கள் உண்டு. மலம் கழிக்கமாட்டார்கள். சிறுநீர் கழிக்கமாட்டார்கள். மூக்குச்சளி சிந்த மாட்டார்கள்; எச்சில் துப்பமாட்டார்கள்; அவர்களுக்கு சீப்பு தங்கத்தினால் ஆனதாகும். அவர்களின் வியர்வை கஸ்தூரி மணமாகும். அவர்களுடைய குணங்கள் ஒரே மனிதருக்குள்ள குணத்தைப் போன்று (ஒரே) நிலையில் இருக்கும். அவர்களுடைய பிதா ஆதமுடைய உடல், உயரம் போன்று அறுபது முழத்தில் இருப்பார்கள். அவர்களுக்கிடையே கோபதாபங்களோ, குரோதங்களோ இருக்காது காலை, மாலை நேரங்களில் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து கொண்டிருப்பார்கள். (அபூஹுரைரா (ரழி), புகாரி, முஸ்லிம், திர்மிதி<br /><br /><strong>சுவர்க்கவாசிகளின் வரவேற்பு வார்த்தை</strong><br /><br /> அச்(சுவனத்தில்) வீண் வார்த்தைகளையோ, பொய்யையோ செவியுறமாட்டார்கள்; 'ஸலாமுன்' (உங்கள் மீது சாந்தி உண்டாவதாக) என்ற வார்த்தையை தவிர அதில் அவர்களுடைய முகமன் வார்த்தை 'ஸலாமுன்' என்பதாகும். அல்குர்ஆன் 78:35, 10:10<br /><br /><strong>சுவர்க்கத்து தோட்டங்கள், ஆறுகள், நீரூற்றுகள்</strong><br /><br /> அல்லாஹ்வை பயந்து வாழ்ந்த நல்லடியார்கள் தோட்டங்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவர்க்கத்தில் இருப்பார்கள் என்று அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான்.<br /><br /> பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது; அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன; இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும் தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. அல்குர்ஆன் 47:15<br /><br /><strong>சுவனத்தில் இறைவனைக் காணும் பாக்கியம்</strong><br /><br /> சுவர்க்கவாசிகள் சுவர்க்கம் புகுந்துவிடுவார்களானால் உங்களுக்கு இன்னும் அதிகமான ஒன்றை நீங்கள் நாடுகிறீர்களா என்று அல்லாஹ் கேட்பான். இரட்சகனே! நீ எங்களின் முகங்களை வென்மையாக்கவில்லையா? நீ எங்களை சுவர்க்கத்தில் நுழைவித்து நரகத்தைவிட்டும் எங்களை நீ காப்பாற்றவில்லையா? (இதைவிட வேறு எங்களுக்கு என்ன வேண்டும்) என்று சொல்வார்கள். திரை அகற்றப்படும் தங்கள் இரட்சகனை காண்பதைவிட வேறொரு பிரியமான பொருளை அவர்கள் கொடுக்கப்பட மாட்டார்கள் என்று ரஸூலுல்லாஹ் கூறினார்கள். (ஸுஹைபு (ரழி), முஸ்லிம், திர்மிதி)<br /><br /> மறுமையில் பவுர்ணமி இரவன்று சந்திரனை நீங்கள் பார்ப்பதைப் போன்று நீங்கள் உங்கள் இரட்சகனை பார்ப்பீர்கள் என்று அல்லாஹ்வின் திருத்தூதர் சொன்னார்கள். ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி)<br /><br /> அல்லாஹ் நம்மை சுவர்க்கத்து வாசிகளாகவும் அவனைக் கண்டு மனமகிழ்வு பெருவோரிலும் ஆக்கி அருள் செய்வானாக! ஆமீன்.<br /><br /><strong>அப்துல் ரஹ்மான்<br />கீழக்கரை</strong>ABDUL RAHMANhttp://www.blogger.com/profile/17272066359885172059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4509831693098583447.post-46206412093146737902010-03-13T23:41:00.000-08:002010-03-13T23:43:27.449-08:00நாவைப் பேணுக!<strong>உண்மை பேசுக!</strong><br /><br />அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119<br /><br /><strong>நேர்மையாக பேசுக!</strong><br /><br />ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.<br /><br /><strong>அழகானதைப் பேசுக!</strong><br /><br />பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். 2:83<br /><br /><strong>கனிவாகப் பேசுக!</strong><br /><br />உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். 4:8<br /><br /><strong>நியாயமாகப் பேசுக!</strong><br /><br />நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் -நியாயமே பேசுங்கள். 6:152<br /><br /><strong>அன்பாகப் பேசுக!</strong><br /><br />அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. 4:36<br /><br /><strong>வீண் பேச்சை தவிர்த்துடுக!</strong><br /><br />நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும். 6:68<br /><br /><strong>பொய் பேசாதீர்!</strong><br /><br />உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பெய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். 16:116<br /><br /><strong>புறம் பேசாதீர்!</strong><br /><br />உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். 49:12<br /><br /><strong>ஆதாரமின்றி பேசாதீர்!</strong><br /><br />யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும். 40:35<br /><br /><strong>அவதூறு பேசாதீர்!</strong><br /><br />எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; 24:23<br /><br /><br />Abdul Rahman<br />DohaABDUL RAHMANhttp://www.blogger.com/profile/17272066359885172059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4509831693098583447.post-62629603753694699232010-03-13T07:04:00.000-08:002010-03-13T07:05:16.422-08:00நான் தான் “திருக்குர்ஆன்” பேசுகிறேன்என் இனிய இஸ்லாமிய சொந்தங்களே,<br /> உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவிட வேண்டுமென்பது தான் எனது ஆவல் ! அதற்காகத்தான் நானும் உங்களுக்காக இறைவனிட மிருந்து இறக்கி அருளப்பட்டிருக்கிறேன். நான் சுவர்க்கத்தின் லவ்ஹூல் மஹ்பூல் என்னும் ஏட்டில் வசித்து வருபவன். இவ்வுலகில் நான் முதன் முதலில் ஆரத்தழுவி கட்டி அணைத்து முத்தமிட்டது நமதருமை நாயகம் (ஸல்) அவர்களைத்தான் ! மனிதர்கள் எல்லோருமே என்னைத்தான் முத்தமிடுவீர்கள். ஆனால் நானோ எம்பெருமானாரை முத்தமிட்டவன்.<br />என்னை சுமப்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பட்ட ஆரம்ப கட்ட சிரமத்தை நானும் எனது இறைவனுமே நன்கு அறிவோம். அதனை சாதாரண மனிதர்களாகிய நீங்கள் உணர்ந்து கொள்ள மாட்டீர்கள் ! இத்தனை நெருக்கடிக்குள்ளும் என்னை சுமந்து எனது பெருமைகளை உணர்ந்து எனது சகவாசம் உலகம் அழியும் வரைக்கும் வாழக்கூடிய தனது உம்மத்தினர் அனைவருக்கும் வேண்டும் என்பதற் காகத்தான் ஆரம்பத்தில் என்னை மாட்டுத் தோலிலும், மரக்கட்டை களிலும் பதிய வைத்து என்னை ஓர் பொக்கிஷமாக உங்களிடம் ஒப்படைத்துள்ளார்கள் நாயகம் (ஸல்) அவர்கள். ஆனால் நீங்களோ, எனது சகவாசத்தை விரும்பாமல் ஷைத்தானின் சகவாசத்தை விரும்பக்கூடியவர்களாக மாறி விட்டீர்கள். “கூடா நட்பு கேடாய் முடியும்” என்ற பழமொழி மறந்து விட்டதோ?<br />என்னை மறக்க ஆரம்பித்ததும் எவ்வளவு இழிவுகளையும் சோதனை களையும் சந்தித்து வருகிறீர்கள். எனது சிறப்பைப் பற்றி ஒரே வரியில் சொல்வதென்றால் ”ஹுதன்லில் முத்தக்கீன்”இறையச்சமுடையவர் களுக்கு நேர்வழி காட்டக்கூடியவனாயிருக்கிறேன். யார் என்னை நம்பி பின்பற்றினாலும் நிச்சயம் நான் அவர்களை ஈருலகிலும் நல்லோர் களாய் வாழச் செய்வேன் என்பதை அளவு கடந்த உறுதியுடன் என்னால் கூற முடியும்.<br />இன்று யார் யாருக்கோ பின்னால் போய்க்கொண்டிருக்கும் மனிதர்களே ! அவர்களெல்லாம் நாளை மறுமையில் உங்களுக்கு துணை நிற்பவர்கள் என நினைத்தால் ஏமாந்து தான் போவீர்கள். ஒரு காலத்தில் வீடு தோறும் புனிதமானவனாக மதிக்கப்பட்டு உயர்ந்த ரக ஆடைகளை கொண்டு என்னை மூடி வீட்டின் உயர்வான இடத்தில் எனக்கென்று தனியொரு இடம் அமைத்து அதில் வைத்து அழகு பார்த்த நீங்கள் இன்று உங்கள் வீட்டு குழந்தைகளின் பள்ளிக்கூட புத்தகங்களோடும், அறுவருக்கத்தக்க புகைப்படங்களை சுமந்து வரும் நாலாந்தர புத்தகங்களோடும், மார்க்கத்தின் பெயரால் மனிதர்கள் தம் மனம் போன போக்கில் கண்டதையும் எழுதிவரும் மற்ற நூல்களுடனும் சேர்த்தே என்னையும் வைத்து விட்டீர்களே ! இது நியாயமா?<br />டி.வி. என்ற இப்லீஸின் நாசகார கவர்ச்சி பெட்டிகள் வருவதற்கு முன்பெல்லாம் வீடுதோறும் குடும்ப பெண்கள் அதிகாலையே எழுந்து சுபுஹு தொழுகையை முடித்து விட்டு என்னை கரத்தில் ஏந்தி கம கமக்கும் சந்தன ஊதுபத்தியின் புகையில் எனது வசனங்களை ஓதும் போது வெளியாகும் அந்த இனிமையான ஓசை தென்றல் காற்றோடு கலக்கும் ரம்மியம் தானே, அன்றைய மக்களின் சங்கீதமாய் இருந்தது. ஆனால் இன்றோ நள்ளிரவு வரை டி.வி.யில் தொடர் (சீரியல்) களை பார்த்து விட்டு உறங்குவதால் பள்ளியில் கூறப்படும் அதிகாலை பாங்கின் ஓசைக்கு எதிர் ஓசையாய் உனது குறட்டை சத்தம் வெளி யாவது இறைவனின் கோபத்திற்குரியதல்லவா? ஓ ….. ஜெய்னம்பு பீவியே … படைத்தவனையே மறந்து விட்ட நீ என்னையா கையில் எடுத்து ஓதி விடப் போகிறாய் ?<br />எனதருமை தெரியாத மனிதர்களே ! என்னைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை கேளுங்கள்;- “திருக்குர்ஆனிலிருந்து சிறிதளவு கூட தம் உள்ளத்தில் மனனம் இல்லாதவர் பாழடைந்த வீடு போன்றவர் ஆவார்.”<br />(அறிவிப்பாளர்: ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), நூல்: திர்மிதி)<br />பார்த்தாயா? நான் இல்லாத இதயம் பாழடைந்த வீட்டைப் போன்ற தாகி விடுகிறது.<br />என்னைப் பார்த்தால் அதற்கு ஒரு கூலி, ஓதினால், பிறர் ஓத கேட்டால், மனனம் செய்தால் என ஒவ்வொன்றுக்கும் தனிதனி அந்தஸ்தில் இறைவனின் நற்கூலிகள் உங்களுக்கு கிடைக்கும் என்பதை மறந்து விட்டீர்களா? வருடம் முழுவதும் என்னை நினைத்து வாழ்ந்த நீங்கள், இன்றோ வருடத்தில் ஒரு மாதம் ரமலானில் மட்டுமே நினைக்க கூடிய பச்சோந்திகளாய் மாறி விட்டீர்கள்.<br />ஒவ்வொரு நாளும் குளித்து சீவி சிங்காரித்து சுத்தம் செய்து கொள்ளும் நன்றி கெட்ட மனிதனே ! என்னை மட்டும் உன் வீட்டு பரணி மேல் தூசியடைய வைத்து விட்டு ரமலான் வரும் போது மட்டும் சுத்தம் செய்து கையிலெடுப்பது ஓரவஞ்சனையில்லையா? உன் போன்ற சந்தர்ப்ப வாத வேடதாரிகளை நாளை மறுமையில் எனது இறைவனுக்கு முன்பாக தோலுரித்துக் காட்டுவேன். என்பதை நினைவில் வைத்துக் கொள் !<br />ஒரு நேரத்தில் (ஒளு) சுத்தமில்லாமல் என் அருகில் வருவதற்கே பயந்து நடுங்கிய மனிதன் இன்று குளிப்பு கடமையான நிலையிலும் கூட என்னை சர்வ சாதாரணமாக தொடுவதற்கு துணிந்து விட்ட கன்றாவியை கண்டு சகித்துக் கொள்ள முடியவில்லை. ”லாய மஸ்ஸுஹு இல்லல் முதஹ்ஹரூன்” ( தூயவர்களைத் தவிர மற்றெவரும் அதை தொட மாட்டார்கள் ) என்ற இறை வசனத்தை அவமரியாதை செய்கின்ற பாவத்தை எந்தப் பாவிப்பயல் வழிகாட்டி கொடுத்தானோ? அவன் ஈருலகிலும் நாசமடைவது திண்ணம் !<br />தமிழக முஸ்லிம்களாகிய நீங்கள் தான் என் சிறப்பை உணராமல் என்னை உதாசீனப்படுத்தி வருகிறீர்கள். ஆனால் ஒரு வகையில் மலேசியா நாட்டு முஸ்லிம்களை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன். ஆமாம் அவர்கள்தான் ஆண், பெண் என்ற பாகுபாடில் லாமல் என்னை தலையில் வைத்து கொண்டாடி வருகிறார்கள். மலேசியாவின் கோலா கங்ஸார் என்ற ஊரில் நடக்கின்ற திருமணங் களின் போது திருமணத்திற்கு முதல் நாள் இரவு ஒரு நிகழ்ச்சி நடக்கும்.<br />பெண் வீட்டில் மணமகன் வீட்டார் உட்பட உறவினர் அனைவரும் கூடி இருப்பார்கள். அச்சம், மடம், நாணம் என்று அந்த காலத்தில் சொல்வார்களே, அத்தனையும் ஒருங்கே பொதிந்த நிலையில் மணப் பெண் வந்து சபையில் அமர்வாள். பிறகு அவளுக்கு முன்பாக வைக்கப் பட்டிருக்கும் திருக்குர்ஆனாகிய என்னை புரட்டி தஜ்வீத் என்ற விதி முறைப்படி எனது வசனங்களை அட்சரம் பிசகாமல் ஓதி முடிப்பாள். பின்னர் எல்லோருக்கும் இனிப்பு வழங்குவார்கள். அதை விட ஓதப் பட்ட தித்திக்கும் எனது வசனத்தை கேட்ட மன நிறைவோடு வந்தவர் கள் வீடு திரும்புவார்கள்.<br />மணமகளுடைய அழகைவிட, கற்ற அறிவைவிட, பெற்றிருக்கும் செல்வத்தைவிட எனது வசனங்களை பிழையின்றி ஓதுவதில் தான் மணப்பெண்ணின் சிறப்பு இருக்கிறது என்று மலேசியா முஸ்லிம்கள் கருதுகிறார்கள். திருக்குர்ஆனை ஓதுவதில் தான் அந்த எதிர்காலத்தாய், குலவிளக்கு, குடும்பத் தலைவியின் பூரணத்துவம் இருக்கிறது என மலாய் மக்கள் முழு நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள்.<br />எனதருமை தமிழ் முஸ்லிம் சமுதாயமே, பார்த்தாயா? மலாய் முஸ்லிம்களும் நானும் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோமென்று ! பெண் பார்க்கும் படலத்தில் கூட அங்கு என்னைத் தான் முன்னிலைப் படுத்துகிறது மலாய் முஸ்லிம் சமுதாயம். அந்நாட்டில் தான் என்னை ஓதுவதை பெண்களுக்கு ஒரு முக்கியமான அம்சமாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். அங்கு வாழும் தாய்க் குலத்தினரின் முணு முணுப்பும், குழந்தைகளின் தாலாட்டும் கூட எனது வசனங்களாக இருப்பதினாலேயே அகில உலக கிராஅத் போட்டியில்கூட மலாய் மக்கள் அரபுகளை விட சிறப்பாக ஓதி உயர்வான பரிசுகளை பெற்று விடுகிறார்கள்.<br />ஆனால் நீயோ சினிமா பாடல்களை பாடி உன் குழந்தைகளை தூங்க வைக்கிறாய் ! உன் பிள்ளை கண் விழித்து பாடுவதும் சினிமா பாடல் களாகவே ஆகிவிட்டது. உனது முணு முணுப்பிலும் கூட சினிமா, டி.வி. தொடர் பற்றியேத் தான் போய்க்கொண்டிருக்கிறது. அதனால் தான் உனது வாழ்க்கையும் ஒரு டிராமா போல் முடிந்து விடுகிறது ! எல்லாம் அந்த இப்லீஸ் படுத்தும் பாடுதான் !<br />இவ்வருட ரமலான் வரைக்கும் நான் உங்களது போலித்தனமான பக்திக்குரிய செல்லப் பிள்ளையாக் இருப்பேன். பின்னர் வழக்கம் போல பரணி மீது படுத்துவிடுவேன். அடுத்த வருட நோன்புவரை ! அறிவுள்ள வர்களுக்கு மட்டும் உறுதியாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். யார் என்னை தங்களது நெஞ்சத்தில் வைத்து பாதுகாக்கிறார்களோ? அவர் களின் மரணத்திற்குப்பின் மண்ணறை வாழ்க்கையின் போது வேதனையை விட்டும் கொடிய விஷமுள்ள பாம்பு, தேள் போன்ற ஜந்துகளின் தீங்குகளை விட்டும் அவர்களை நான் பாதுகாப்பேன். நாளை மறுமையிலும் இறைவனிடம் பரிந்துரை செய்வேன்.<br />என்னை சுமந்து வாழும் இதயங்கள் மட்டுமே ஈருலகிலும் ஒளி மயமாக இருக்கும். என்னைப் பற்றி இவ்வளவு கூறிய பிறகும் தினந் தோறும் நீ என்னை உன் இதயத்தில் சுமக்க மறுத்தால் நஷ்டம் எனக்கல்ல, உனக்குத்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள் !<br />( வஸ்ஸலாம்! )<br /><br />Abdul Rahman<br />DohaABDUL RAHMANhttp://www.blogger.com/profile/17272066359885172059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4509831693098583447.post-66007117287896842362010-03-13T06:44:00.000-08:002010-03-13T06:46:54.153-08:00பார்க்கவேண்டும். நாம் செய்த நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? சீர்திருத்தப்பட வேண்டியது என்ன? அதிகப்படுத்தவேண்டியது, தவிர்ந்து கொள்ள வேண்டியது என்ன? என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொள்வது நல்லது.<br /><br />ஒவ்வொரு நாளும் இஸ்லாத்துடன் இருப்பதற்கு - உங்களது நினைவுக்குச் சில துளிகள் :-<br />அதிகாலைத் தொழுகையை, அதன் குறித்த நேரத்தில், கூட்டாக இணைந்து, பள்ளியில் தொழுதீர்களா?<br /><br />ஐங்காலத் தொழுகைகளை பள்ளிவாசலில் வைத்து, முதல் ஜமாஅத்துடன் நிறைவேற்றினீர்களா?<br /><br />இன்றைய தினம் திருமறையில் இருந்து சில வசனங்களை ஓதினீர்களா?<br /><br />ஒவ்வொரு தொழுகையின் முடிவிலும் அல்லாஹ்வின் சில திருநாமங்களை (திக்ருகளை)த் துதித்தீர்களா?<br /><br />தொழுகைக்கு முன்பும் அல்லது பின்பும் உள்ள சுன்னத்தான தொழுகைகளை நிறைவேற்றினீர்களா?<br /><br />தொழுகையின் பொழுது நீங்கள் ஓதக் கூடிய வசனங்களின் பொருள்களை விளங்கி ஓதினீர்களா?<br /><br />மரணத்தையும், மரணத்திற்குப்பின் உள்ள விசாரணை நாள் பற்றியும் நினைவு கூர்ந்தீர்களா?<br />மறுமைத் தீர்ப்பு நாள் பற்றியும், அந்த நாளின் கடுமை பற்றியும் நினைத்துப் பார்த்தீர்களா?<br />யா அல்லாஹ்..! என்னை அந்த சுவனத்தினுள் பிரவேசிக்க அனுமதிப்பாயாக..! என்று மூன்று முறை கூறினீர்களா?ஏனென்றால், ''யா அல்லாஹ், என்னை சுவனத்தினுள் அனுமதிப்பாயாக - என்று மூன்று முறை கூறினால், அந்தசுவனம் (இவ்வாறு) பதிலளிக்கின்றது : யா அல்லாஹ், அவன் அல்லது அவளை என்னுள் நுழைந்து விடஅனுமதிப்பாயாக..! (என்று சுவனம் அல்லாஹ்விடம் மன்றாடுகின்றது). (திர்மிதீ)<br /><br />இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிமொழி ஒன்றையேனும் இன்று வாசித்தீர்களா?<br /><br />தீமைகளிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும், அத்தகைய தீங்கினைச் செய்து கொண்டிருப்பவர்களிடமிருந்தும்விலகிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தீர்களா?<br /><br />அதிகமான சிரிப்பு, அதிகமான ஜோக்குகள் இவற்றினைத் தவிர்ந்து வாழ முயற்சித்தீர்களா?<br /><br />செவிப்புலனையும், பார்வையையும், சிந்திக்கும் திறனையும் இன்னும் இது போன்ற எண்ணற்றஅருட்கொடைகளை உங்களுக்கு வழங்கியிருக்கும் அல்லாஹ்விற்கு, தினமும் நன்றி கூறிக்கொண்டிருக்கின்றீர்களா?<br /><br />இன்றைய தினம் ஏழைகளுக்கும், தேவையுடையவர்களுக்கும் உணவளித்தீர்களா அல்லது அவர்களுக்குஉதவினீர்களா?<br /><br />உங்களின் (தவறுகளின்) மீதும், அல்லாஹ்வின் பொருட்டும் உங்களை நீங்களே கடிந்து கொண்டீர்களா?<br /><br />பிறர் மீது கடுமையாக நடந்து கொள்வது அல்லது சுய விளம்பரத்துடன் நடந்து கொள்வதனின்றும் தவிர்ந்துகொண்டீர்களா?<br /><br />அல்லாஹ்வின் அச்சத்தால் அழுதீர்களா?<br /><br />ஃபஜ்ருத் தொழுகை அல்லது இஷாத் தொழுகைக்குப் பின் அல்லாஹ்வினை நினைவு கூர்ந்தீர்களா?<br /><br />நீங்கள் செய்து விட்ட பாவங்களுக்காகவும், இன்னும் வரம்பு மீறி நடந்து கொண்டதற்காகவும், இஸ்திஃக்ஃபார்என்ற பாவ மன்னிப்புக் கோரினீர்களா?<br /><br />இறைவா..! உன்னுடைய உவப்பிற்குரிய வழியில், ''ஷஹீத்"" என்ற அந்தஸ்தில் நான் மரணமடைய வேண்டும்என்று அல்லாஹ்விடம் மனமுருகி வேண்டிக் கொண்டீர்களா?<br /> <br />இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''எவரொருவர் அல்லாஹ்விடம் நேர்மையான முறையில் தான் ஷஹீத் என்ற அந்தஸ்தில் மரணமடையவேண்டும் என்று விரும்பிக் கேட்கின்றாரோ, அவ்வாறு பிரார்த்திக்கும் அவன் அல்லது அவளின் பிரார்த்தனையைஅல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான், அவன் அல்லது அவள் - அவர்களுடைய படுக்கையில் மரணமடைந்தாலும்சரியே..! (முஸ்லிம்)<br /><br />மார்க்கத்தில் என்னுடைய இதயத்தை நிலைத்திருக்கச் செய்வாயாக என்று பிரார்த்திப்பதுண்டா?<br /><br />உங்களது பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படக் கூடிய நேரங்கள் என்று சில நேரங்கள் உண்டு. அந்த நேரங்களில்நீங்கள் அல்லாஹ்வினிடத்தில் பிரார்த்தித்ததுண்டா?<br /><br />இஸ்லாமிய மார்க்க அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கோடு, புதிய இஸ்லாமியநூல்களை வாங்கினீர்களா?<br /><br />இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும், உயிருடன் உள்ளவர்களுக்கும் அல்லதுமரணித்தவர்களுக்கும் பாவ மன்னிப்புக் கோரினீர்களா? ஏனென்றால் அவ்வாறு நீங்கள் செய்கின்ற பிரார்த்தனைஒவ்வொன்றுக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குகின்றான்.<br />இஸ்லாம் என்ற அருட்கொடையை என்மீது அருளியதன் காரணமாக என்னை முஸ்லிமாக உருவாக்கியவனே..உனக்கே நன்றிகள் பல என்று அவனது அருட்கொடைகள் பற்றி நினைவு கூர்ந்து நன்றி செலுத்தினீர்களா?<br /><br />உங்களது சகோதர மற்றும் சகோதரிகளை அல்லாஹ்விற்காக மட்டுமே அவனது திருப்பொருத்ததினை நாடிசந்தித்ததுண்டா?<br /><br />மக்களையும், உங்களது குடும்பத்தாரையும், உங்களது சகோதர, சகோதரிகளையும் அல்லது அண்டைஅயலார்களையும் இன்னும் உங்களுடன் தொடர்புள்ள அனைவரையும் அல்லாஹ்வின் மார்க்கத்தின் பக்கம்அழைத்து அழைப்புப் பணி புரிந்தீர்களா?<br /><br />உங்களைப் பெற்றவர்கள் மீது கருணையுடன் நடந்து கொண்டீர்களா?<br /><br />இன்றைய தினத்தில் ஒரு பிரச்னையைச் சந்தித்து, அதன் பின்னர் : ''இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹிராஜிஊன்"" (அவனிடமிருந்தே வந்தோம், அவனிடமே நம்முடைய மீளுதல் இருக்கின்றது) என்று கூறினீர்களா?<br /><br />யா அல்லாஹ், ''நான் செய்து விட்ட தவறுகளுக்காகவும் இன்னும் அறிந்தும் செய்தவற்றுக்கும் உன்னிடம் நான்பாதுகாவல் தேடுகின்றேன். என்னுடைய அறியாமையின் காரணமாகச் செய்து விட்ட தவறுகளுக்காகவும்உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகின்றேன்."" இவ்வாறு நீங்கள் பாவ மன்னிப்புக் கோருவீர்களென்றால் அல்லாஹ்உங்களது சிறிய மற்றும் பெரிய பாவங்களை மன்னித்தருள்கின்றான். பிரார்த்தித்தீர்களா?<br /><br />மரணத்திற்குப் பின் உயிர் கொடுத்து எழுப்பப்படவிருக்கின்ற அந்த மறுமைநாளில் இவ்வுலகில் நாம் செய்துகொண்டிருந்தவைகள் பற்றி, ''விசாரிக்கப்படுவதற்கு முன்னர் நம்மை நாமே விசாரித்துக் கொள்வோம்."" <br /><br /><br />'எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின்அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்¢ 'எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களைமன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக, இன்னும், எங்க(ளுடையஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!"ABDUL RAHMANhttp://www.blogger.com/profile/17272066359885172059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4509831693098583447.post-25860256263402084532010-03-13T06:34:00.000-08:002010-03-13T06:35:29.215-08:00உனக்குக் கீழே உள்ளவர் கோடி<span style="font-weight:bold;">உனக்குக் கீழே உள்ளவர் கோடி</span><br /><br />பொருளாதார ரீதியில் தன்னை விட செல்வந்தனாக இருப்பவனைப் பார்த்து மனிதன் தன்னை வேதனையில் ஆழ்த்திக் கொள்கின்றான். அவன் மீது பொறாமைப் பட்டு ஏக்கப் பெருமூச்சு விடுகின்றான். இறுதியில் அந்தப் பணக்காரனை கொலை செய்யக் கூட துணிந்து விடுகின்றான். இது போல் ஒரு எளிய குடும்பம் செல்வந்த குடும்பத்தைப் பார்த்து கவலைப் படுகின்றது.<br /><br />ஒரு நாடாளும் மன்னன் தனது நாட்டை விட பொருளாதார செழிப்பில் உள்ள நாட்டைப் பார்த்து பொறாமை கொள்கின்றான். இதன் இறுதிக் கட்டம் போரில் போய் முடிகின்றது. இலட்சக்கணக்கான உயிர்கள் மடிகின்றன.<br /><br />இது போல் உடலமைப்பு ரீதியில் ஒருவன் தன்னை விட அழகானவனைக் காணும் போது அவன் மீது பொறாமை கொள்கின்றான். அந்த அழகின் காரணமாக அவனுக்குக் கிடைக்கும் சிறப்புகளைப் பார்த்தால் இது மேலும் அதிகமாகி இவனது மனதில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகின்றது. இறுதியில் மனநோயாளியாக மாறி அந்த அழகானவனைக் கொலை செய்யும் நிலைக்குச் சென்று விடுகின்றான்.<br />இப்படி உலகின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு இது தான் அடிப்படைக் காரணம் என்று சொன்னால் மிகையாகாது.<br /><br />இங்கு தான் மனித உளவியலை அறிந்த எல்லாம் வல்ல அல்லாஹ் மனித வாழ்வியலுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூலம் ஓர் அற்புத வழிகாட்டலை வழங்குகின்றான். மனிதர்களிடம் குடி கொண்டிருக்கும் இந்தப் புற்று நோய்க்கு சிறந்த மாமருந்தை வழங்குகின்றான். அந்த அருமருந்து இதோ:<br /><br /><span style="font-weight:bold;">“செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மை விடக் கீழானவர்களை அவர் பார்க்கட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.<br /></span><br />அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 6490<br /><br />அகிலப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் இந்த அருமருந்து தான் இன்று, உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்ற கவிதை வடிவம் பெற்று நிற்கின்றது. கால் செருப்பில்லை என்று ஒருவர் கவலையுடன் நடந்து வருகின்ற போது, தன் எதிரே வருகின்ற ஒருவர் காலே இல்லாமல் நொண்டி அடித்துக் கொண்டு ஆனந்தமாகச் செல்வதைப் பார்த்து தன் மனதை ஆற்றியும் தேற்றியும் கொள்கின்றார்.<br />இது போல் அழகில் குறைந்தவர் அழகானவரைப் பார்த்து பொருமிக் கொண்டிருக்காமல் தன்னை விட அழகில் குறைந்தவரைப் பார்த்து தன்னை அமைதிப் படுத்திக் கொண்டால் அவர் பூரண நிம்மதி அடைகின்றார். இது உடலமைப்பு ரீதியிலான பிரச்சனைக்குரிய மிகப் பெரும் தீர்வாகும்.<br /><br />இது போல் பொருளாதார ரீதியில் தனி மனிதன், குடும்பம், நாடு என்று எல்லோருமே தனக்குக் கீழுள்ளவரைப் பார்த்து ஆறுதல் அடையும் போது தனி மனிதன் நிம்மதி அடைகின்றான். குடும்பம் நிம்மதி பெறுகின்றது. நாடு நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றது. எங்கு, யார் தனக்கு மேலுள்ளவர்களைப் பார்க்கத் துவங்குகின்றாரோ அங்கு அமைதியின்றி தவிக்கின்றனர். தனி மனிதன், குடும்பம், நாடு என்று அந்தந்த வட்டத்திற்குத் தக்க பிரச்சனைகள் வெடிக்கின்றன.<br /><br />கடைசியில் போர் மேகங்கள் சூழ்ந்து பல்லாயிரக்கணக்கான, ஏன் பல இலட்சக்கணக்கான உயிர்கள் பயாகிப் போகின்றன. மேல் தட்டு மக்களைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடும் இந்தப் பாதகமான மனித நோய் தான் மக்களை அழிக்கும் அணு ஆயுதமாகத் திகழ்கின்றது. அகில உலகிற்கும் அமைதியைத் தரும் மார்க்கத்தின் மக்கள் தூதராக வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த நோயை, கீழ் தட்டு மக்களைப் பார்த்து குணப்படுத்தச் சொல்கின்றார்கள். இது பேணப்படுமாயின் உலகம் அமைதிப் பூங்காவாகி விடும்.<br />உலகமெங்கும் தொற்றியுள்ள இந்த நோய் தான் அரசு ஊழியர்களிடத்திலும் நுழைந்து அவர்களின் நிம்மதியைப் பறித்து, அவர்களைப் படாத பாடு படுத்திக் கொண்டிருக்கின்றது.<br /><br />கை நிறைய சம்பளம் பெறும் இந்த மக்கள் தங்களை விட மேல் தட்டு மக்களைப் பார்க்க ஆரம்பித்தனர். இன்று வீதிக்கு வந்து விட்டனர். தங்களுக்குக் கீழ் தட்டு மக்களைப் பார்த்திருந்தால் இந்தப் பரிதாபகரமான நிலையை சந்தித்திருக்க மாட்டார்கள். தங்கள் பணிகளைச் சரிவர செய்திருப்பார்கள்.<br /><br />பொதுவாகவே மக்களிடம் அரசு ஊழியர்கள் நடந்து கொள்ளும் விதம் ௲ அந்த மக்களின் வருவாயில் வாழ்கின்றோம் என்ற நிலையில் இல்லாமல், மக்களின் எஜமானர்களாக ௲ அவர்களை அலைக்கழித்து சித்ரவதை செய்யும் சர்வாதிகாரிகளாகச் செயல்பட்டனர்.<br /><br />இதில் விதிவிலக்குகள் இருப்பதை மறுக்க முடியாது. எனினும் அரசு எந்திரத்தைக் குறித்த பொதுமக்களின் பொதுவான சிந்தனை இப்படித் தான் உள்ளது என்பதையும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். இதனால் தான் இன்று அரசு ஊழியர்கள் மீது அந்த மக்கள் அனுதாபப் படவில்லை. மாறாக இவர்களுக்கு இந்தத் தண்டனை தேவை தான் என்பது போன்ற கருத்து நிலவுவதைப் பார்க்க முடிகின்றது. சொல்லப் போனால் அவர்களின் பல நாள் நிந்தனை தான் இந்தத் தண்டனை என்று கூட நினைக்கத் தோன்றுகின்றது.<br /><br />ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: “அநீதி இழைக்கப் பட்டவனின் பிரார்த்தனையைப் பயந்து கொள்ளுங்கள். ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையும் இல்லை” (நூல் : புகாரி 1496)<br /><br />அரசு ஊழியர்களின் இந்தச் சோதனையைப் படிப்பினையாக எடுத்து நாம் அனைவரும் உடலமைப்பு மற்றும் பொருளாதார ரீதியிலான பிரச்சனைகளில் நம்மை விட மேல் தட்டு மக்களைப் பார்க்காமல் கீழ் தட்டு மக்களைப் பார்த்து, படைத்த அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவோமாகABDUL RAHMANhttp://www.blogger.com/profile/17272066359885172059noreply@blogger.com0